Friday, February 28, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 29.02. 2020.       சனிக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: இன்னா செய்யாமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அறிவினான்  ஆகுவ  துண்டோ   பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை..                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதி காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.  தூதின் இலக்கணம் அறியப்படும் நூல்?

விடை  :  இலக்கண விளக்கம்.
 2. தமிழில் முதல் கலம்பகம் என அறியப்படும் நூல்?
விடை :  நந்திக்கலம்பகம்..                   
3. தமிழர்களின் கருவூலம் என அறியப்படும் நூல்?
விடை : புறநானூறு
4.  கிறிஸ்தவர்களின் களஞ்சியம் என அறியப்படும் நூல்?
 விடை :  தேம்பாவணி.
5.  தமிழரின் இரு கண்கள் என அறியப்படும் நூல்?
விடை    :  தொல்காப்பியம் / திருக்குறள்.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 Good beginning makes a good ending

🌸 நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்
🌸 Good Homer sometimes nods

🌸 ஆனைக்கும் அடி சறுக்கும்


 .இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                                   🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁
வேடன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதைப்பிடித்த வேடன், சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால்  கட்டிப் போட்டிருந்தான். அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர், அதன் மீது இரக்கம் கொண்டார். வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை விலைக்கு வாங்கி, தன் வீட்டிற்குக் கொண்டு சென்று அன்புடன் வளர்த்தார்.

இறக்கைகள் நன்கு வளர்ந்ததும் அதைப் பறந்துபோக அனுமதித்தார். கழுகு பறந்து செல்லும் போது. அதன் பார்வையில் ஒரு முயல் தென்பட்டது. அதை அப்படியே தூக்கி வந்து தன்னை வளர்த்த பெரியவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த நரி, ‘ஏற்கனவே உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்கலாம். இந்த முயலை நீ அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடுயும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். பெரிய வருக்கு நீ முயலைக் கொடுத்தாலும், கொடுக்காமல் இருந்தாலும் அவர் உன்னைப் பிடிக்க வரப்போவதில்லை. எதற்காக  அப்படிச் செய்தாய்’ என கழுகைப் பார்த்துக் கேட்டது.

“அது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை வலைவிரித்துப் பிடிக்கலாம். ஆனால், நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் பெரியவர் காப்பாற்றியுள்ளார். அவரிடம் நான் கொண்டுள்ள நன்றியையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தவே முயலைக் காணிக்கையாகச் செலுத்தினேன். உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்” எனப் பதில் கூறியது கழுகு.

கதையின் நீதி: ஆபத்துக் காலங்களில் உதவி செய்தவர்களை மறக்காமல் நன்றியோடு இருப்பது தான் நல்லவர்களுக்கு அழகு.




இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 டெல்லியில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.
🎯 பொதுத்தேர்வு எழுத மூன்று மணி நேரம்,கேள்வித்தாளை படிப்பதற்கும் 15 நிமிடம் என அமைச்சர் தகவல்.
🎯 பொதுத்தேர்வு முறைகேடுகள் தண்டனை விவரம் வெளியீடு.
🎯 மாநிலங்களவைத் தேர்தல் : தேர்தல் நடத்தும் அதிகாரி நியமனம்.
🎯 PTA  ஆசிரியர்களுக்கான மாத ஊதியத்தை அரசு வழங்கும்.
🎯 பத்திரப் பதிவுக்கு முன்பு நிலங்கள் உட்பிரிவு நடைமுறை என தமிழக அரசு உத்தரவு.
🎯 ஆராய்ச்சி மேம்பாட்டு துறையில் 15% மட்டுமே பெண்கள் என ராம்நாத் கோவிந்த் கவலை.
🎯 அரசு மருத்துவர்களின் பணியிட மாறுதல் உத்தரவு ரத்து.
🎯 கல்வியில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு என மகாராஷ்டிர அரசு முடிவு.
🎯 பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளின் 'பிரீமியம்' மாற்றமில்லை என மத்திய அரசு அறிவிப்பு.
🎯 குரூப் 4 முறைகேடு விவகாரத்தால் புதிய தேர்வு அறிவிப்புகளை வெளியிடுவதில் தாமதம். கலந்தாய்வுக்கு பின் வெளியாகலாம் என தேர்வர்கள் எதிர்பார்ப்பு.
🎯 அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.
🎯 அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் வழங்கும் அரசியல் சட்டம் 21 பிரிவை விவாதிக்க மக்கள் முன்வர வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ பி சாஹி கருத்து.
🎯 சீனாவைத் தாண்டி பிற நாடுகளுக்கும் பரவும் கோவிட்- 19, சர்வதேச பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி.
🎯 பூமியை போன்ற இன்னொரு கிரகம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.
🎯 ஐஎஸ்எல்: இன்று முதல் கட்ட அரையிறுதியில் கோவா- சென்னையின் எஃப்சி மோதல்.
🎯 மகளிர் டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா வெற்றி. இலங்கையுடன் இன்று இந்தியா மோதல்.


TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Coronavirus  Infects global markets, investors dump equities.
 🎯 Tamilnadu single use plastic bag only on paper : high court. Action taken report sought by march 13.
🎯 Software glitch delays salaries for or government staff. Finance department official says the problem will be resolved soon.
🎯 Students get library membership.
🎯 High quashes transfer of government doctors. Judge also rules the doctors do not have the right to go on strike.
🎯 Government notifies draft rules for land pooling scheme. Objective is to make acquisition easy.
🎯 Form guidelines for engaging senior advocates to conduct  SC / ST Act cases.
🎯 IICT ready to help develop COVID - 19 drug.
🎯 President gives nod for delimitation in  NE States. Deferred exercise to be carried out.
🎯 Sensex tracks global markets plunge.
🎯 Farmer's not to be hurt by government.move  to cut crop cover premium : bhutani. Lack of long term consistent data reason for  unsustainable premiums, he says.
🎯 Batsman will have to step up for India to draw level. Ishant out with injury, Umesh likely to come in : newzealand all set to unleash pace power by playing four specialist seamers.
🎯 India has a few class to iron out. Takes on sri lanka in its last group engagement. World cup.




🌸இனிய காலை வணக்கம் ....✍       
         🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼  
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சி மாவட்டம் - 621005
அலைபேசி எண் : 9789334642.
                                   



No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...