Sunday, August 28, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயற்பாடுகள் (29/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 29.08.2022.    திங்கட்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: ஒப்புரவு அறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

         ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.மும்பையுடன் சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை

*விடை* : NH:4

2.இரண்டாவது பானிபட் போர் எந்த ஆண்டு நடை பெற்றது?

*விடை* : 1556 AD

3.இந்தியாவில் பயணிகளுக்கான ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு

*விடை* : 1853

4.இந்தியாவின் ரயில்வேயின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

*விடை* : டெல்லி

5.இந்தியாவில் முதல் பயணிகள் இரயில் போக்குவரத்து எந்த இரு இடங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது?

*விடை* : மும்பை- தானே


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼




இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁🍁

வாழ்க்கையில் வெற்றி பெற்ற விஞ்ஞானி

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

கிராமபோனைக் கண்டுபிடித்த விஞ்ஞானி தாமஸ் எடிசனுக்கு ஞாபகசக்தி துளிகூடக்கிடையாதாம் பள்ளியில் படிக்கும்போது அவரை ஆசிரியர்கள் ‘மக்கு, என்று சொல்வார்கள். ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதை அவர் கேட்ட நிமிஷமே மறந்து விடுவாராம். இதனால் ஆசிரியர்களுக்கு பெரிய பிரச்சனையாகி விட்டது. இதை அவர்கள் எடிசனுடைய பெற்றோர்களிடம் சொன்னார்கள். அவர்கள் உடனே டாக்டரைக் கூப்பிட்டு எடிசனுக்கு இருக்கும் குறையைச் சொன்னார்கள். எடிசனை பரிசோதனை செய்த டாக்டர்கள், மூளைக்கோளாறு இருக்கிறது என்று கூறினார்கள். இதனால் பெற்றோர்கள் பெரும் கவலையாகி விட்டது. எடிசன் வாழ்க்கையிலேயே மூன்று மாதம்தான் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். பிறகு அவர் படித்து, கற்றுக்கொண்டதெல்லாம் அவருடைய தாயாரிடம் தான் அவருடைய தாயார் பிள்ளைக்கு இருக்கும் மூளைக் கோளாறை எண்ணி பள்ளிக்கு அனுப்பாமல் தானே

பாடங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பிறகு எடிசன் பல புத்தகங்களைப் படித்து அறிந்தார். விஞ்ஞான ஆராய்ச்சிக்குத் தேவையான படிப்பை படித்து நன்கு கவனம் வைத்துக் கொள்ளப்பழகிக்கொண்டார். எடிசன் பல ஆராய்ச்சிகள் நடத்தலானார். 1887 ம் வருடம் நவம்பர் மாதம் தம் ஆராய்ச்சியின் மூலம் கிராமபோனைக் கண்டுபிடித்தார்.

எடிசன் இளமையில் தான் அப்படியிருந்தார் என்பதில்லை. பெரியவரான பிறகும் கூட அவருக்கு கவனம் சரியாக இருப்பதே இல்லை. ஒரு சமயம் அவர் வரி கட்டுவதற்காக வரி செலுத்தும் அலுகவகத்துக்குச் சென்றிருந்தார். மக்கள் பணம் செலுத்த வரிசையாக நின்றிருந்தனர். எடிசனும் வரிசையில் நின்றார். வெகு நேரத்துக்குப்பின், அவர் பணம் கட்டவேண்டிய இடத்தை அடைந்தார் பணத்தை பெற்றுக்கொண்ட அதிகாரி, அவர் பெயரைக் கேட்டாராம். எடிசனுக்கு அப்போது தம்முடைய பெயரே மறந்து விட்டதாம். அவர் அப்படி தவிப்பதைக் கண்டு பக்கத்தில் இருந்த அவருடைய அடுத்த வீட்டுக்காரர் அவர் பெயரைச் சொன்னாராம் அதன் பிறகுதான் அவருக்குத் தம்முடைய பெயர் தாமஸ் எடிசன் என்பது நினைவுக்கு வந்ததாம்.

எடிசன் எப்பொழுதுமே தம்முடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார். எதையாவது ஒன்றைப்பற்றி அவர் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் சாப்பிடக்கூட கவனமிருக்காது. இப்படித்தான் ஒருசமயம் எடிசன் இரவு முழுவதும் தனது ஆராய்ச்சி சாலையில் வேலை செய்து கொண்டிருந்தார். பொழுது விடிந்ததும் அவர் காலை ஆகாரத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஆகாரம் வர தாமதமாகி விட்டதால் அவர் அப்படியே சோபா ஒன்றில் சாய்ந்து தூங்கிவிட்டார்.

எடிசனுக்கு காலை ஆகாரம் டீ முதலியவை ஒரு தட்டில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவர் தூங்கிக் கொண்டிருந்ததால் வேலைக்காரன் அவரை ஆகாரம் சாப்பிடுவதற்கு எழுப்பவில்லை. அச்சமயம் அங்கிருந்த அவருடைய உதவியாள் ஒருவன் ஆகாரங்களில் சிலவற்றை முதலில் சாப்பிட்டானாம். பிறகு எடிசனை ஏமாற்ற எண்ணி வந்திருந்த ஆகாரம் அத்தனையையும் சாப்பிட்டு விட்டுத் தட்டை காலியாக அவர்முன் வைத்து விட்டானாம்.

சில நிமிஷங்களுக்குப் பிறகு, எடிசன் கண் விழித்து பார்த்தார். எதிரே இருந்த மேஜைமீது ஆகாரத் தட்டு காலியாயிருந்தது. அதை கண்ணுற்ற எடிசன் தாம் ஆகாரங்களை சாப்பிட்டுவிட்டதாகவே எண்ணி விட்டாராம்.

சிறந்த விஞ்ஞானியான எடிசன் இவ்வளவு ஞாபக மறதியாக இருந்தார் என்றால் யாராவது நம்புவார்களா?

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது: ஆறுமுகசாமி அறிக்கை குறித்து ஆலோசனை

🎯விதிகளை மீறி கட்டப்பட்ட 32 மாடி நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் 9 விநாடிகளில் தரைமட்டமானது

🎯"2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என உறுதியளிக்கிறேன்" - பிரதமர் மோடி

🎯இலங்கையில் பட்டினியாக உறங்கும் குழந்தைகள் - யுனிசெப் தெற்காசிய இயக்குநர் வேதனை

🎯ஆசிய கோப்பை | பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா - கொண்டாட்டத்தில் மக்கள்; வாழ்த்திய பிரதமர் மோடி


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯What next: removing 80,000 tonnes of debris of Supertech twin towers in 3 months

🎯Brick by brick, rescued bonded labourers build a new life

🎯Himachal ‘Newtons’ quit corporate jobs to grow apple, look upwards with tech

🎯Data protection bill likely to be presented in Budget Session, says Ashwini Vaishnaw

🎯Pandya’s last-over six lifts India to victory in thriller against Pak
 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...