Tuesday, October 31, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (01-11-2023)

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 1.11.2022.    புதன்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கல்வி 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.
                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

   ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. சிறுநீரகத்தின் மேற்புறத்தில் அமைந்த சுரப்பியின் பெயர் என்ன?


விடை : அட்ரீனல் சுரப்பி


2. மனித உடலில் தலைமை சுரப்பி என்று அழைக்கப்படும் சுரப்பி எது?


விடை : பிட்யூட்டரி சுரப்பி


3. காலத் தூதுவர்கள் என அழைக்கப்படும் ஹார்மோன்கள் எவை?


விடை : மெலட்டோனின்


4. உடல் வெப்பநிலையை சமநிலையில் பராமரிக்க உதவும் ஹார்மோன் எது?


விடை : தைராய்டு ஹார்மோன்


5. எந்த திரவத்தில் மூளை மிதந்த நிலையில் உள்ளது?


விடை: தண்டுவடத் திரவம்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 A good beginning Makes good ending
🌹 விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.


🌷 A bad day never hath a good night
🌷 முதலில் கோணல் முற்றிலும் கோணல்



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

விட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.


ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.


அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.


குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரும்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பிய்த்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நிறுத்தது.


அப்போது ஒரு அப்பத் துண்டு  பெரிதாக இருந்ததினால் அந்த அப்பத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது  கடித்து விட்டு மீண்டும் போட்டது.


இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.


அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.


ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.


பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.


நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தமிழகத்தில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு நவ.15 வரை கலந்தாய்வு

🎯 பாரம்பரிய மருத்துவ படிப்புகள்: இன்று நிர்வாக இடங்களுக்கு கலந்தாய்வு

🎯பாரதியார் பல்கலை.யில் பிஎச்.டி. படிப்புக்கு நவ.15 வரை விண்ணப்பிக்கலாம்

🎯தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி கையேடு: அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்

🎯தமிழ் சிறப்பு வகுப்புக்கு வரும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு உணவளித்து பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

🎯பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு - இலவச பயிற்சி பெற நவ.10-க்குள் விண்ணப்பிக்கலாம்

🎯 ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் போட்டிகள் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு.

🎯விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் - நடத்துநர் பணியிடங்களுக்கு நவ.19-ல் எழுத்து தேர்வு

🎯 நவம்பர் 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து நியாய விலை கடைகள் இயங்கும்.

🎯அக்டோபரில் 43 சதவீதம் மழை குறைவு: இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

🎯எமிஸ் பதிவேற்ற பணியை இன்று முதல் மேற்கொள்வதில்லை: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

🎯 திருச்சி- காரைக்குடி ரயில் நேரம் மாற்றம்

🎯 தீபாவளிக்கு பிறகு பொது தேர்வு அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

🎯 சர்தார் படேலின் 149 ஆவது பிறந்தநாள் அரசியல் தலைவர்கள் மரியாதை.

🎯தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

🎯சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்தது சென்னை மாநகரம்: ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

🎯காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

🎯நாளை மறுநாள் நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: தமிழக, கர்நாடக அதிகாரிகள் பங்கேற்பு

🎯ரூ.394 கோடியில் கிளாம்பாக்கம் நவீன பேருந்து நிலையம் தயார்: முதல்வர் பங்கேற்கும் விழா மேடையை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு.! ஒட்டுமொத்த பணிகளை விரைவில் முடிக்க உத்தரவு

🎯தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை

🎯இந்தியா 25 ஆண்டில் வளர்ந்த நாடாகும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

🎯தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி: வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

🎯ஆசிய பாரா விளையாட்டில் சாதனை படைத்த ஷீத்தல் தேவிக்கு கார் பரிசு: தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு

🎯வான்கடே மைதானத்தில் சச்சின் சிலை இன்று திறப்பு

🎯“அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி உறுதி; டாப் 4 அணிகளில் இடம் பிடிக்கும்” - பாக். ரசிகர்

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯 Tamil Nadu to conduct counselling for 17 vacant MBBS seats from November 7 to 15

🎯 Tamil Nadu notifies complete ban on manjha threads

🎯New registrar for law varsity

🎯Defying Higher Education secretary instruction, Periyar University conducts interviews for registrar and COE posts

🎯Supreme Court flags possibility of electoral bonds being used to trade favours

🎯India to choose between Bangladesh and Nepal candidates for WHO regional chief

🎯Biden approves largest offshore wind project in U.S. history

🎯China set to build new Sri Lanka refinery, says minister

🎯ICC World Cup | India will want other batters to replicate the prolificacy of Rohit and Kohli

🎯ICC World Cup | We are blessed in a sense that we are in a great space now, says van der Dussen

🎯ICC World Cup | New Zealand and South Africa cross swords in a key clash

🎯Shaheen Shah Afridi fastest Pakistani to reach 100 ODI wickets





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர் 
அரசு  மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

Monday, October 30, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (31-10-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 31/10/2023        செவ்வாய்க்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: நிலையாமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.

.நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.

🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

      நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்

   
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆனணயம் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?

விடை : 1993 அக்டோபர் 12

2.பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு?

விடை : 1757 ஆம் ஆண்டு.

3.எந்த கல்வி கொள்கையானது நமது நாட்டில் ஒரே மாதிரியான கல்வி திட்டத்தை (10 + 2 + 3) அறிமுகபடுத்தியது?

விடை : தேசிய கல்விக் கொள்கை 1986.

4."தென்னிந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தை துவக்கியவர்" என் கருதப்படுபவர் யார்?

விடை : பூலித்தேவர்

5.தக்கோலம் போரில் சோழர்களை வென்று தஞ்சையைக் கைபற்றியது யார்?

விடை : மூன்றாம் கிருஷ்ணர்




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

.🌷 HUMILITY OFTEN GAINS MORE THAN PRIDE
🌷 அடக்கம் ஆயிரம் பொன் தரும்

🌹HUNGER BREAKS STONE WALLS 
🌹 பசி வந்தால் பத்து பறந்து போகும் 



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.

     🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

எண்ணங்கள் ஈடேறும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  ஒரு சின்ன ஊர் . அங்கே ஒரு பள்ளிக்கூடம் . அதிகமாக யாரும் அங்கே படிக்க வருவதில்லை .

பெற்றோர்களுக்கும் அக்கறை இல்லை .
எதோ பள்ளிக்கூடம் என ஒன்று இருப்பதால் ,தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள் அவ்வளவுதான் .
வகுப்புக்கு வந்த ஒரு மாணவன் மிகவும் மந்தமாக உக்கார்ந்திருந்தான் .
ஆசிரியர் அவனை கவனித்தார் .
" என்னப்பா ... இப்படி உக்கார்ந்திருக்கே ... படிப்பில் கவனமில்லையா ...?
" ஐயா ... என் கவனமெல்லாம் எங்க வீட்டுலேயே இருக்கு !"
"அப்படி என்ன உங்க வீட்டுல இருக்கு ?"
" ஒரு பசுமாடு இருக்கு ! "
என்னப்பா சொல்றே
ஐயா .. நேத்து எங்க அப்பா புதுசா ஒரு பசுமாடு வாங்கிட்டு வந்தார் , அதை எங்க வீட்டு வாசல்ல கட்டி போட்டிருக்கார் .
என் நினைவெல்லாம் பசுமாடு மேலேயே இருக்கு
ஆசிரியர் கோபமடைந்தார் , யோசித்தார் ,
தம்பி ! ஒண்ணு செய்
" நான் உனக்கு ஒரு வாரம் லீவு தர்றேன் .. நீ என்ன பண்ற ... நம்ம ஊர் எல்லையில ஒரு மலை இருக்கே .. அங்க ஒரு குகை இருக்கு ... அதுல போய் உக்கார்ந்துக்க ! ஒரு வாரம் பூரா மாட்டை பத்தியே நினை ... பிறகு வா ...!"
" சரி .. சார் ...! என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட்டான் .
ஆசிரியர் நினைத்து கொண்டார்
" ஆசை தீரும் வரையில் அவன் மாட்டை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பான் . பிறகு கொஞ்ச நேரத்திலேயே மறந்து விடுவான் "
ஒரு வாரம் கழிந்தது .
ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார் .
அந்த மாணவன் வெளியே நின்று கொண்டு இருந்தான் .
அவர் அவனிடம்
" என்னப்பா! மாட்டை பத்தி யோசித்து முடிச்சிட்டியா ? இப்போ மாட்டை பத்தின நினைவில்லையே ?
அவன் இல்லை என தலை ஆட்டினான் .
அப்பறம் ஏன் இன்னும் வெளியே நிக்கிறாய் ?
அவன் சொன்னான் " சார் நான் உள்ளே வரலாம்னு தான் நினைக்கிறேன் , ஆனா என் தலைல இருக்கற கொம்பு உள்ள வர முடியாதபடி மேலே இடிச்சிகிட்டு நிக்குது ".
ஆசிரியர் திகைத்து நின்றார் . மாட்டை பற்றியே சிந்தித்து சிந்தித்து , இவன் தான் அதுவாக மாறிவிட்டதாக உணர்கின்றான் .
ஜென் கதையில தியானம் எப்படி செய்யணும் என்பதற்க்காக தியானத்தை பற்றி இப்படி ஒரு கதையை சொல்வதுண்டு .
நாம யாரை பத்தி அடிக்கடி நினைத்து கொண்டு இருக்கிறோமோ , பேசி கொண்டு இருக்கிறோமோ அவங்களோட குணாதிசயம் நமக்கு வந்துரும் , நாம அவங்களா மாறுகிறோம் .
விவேகானந்தர் கூட சொல்லுவர்
" நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் " என்று .


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 தேர்தல் நன்கொடை ஆதாரத்தை அறிய  உரிமை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது

🎯 தமிழகத்துக்கு 2600 கன அடி காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை.

🎯 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி கிடைத்த 10 பேர் கடந்த மூன்று மாதங்களாக வேலை இன்றி அலைந்து வருகின்றனர்.

🎯ரூ. 100 கோடியில் மாணவர்களுக்கு உதவி தொகை டிவிஎஸ் நிறுவனம் அறிவிப்பு.

🎯 கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணம்

🎯 போனஸ், கருணைத்தொகை தகுதியான பணியாளர்கள் விவரம் கோருகிறது கூட்டுறவு துறை

🎯 வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: பார்வையாளராக 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்

🎯 பி டி எஸ் படிப்பு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு

🎯 நிலையான அரசு விரைவான வளர்ச்சி என பிரதமர் மோடி பெருமிதம்

🎯 தகவல் ஆணையங்களில் காலி பணியிடங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு.

🎯 காஸா நகரத்தை நெருங்கியது இஸ்ரேல் ராணுவம். ரஷ்யா : யூதர்களை குறிவைத்து கலவரம்

🎯 பாகிஸ்தான்: ஆப்கான் அகதிகள் நாளை முதல் வெளியேற்றம்.

🎯 அசத்தும் ஆப்கானிஸ்தான் இலங்கையையும் வீழ்த்தியது

🎯 இன்று கடைசி வாய்ப்பு வங்கதேசத்துடன் மோதுகிறது.

🎯 பிரிட்டனில் நடைபெறும் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 3-வது வெற்றியை திங்கள் கிழமை பதிவு செய்தார்.

🎯ஆசிய துப்பாக்கி சுடுதல் அனீஸ்  பன்வாலாவுக்கு வெண்கலம்

🎯ஹாக்கி: இந்தியாவுக்கு ஹாட்ரிக் வெற்றி.

🎯 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு.




TODAY'S ENGLISH NEWS: 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


🎯Cauvery panel asks Karnataka to release 2,600 cusecs for Tamil Nadu

🎯Electoral bonds promote ‘clean money’ donations to political parties, AG tells SC

🎯Quarantine days of PG students’ COVID-19 service must be deducted from bond period, says Madras High Court

🎯Election Commission appoints 10 electoral roll observers for districts in Tamil Nadu

🎯ED summons Arvind Kejriwal in Delhi excise policy case

🎯Joe Biden signs sweeping order to regulate AI in U.S, days before Sunak’s AI safety summit

🎯Score a hundred: Jonathan Trott sets next target for Afghanistan batters

🎯Cricket World Cup 2023 | I’m not sure where you get ‘favourites’ from: Pakistan coach Grant Bradburn

🎯Cricket World Cup 2023 | Pakistan, Bangladesh look to bounce back from a state of despair

🎯Lionel Messi wins record-extending 8th Ballon d'Or, Bonmati takes women's award

🎯Women’s Asian Champions Trophy: India settles Asian Games score with China






இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305.
அலைபேசி எண் : 9789334642.

Sunday, October 29, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (30-10-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 30/10/2023         திங்கட்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: அறிவுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்.

🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

      அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

   
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.X–கதிர் என்பது?

விடை : மின்காந்த அலை

2.புற்றுநோய் செல்களை அழிக்க உதவும் கதிர்வீச்சு?

விடை : பீட்டா கதிர்வீச்சு

3.நரம்பு மண்டலத்தின் அலகு?

விடை : நியூரான்

4.வைட்டமின் B2-வின் வேதிப் பெயர்?

விடை : ரிபோபிளேவின்

5.லோக் சபாவில் மொத்த இடங்கள் எத்தனை?

விடை : 545




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Lucky man needs no counsel

🌷அதிர்ஷ்டக்காரனுக்கு ஆலோசனை தேவை இல்லை. 



🌹The greater the ambition the greater the low
🌹பேராசை பெருநட்டம்.



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.

     🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.
சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.
ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.

நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.
சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.

“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.
சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.
இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.
உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.
சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.
வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.
தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.
கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.
இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.
“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.
உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.
*நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  

இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 தமிழக எல்லைகளில் கண்காணிப்பை தீவிர படுத்த டிஜிபி உத்தரவு.

🎯 காவிரி ஆற்றில் பாலங்கள் வலுவிழக்கும் அபாயம். மணல் அல்ல நிரந்தர தடை விதிக்க வேண்டுகோள்.

🎯 திருச்சியில் புதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்க ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

🎯 போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

🎯 தேசிய கராத்தே போட்டியில் தமிழக அணி சாம்பியன்.

🎯 திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ல் கிராம சபை கூட்டம்.

🎯 கலை, அறிவியல் பாடங்களுக்கு நுழைவுத் தேர்வு வந்தால் இரு மொழி கொள்கைக்கு ஆபத்து என அமைச்சர் பொன்முடி தகவல்

🎯 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி மூப்பு ஊதிய முரண்பாடுகள் குறித்த பரிந்துரைகளை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

🎯 டெங்கு: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி வார்டு.

🎯 விதை பண்ணை அமைக்க 'உழவன் செயலியில்' விண்ணப்பிக்கலாம்.

🎯 சேலம் சென்னை விமான சேவை மீண்டும் தொடக்கம்.

🎯 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தாமதம் புதுவை அரசுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ்.

🎯 13 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு.

🎯 பிரதமர் என்று குஜராத் பயணம் ரூ.5,950 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

🎯 இந்தியா - கஜகஸ்தான் 13 நாள் கூட்டு ராணுவ பயிற்சி.

🎯 சத்தீஸ்கர் முதல் கட்ட தேர்தலில் 46 கோடீஸ்வர வேட்பாளர்கள்.ரூ. 40 கோடி சொத்துடன் ஆம்  ஆத்மி வேட்பாளர் முதலிடம்.

🎯 பாதுகாப்பு படைகள் குறித்து அதிருப்தி: மன்னிப்பு கூறினார் இஸ்ரேல் பிரதமர். ஐ.நா. நிவாரணப் பொருள் கிடங்குகளில் கொள்ளை.

🎯 6 வெற்றிகளுடன் இந்திய ஆதிக்கம். இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

🎯 ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் இலங்கை. இன்று ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.
🎯 எலைட் கோப்பை டென்னிஸ்: பியாட்ரிஸ் மாயா சாம்பியன்.

🎯 29ஆவது ஃபிடே மகளிர் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர். வைஷாலி 4-வது சுற்றில் முன்னாள் சாம்பியனை முறியடித்தார்.




TODAY'S ENGLISH NEWS: 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯T.N. CM Stalin writes to Union Minister Jaishankar to secure release of 37 fishermen from Sri Lankan custody

🎯Over 5,800 have been infected with dengue, says Minister

🎯ED ropes in ISRO, IIT-Kanpur to probe illegal sand mining in Tamil nadu

🎯Government preparing to release Vision India 2047 document

🎯Studies for Chennai’s Third Master Plan to be ready by November, says CMDA

🎯Israel-Hamas war, Day 24 LIVE updates | Gaza receives largest aid shipment as deaths cross 8,000 and Israel widens military offensive

🎯IND vs ENG | India becomes No. 2 in World Cup wins

🎯Cricket World Cup 2023 AFG vs SL | Afghanistan holds edge over Sri Lanka

🎯J&K administration felicitates kin of first Indian woman to win two gold medals in single Asian Para Games











இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி , 
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305.
 
அலைபேசி எண் : 9789334642.

Thursday, October 26, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (27-10-2023)

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 27.10.2023.    வெள்ளிக்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  காலம் அறிதல்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.என்.எச்.47 கீழ்க்காணும் இடங்களை இணைக்கிறது?

விடை: கன்னியாகுமரி- சேலம்.

2.நிலநடுக்கோட்டால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள கண்டம்?

விடை : ஆப்ரிக்கா

3.நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம்

விடை: 12754 கி.மீ

4.இந்தியாவின் காளான் பாறைகள் எங்கு காணப்படுகிறது?

விடை : இராஜஸ்தான்

5.இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாட்டின் சதவீதம்

விடை : 4%


பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Every cloud has a silver lining

🌹 தீமையிலும் நன்மை உண்டு


🌷 Every man is his own doctor

🌷 தன் நோய்க்கு தானே மருந்து

இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
மனமே மாமருந்து 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரு ரயில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது, அப்போது அதில் ஒரு பெரியவர் ஏறினார். தலையில் ஒரு மூட்டையை வைத்திருந்தார்.

மூட்டையை சுமந்துகொண்டே உள்ளே வந்தார். மூட்டையை சுமந்துகொண்டே இருக்கையில் அமர்ந்தார்.

ரயில் புறப்பட்டது. 

இவர் தன் தலையில் இருந்த மூட்டையை இறக்கி கீழே வைகனும்மல்ல? வைக்கவில்லை. 

எதிரில் அமர்ந்திருந்தவர் கேட்டார், ஏங்க மூட்டைய தலை மேலேயே வெச்சிருகீங்க, கீழே இறக்கி வைக்கவேண்டியதுதானே ?? 

வேண்டாங்க பாவம்; தலையில் இருக்கிற மூட்டைய எறக்கி வெச்சா ரயிலுக்கு பாரம் அதிகமாயிடும், நான் தலைலயே வெச்சிருகிறேன் அப்படின்னு அந்த பெரியவர் சொன்னார். 

இந்த மாதிரி ஆட்கள பாத்தா நமக்கு சிரிப்பு தான் வரும். ஏன்னா, ரயில் இப்பவே அந்த மூட்டையையும் சேர்த்துதான் சுமந்துகிட்டு போகுது. அவர் அந்த மூட்டையை தலையில் வெச்சிருந்தாலும் ஒன்னு தான் தரையில் வெச்சிருந்தாலும் ஒன்னு தான். இதனால ரயிலுக்கு எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை.

அதே மாதிரி தான் நம்மோட மனமும், இதுவும் ஒரு தேவை இல்லாத ஒரு சுமை. அனாவசியமா சுமந்த்துகிட்டு இருக்கிறோம். இதையும் கீழே இறக்கி வெச்சிட்டா வாழ்க்கை பிரயாணம் சுகமாக இருக்கும்.

ரயில் பிரயாணம் செய்யும் அந்த பெரியவர் மூட்டையை சுமக்கிறார். வாழ்க்கை பிரயாணம் செய்யும் நாம் மனதை சுமக்கிறோம். இவை இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

மனதை கீழே இறக்கி வெச்சிட்டா பாரம் இல்லாமல் வாழலாம். பறவைகள் மாதிரி பறக்கலாம் குழந்தை மாதிரி கள்ளங்கபடம் இல்லாமல் வாழலாம். இந்த வெளி உலகத்தில் நாம் நிலைபெற்று வேரூன்றி இருக்கனும் அதே சமயம் நம் உள்வெளியில் பாரமில்லாமல் இருக்கனும். அப்படின்னா பறக்கனும், நதியை போல ஓடனும், மிதக்கனும் பயனம் சுகமாக இருக்கும் களைப்பு தெரியாது; கவலை தெரியாது.

ஒரு சீடன் போதி தருமரை நாடி வந்தான். குருவே நீங்கள் என்னை வெறுமையாக இருக்க சொன்னீங்க நான் இப்பொழுது வெறுமையானவன் ஆகிவிட்டேன், இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். 

உடனே அந்த குரு பக்கத்தில் இருந்த ஒரு குச்சிய எடுத்து சீடன் தலையில் தட்டி , போய் அந்த வெற்று தன்மையையும் வீசிவிட்டு வா என்று கூறினார்.

ஒருத்தன், இப்பொ நான் காலியா இருக்கென்னு சொன்னான்னா அவன் காலியா இல்லைனு அர்த்தம், ஏன்னா அதில் இன்னும் “நான்” என்ற சொல்(எண்ணம்) இருக்கின்றது. 

எந்த சிந்த்தனையும் இல்லாமல் இருப்பது கடினம் தான் ஆனாலும் மனிதன் அதனுள் இருக்கும் நுட்டபத்தை புரிஞ்சிகிட்டானா இவ்வளவு தூரம் தூக்கி சுமந்த மனதின் முட்டாள் தனத்தை எண்ணி அவனே சிரிப்பான்.

“ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இறகை போன்ற மனம் வேண்டும்”

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

.🎯 பொதுத்துறை தொழிலாளர்களுக்கு 20% போனஸ்.

🎯 மாவட்டக் கலை திருவிழா போட்டிகள் தொடக்கம்

🎯 சந்திர கிரகணம்: நாளை கோயில்களில் நடை அடைப்பு.

🎯 சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் இணையத்தில் பதிவது அவசியம்.

🎯 இன்று முதல் 4 நாட்களுக்கு 175 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

🎯 தமிழக சுற்றுலா திட்டத்திற்கு ஜப்பான் நாட்டு விருது.

🎯 352 தாழ்தள பேருந்துகளை வாங்க போக்குவரத்து கழகம் முடிவு

🎯 முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு மாவட்ட மருத்துவமனைகளில் பயிற்சி கட்டாயம்.

🎯 நீட் ரத்து கோரி மாணவரிடம் கையொப்பம் அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு.

🎯 சித்தா, யுனானி, ஆயுர்வேத மருத்துவ படிப்புகள்: பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்.

🎯 அக்டோபர் 31 இல் தமிழக அமைச்சரவை கூட்டம்.

🎯 இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.

🎯 37- ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் கோவாவில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

🎯 வேளாண் உற்பத்தியை அதிகரிக்க தரமான விதிகளை பிபிஎஸ்எஸ்எல் நிறுவனம் வழங்கும் அமித்ஷா உறுதி.

🎯 கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு உளவு குற்றச்சாட்டில் கைதான முன்னாள் கடற்படை அதிகாரிகள்.

🎯 காஸாவுக்குள் புகுந்து இஸ்ரேல் பீரங்கி தாக்குதல் அரபு நாடுகள் கண்டனம்.

🎯 தென்னாப்பிரிக்காவுடன் இன்று பல பரிச்சை வெற்றி  நெருக்கடியுடன் களமிறங்கும் பாகிஸ்தான். தோல்வி அடைந்தால் மூட்டை கட்ட வேண்டியதுதான்.

🎯 இலங்கையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி, அரையிறுதி வாய்ப்பை இழக்கிறது நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி.

🎯 சீனாவின் ஹாங்சா நகரில் 4-வது பாரா ஆசிய விளையாட்டு 82 பதக்கங்கள் என்று இந்தியா வரலாற்றுச் சாதனை.

🎯 மகளிர் ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்.

🎯 தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கிச்  சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது.

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 Eight former Navy officers get death penalty in Qatar

🎯 Deepavali bonus for state public sector undertaking workers

🎯 Teachers of aided colleges demand career advancement benefits old pension scheme.

🎯 Webinar on stroke management to be held tomorrow.

🎯 Free model test for TNPSC group 4 exam.

🎯 DMK government has taken all possible steps for the release of Muslim prisoners says IUML.

🎯 North East monsoon study forecasts normal to near normal rain in state.

🎯 Israeli troops carry out ground incursion into gaza

🎯India creates history in Asian Para Games, takes tally to record 82 medals with 2 days left

🎯 Sri Lanka pills on England's misery, leaves its title Defence in tatters

🎯 Pakistan in a must win situation against an  in form South Africa



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர் 
அரசு  மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

Wednesday, October 25, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (26-10-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 26.10.2023.    வியாழக்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  சான்றோண்மை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்.
எந்நலத்து உள்ளதூஉம் அன்று 

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

சான்றோரின்  நலன் எனக் கூறப்படுவது அவர்களின் பண்புகளின் நலமே மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?

விடை: கெப்ளர்

2.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?

விடை: குறிப்பறிதல்

3.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

விடை:15 ஆண்டுகள்

4.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?

விடை: postal index code

5.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?

விடை: 1912

பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷True beauty consists in purity of heart
🌷இதயத்தூய்மையே உண்மை அழகு. 


🌹Beauty without bounty avails not
🌹கருணை இல்லா அழகு பயனற்றது.

இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

பொறுமைக்கு கிடைத்த பரிசு
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து ரொட்டிகளை கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் ரொட்டிக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த ரொட்டியை பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் வாழ்வில் பல நன்மைகளை பெறலாம்.
.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 42% உள்ள அகவிலைப்படி 46% ஆக உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

🎯2,222 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜனவரி 7ல் தேர்வு.. நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!!

🎯பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுவோரில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்; பள்ளிக்கல்வித்துறை அரசாணை..!!

🎯டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

🎯சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’வுக்கு பதில் இனி ‘பாரத்’ - என்சிஇஆர்டி குழு பரிந்துரை

🎯அண்ணா பல்கலை.யில் நடப்பாண்டு 2 தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம்

🎯பல்கலைக்கழங்களை தவறாக வழிநடத்தும் சிண்டிகேட் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

🎯 சேலம் மாவட்டத்திற்கு வரும் 27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.

🎯 மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 55,000 ஆக உயர்வு.

🎯குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை

🎯ஜன.22-ல் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா - அழைப்பிதழ் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி நெகிழ்ச்சி

🎯வங்கதேசத்தை நெருங்கிய 'ஹமூன்'புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை

🎯“பொதுமக்களை முன்னிறுத்துகின்றனர் ஹமாஸ் தீவிரவாதிகள்” - இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர்

🎯இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் | இரு தரப்பும் போரை நிறுத்தி, அமைதி பேச்சுக்கு முன்வர வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

🎯 48 வருட உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறை ஆஸ்திரேலியா உலக சாதனை. 90 ரன்களில் சுருண்ட நெதர்லாந்து: 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா இமாலய வெற்றி

🎯உலகக் கோப்பையில் ஹாட்-ட்ரிக் தோல்வி: முன்னாள் வீரர்களிடம் உதவி கேட்ட பாகிஸ்தான் அணி

🎯ஆசிய பாரா விளையாட்டில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்-46 பிரிவில் இந்தியா 3 பதக்கங்களை வென்று அசத்தல்


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


 🎯 Tamil Nadu government announces 4% Dearness Allowance hike for its employees, teachers

🎯 Tamil Nadu TRB notifies 2222 Teacher vacancies in Tamil Nadu; Eligibility, sub-wise list.

🎯NCERT panel suggests only ‘Bharat’ in textbooks

🎯Governor launches free breast cancer screening initiative

🎯CEO  chairs meeting of political parties.

🎯Northeast monsoon to gain momentum over T.N. in a few days with twin cyclones losing strength

🎯PM Modi to attend inauguration of Ram Temple in Ayodhya on January 22

🎯A month after suspension, India resumes visas for Canadians in some categories

🎯After U.S., U.K., Australia, Five eyes member New Zealand too criticises India on order expelling Canadian diplomats

🎯AUS vs NED | Maxwell puts on a big show, rips the Netherlands apart

🎯Gill and Siraj close in on ODI top spots in ICC rankings

🎯Cricket World Cup 2023 PAK vs AFG | The Chennai crowd comes alive as it laps up a fierce rivalry.

🎯Paralympics champion Sumit Antil breaks world record, leads India's 30-medal haul in Asian Para Games



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர் 
அரசு  மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...