பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 26.08.2022. வெள்ளிக்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: நாடு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. கவிஞர் பூமணி எந்த நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
*விடை* : 'அஞ்ஞாடி 'என்னும் புதினம் ( 2014)
2. "மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்" - என்னும் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
*விடை* : தமிழ்விடுதூது
3. கவிஞர் சுரதாவின் இயற்பெயர் யாது?
*விடை* : இராசகோபாலன்
4. கம்பரின் காலம் என்ன?
*விடை* : 12-ஆம் நூற்றாண்டு
5. கருப்பு மலர்கள் என்ற நூலின் ஆசிரியர்?
*விடை* : நா. காமராசன்
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
பொன்குடமும் மண்குடமும்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஓர் ஊரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் இருவரும் தோழிகள். அவர்கள் ஒன்றாகவே இருப் பார்கள்.
பள்ளிக்கூடம் போகும்போதும், சந்தைக்குப் போகும்போதும், ஊருணிக்கு நீர் மொண்டுவரச் செல்லும்போதும் இருவரும் ஒன்றாகவேச் செல்வார்கள்.
நீர் மொள்ளச் செல்லும்போது ஒருத்தி பொன்குடம் எடுத்து வருவாள். மற்றொருத்தி மண்குடம் எடுத்து வருவாள். நீர் மொண்ட பின் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வீட்டுக்குத் திரும்பி வருவார்கள்.
ஒருநாள் இருவரும் நீர் தூக்கிக்கொண்டு தத்தம் வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் சாலையோரத்தில் ஒரு கால்வாய் வெட்டிக் கிடந்தது.
அந்தக் கால்வாயைக் கண்டவுடன் ஒருத்தி கேட்டாள்: "தலையில் உள்ள குடத்தோடு இந்தக் கால்வாயைத் தாண்டவேண்டும். உன்னால் முடியுமா?”
அதற்கு மற்றொருத்தி பதில் சொன்னாள்: ‘'என்னால் முடியும். உன்னால்தான் முடியாது.”
"ஏன் முடியாது? வேண்டுமானால் இருவருமே தாண்டிப் பார்த்துவிடுவோம்" என்றாள் முதலில் கேட்டவன்.
இருவரும் அந்தக் கால்வாயைத் தாண்ட அதன் அருகில் சென்றார்கள்.
முதலில் ஒருத்தி தாவினாள். அவள் கால்வாயைத் தாண்டிவிட்டாள். ஆனால் அவள் தலையில் இருந்த பொன்குடம் கீழே தரையில் விழுந்து தண்ணிர் கொட்டிவிட்டது. குடமும் ஒரு பக்கம் நெளிந்துவிட்டது.
தொடர்ந்து தாவிய மற்றொருத்தியும் கால்வாயைத் தாண்டிவிட்டாள். அவள் தலையில் இருந்த மண்குடம் கீழே விழுந்து உடைந்து விட்டது. சுற்றிலும் தண்ணிர் சிந்தியது.
முதல் பெண் நெளிந்துபோன பொன்குடத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் தண்ணிர் மொண்டுவர ஊருணிக்குச் சென்றாள். இரண்டாவது பெண், தாயார் கோபிப்பாளே என்று பயந்து அழுது கொண்டே வெறுங்கையோடு வீட்டுக்குத் திரும்பினாள்.
கருத்துரை : - பொன்குடம் உடைந்தால் பொன்னாகவேயிருக்கும். மண் குடம் உடைந்தால் மண்ணாகிவிடும். உயர்ந்த குணம் படைத்தவர்கள் வறுமையடைந்தாலும் பயனுள்ளவர்களாகவே இருப்பார்கள். இழிந்த குணம் படைத்தவர்கள் வறுமையுற்றால் எவ்விதப் பயனும் அல்லாதவர்களாகி விடுவார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment