Monday, August 22, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (23/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 23.08.2022.    செவ்வாய்க்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

         நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.  
.
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.'வருதல்' என்ற தொழிற்பெயரின்  வேர்ச்சொல் ______?

*விடை* : வா

2."கலகல" வென – இலக்கணக் குறிப்பு தருக?

*விடை* : இரட்டைக்கிளவி

3.கிணற்றுத் தவளைப் போல – இவ்வுவமையின் பொருள் யாது?

*விடை* : அறியாமை

4.எந்த செல் 300 முதல் 500 நாட்களில் செல்களை புதுபிக்கின்றன?

*விடை* : கல்லீரல் செல்கள்

5.தொலைபேசிக் கம்பிகள் தயாரிக்க உதவுவது எது?

*விடை* : சிலிகோ வெண்கலம்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Man proposes God disposes
🌹 நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று முடிக்கும்

🌷 Many hands make light work
🌷 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁🍁

*மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இரு நண்பர்கள்…
பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன்.
அறை வாங்கியன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.
விரல்களால் இப்படி எழுதினான்:
“இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்!”
மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள்.
வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள்.
நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள்.
கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. ஆஹா.. புதைகுழியில் சிக்கிக் கொண்டான் அவன்.
நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன்.
உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீதமர்ந்தான். ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி எழுத ஆரம்பித்தான்.
“இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்”
இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்..
“நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏனிப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா?”
நண்பனின் பதில்…
*யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்!”*

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

.🎯மாணவர்களுக்கு இலவச லேப்டாப், ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை - புதுச்சேரி பட்ஜெட் அறிவிப்பு

🎯தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் அரசின் விதிகள் செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

🎯2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு செப்டம்பர் 15 வரை பரிந்துரைக்கப்படுவதாக  ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.

🎯 தமிழ் , உலக மொழிகளுக்கிடையே ஒப்பிட்டாய்வுக்கு தனி இருக்கைகள் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

🎯 தேசிய நோயெதிர்ப்பியல் நிறுவனத்துக்கு புதிய இயக்குநர்

🎯 'விக்ராந்த்' போர்க்கப்பல் செப்டம்பர் - 2 இல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

🎯 க்யூட் தேர்வு நுழைவுச் சீட்டில் முந்தைய தேதி குறிப்பிட்டதால் குழப்பம். பீதியடைய வேண்டாம் என என் டி ஏ அறிவிப்பு.

🎯 இந்திய மாணவர்களின் விசா தாமதம் நடவடிக்கைகள் எடுப்பதாக ஆஸ்திரேலிய உறுதி

🎯சென்னை ஓபன் கோஃல்ப் இன்று தொடக்கம்

🎯அடுத்தடுத்து 2 ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருதை வென்ற சுப்மன் கில்

🎯IND vs ZIM 3rd ODI | வெற்றிக்காக இறுதி வரை போராடிய ஜிம்பாப்வே: 3-0 என தொடரை வென்றது இந்தியா


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯Puducherry CM presents Rs 10,696.61 Cr tax-free budget; laptops for students of standards XI, XII

🎯Chennai Corporation issues orders to stop construction of over 2,000 unauthorised buildings

🎯Form panel to identify temples constructed as per Agamas: Madras HC

🎯Scientists track cause of mystery paddy dwarfing in Punjab and Haryana

🎯China eases visa ban in boost to Indian students

🎯Daily cases of COVID-19 fall below the 10,000 mark

🎯Zimbabwe vs India, 3rd ODI | India beat Zimbabwe by 13 runs, complete 3-0 sweep

🎯Chennai Open golf championship from Tuesday





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...