பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 28.11.2022. திங்கட்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.தமிழக அரசினால் ‘இயல், இசை, நாடக மன்றம்’ என்ற அமைப்பு எப்பொழுது துவக்கப்பட்டது?
*விடை* : 1955
2.தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் தலைவர்?
*விடை* : முதலமைச்சர்
3.காவேரியாற்றின் மிக நீளமான கிளை நதி எது?
*விடை* : பவானி
4.வைகை ஆறு தோன்றுமிடம்?
*விடை* : அகஸ்தியர் குன்றுகள்
5.தமிழ்நாட்டின் 32-வது மாவட்டமாக திருப்பூர் அறிவிக்கப்பட்ட ஆண்டு?
*விடை* : 2008
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹An artist Lives everywhere
🌹 கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
☘️ All things are difficult before they are easy
☘️ சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
கரடு முரடான மலைப்பாதை... மலைப்பாதையை கரடு முரடு எனும் அடைமொழி சேரக் காரணமாய் கூரிய வளைவுகளும், மேடு பள்ளங்களும்... வளைவிலே இரண்டு வண்டிகள் ஒரே நேரத்தில் பாதையை கடப்பதென்பது மலையிலிருந்து குதிப்பதற்கு சமம்.பேருந்தில் பயணிக்கும்போது, "விழுந்துடுவோமோ..... விழுந்தா அவ்வளவுதான்.....ச்சே..ச்சே...விழாது....." இப்படியெல்லாம் பலவாறு எண்ணங்கள் பயணிகளின் உள்மனதில் 1%விழுக்காடாவது வந்துவிட்டு செல்லும்.அப்படியொரு பாதை..... சரி....சரி....கதைக்கு வந்து விடுகிறேன்.
இந்த மாதிரியான பாதையில் இளைஞன் ஒருவனுக்கு,இரவில் பயணம் செய்யவேண்டிய நிர்பந்தம். மனித வர்க்கத்திற்கே உரித்தான ஒரு வார்த்தைதான் நிர்பந்தம். ஆம்.... காலையில் கூட்டிலுருந்து செல்லும் பறவைக்கு, மாலையில் கூடு திரும்பாமலிருக்கவும், சென்ற இடத்திலேயே தங்கி விடவும் எந்த நிர்பந்தமும் ஏற்படுவதில்லை. இரவிலே தூங்காமல்,பகலைப் போல் சுற்றித்திரிய விலங்குகளுக்கு எந்த நிர்பந்தமும் ஏற்படுவதில்லை.எனவே இந்த சொல் அவைகளுக்கு சொந்தமில்லை.அதற்க்கு சொந்தக்காரன் மனிதன் மட்டுமே.
அப்படி அந்த இளைஞன் செல்லும்போது, திருப்பத்தில் ஏற்பட்ட லேசான தடுமாற்றம்., அவனை பெரிய பாதிப்புக்குள்ளாகியது. "ஆ.....அம்மா" என்று அலறியவனாய் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டவன் மலைப்பாதையில் உருண்டான். உருண்டவன் பாதையின் ஓர தடுப்பைக் கடந்து சருகினான். அத்தனை வேகமாய் சருகும்போதும்.... வேட்டையாடும் புலி நகங்களை பதிப்பதுப்போல் கல்லின் மீதும்,மண்ணின் மீதும் விரல்களை வைத்து பதித்துக் கொண்டே உருண்டான். வாழ்க்கையில் அவன் செய்த அத்தனைப் புண்ணியங்களுக்கும் பலனாக.. கடைசியாக அவனுக்கு கிடைத்தது ஒரு சிறிய மரக்கிளை. போன உயிர் முதல் வானம் வரை சென்று திரும்பியது போல் ஒரு படபடப்பு மனதில்...எங்கிருக்கிறோம்..என்னவாகப் போகிறோம்...என்று யோசித்து பார்க்கவே முடியாத அளவுக்கு மனதிற்கும் ,கண்ணிற்கும் திரையாய் கும்மிருட்டு..திக்...திக்...திக்....இதயத்தின் துடிப்பு தெளிவாக உணர்ந்தான்.
மூன்று ஆடுகளில், பலிகொடுக்கப்பட்ட இரண்டு ஆடுகளின் துடிப்பைக்கண்ட மூன்றாவது ஆட்டின் நிலைமையிலிருந்தான் அவன்.மரண பீதி, இதுவரை கேள்விப்பட்டிருந்த வார்த்தை இப்போது நேரில். காப்பாற்றுவார் யாருமில்லையா? "காப்பாத்துங்க...காப்பாத்துங்க... "அழுகுரலுடன் ஒரு அபயக்குரல்.
திடீரென்று எங்கிருந்தோ ஒரு அசரீரி, "மனிதா பயப்படாதே...நான் உன்னை காப்பாற்றுகிறேன்.நீ பற்றியிருக்கும் மரக்கிளையை விட்டுவிடு".
கடுமையான தாகத்திற்கு தண்ணீரை விஷம் கலந்து கொடுத்ததைப்போல் ஒரு உணர்வு. என்ன ஆனாலும் சரி மரக்கிளையை விட மாட்டேன் என்பதாய் மனதிற்குள் ஒரு சபதம். மரண பயம்.அதிகப் பசி. மயக்கத்தின் உச்ச நிலை.. கீழே விழாமல் தடுத்திருந்தது மரண பயத்தோடு கூடிய பிடிகள். வியர்வையில் குளியல்.... இப்படியும் அப்படியுமாக இரவை விரட்டிக் கொண்டு மெல்ல கதிரவன் தன் காலை பூமியில் பதிக்க தொடங்கியதும்... முக்கால் மயக்கத்தில் கண் திறந்து பார்த்தான் எங்கிருக்கிறோம் என....
கீழே பார்த்தவனுக்கு பெருமகிழ்ச்சியுடன் கூடிய பேரதிர்ச்சி.ஆம்.. அவன் தொங்கிக் கொண்டிருந்த இடத்திற்கும் பாறையாலான ஒரு தளத்திற்கும் ஒரு முழமே இடைவெளி.
விடிந்தது பொழுது மட்டுமல்ல.அவனின் உள்ளத்தின் நம்பிக்கையும்தான்.அசரீரியின் வார்த்தைகளின் உண்மையையும், தன்னுடைய அவநம்பிக்கையினால் ஏற்பட்ட பேரிழப்புகளையும் எண்ணி மனம் நொந்தான்..தன் மீது தானே சினம் கொண்டான்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 காவலர் தேர்வு 67000 பேர் தேர்வு எழுதவில்லை
🎯 ஜி 20 தலைமை பெறும் வாய்ப்பு
🎯 ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, கல்வி உதவித்தொகை ரத்து.
🎯அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் ‘வானவில் மன்றம்’ திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்
🎯தமிழகம் முழுவதும் ரூ.84 கோடியில் 3,808 ஊரக நூலகங்களின் கட்டிடங்கள் புதுப்பிப்பு; புதிய புத்தகங்கள், பர்னிச்சர்கள் வாங்க நடவடிக்கை
🎯அரசு வேலை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம்: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலாகிறது
🎯பசி இல்லாத தமிழகத்தை உருவாக்க அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
🎯குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் பங்கேற்பு
🎯லேசான காய்ச்சல் ஏற்படும்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிருங்கள்: மருத்துவர்களுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்
🎯FIFA WC 2022 | முத்தான நான்கு கோல்: கனடாவை வீழ்த்தியது குரோஷியா
🎯FIFA WC 2022 | கத்தாரில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக ஒலிக்கும் ரசிகர்களின் குரல்
🎯FIFA WC 2022 | ஸ்பெயின் - ஜெர்மனி இடையிலான போட்டி 1-1 என டிரா
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Constable Exam 67000 people did not write the exam
🎯 G20 leadership opportunity
🎯 Cancellation of education scholarships given to students from class I to class VIII.
🎯Vanavil Forum' project to stimulate interest in science and mathematics among government school students: Chief Minister M.K.Stalin will inaugurate the day.
🎯Renovation of buildings of 3,808 rural libraries across Tamil Nadu at a cost of Rs.84 crore; Action to buy new books, furniture
🎯Birth certificate mandatory for government jobs, driving license, voter card: Bill to be tabled in Parliament
🎯Annadana program will be expanded to create a hunger-free Tamil Nadu: Minister PK Shekharbabu interview
🎯The President of Egypt will participate as a special guest in the Republic Day
🎯Avoid antibiotics for mild fever: ICMR guidance for clinicians
🎯FIFA WC 2022 | First four goals: Croatia beat Canada
🎯FIFA WC 2022 | Fans chant in support of Sanju Samson in Qatar
🎯FIFA WC 2022 | The match between Spain and Germany drew 1-1
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment