பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 31.01.2023. செவ்வாய்க்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: வினைத்திட்பம்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
🍀🍀🍀🍀🍀
இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவருக்கும் எளியனவாம், சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.480 காகிதங்கள் கொண்ட ஒரு கட்டுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?
விடை: ரீம்
2.சிறந்த இந்திய விளையாட்டுப்
பயிற்சியாளர்களுக்கு என்ன விருது
வழங்கப்படுகிறது?
விடை: துரோணாச்சாரியா விருது
3.சென்னை மாநிலம்' தமிழ்நாடு' என
எப்போது மாற்றப்பட்டது?
விடை:1969
4.வ.உ.சிதம்பரனாருக்கு ' கப்பலோட்டிய
தமிழன்' என்ற பட்டம் கொடுத்தவர் யார்?
விடை:ம.பொ.சி
5.நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின?
விடை: நெபுலாக்கள்
பழமொழி (proverbs ) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹 Every cloud has a silver lining
🌹 தீமையிலும் நன்மை உண்டு
🌷 Every man is his own doctor
🌷 தன் நோய்க்கு தானே மருந்து
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பண்பும் பணிவும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து ஊக்கமுடன் உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
பொறுமையே புத்திசாலித்தனம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு குளத்துக்கு பக்கத்துல ஒரு ஆமையும் இரண்டு அன்னப்பறவையும் இருந்தாங்க. நிறைய நேரம் ஒருத்தருக்கு ஒருத்தர் கதை சொல்லிக்கிட்டே நல்ல நண்பர்களாய் இருந்தார்கள். அப்படியே சில வருடங்கள் போயிடுச்சு, அப்போ ஒரு வருஷம் அங்கு மோசமான வரட்சி ஏற்பட்டது. அப்போது “இந்த குளம் கிட்டத்தட்ட வற்றி போயிடுச்சு தண்ணி இல்லாம நாம எப்படி இங்க வாழுறது” என்று அன்னப் பறவை கேட்டது.
அதற்கு ஆமை “கவலைப்படாதே நண்பா ஒரு வழி கண்டு பிடிக்கலாம்.” என்றது. உடனே மற்றொரு அன்னப் பறவை “ஒரு வழியும் இல்லை நாங்க பறந்து போனாலும் நீ இங்க தான் இருக்கணும், ஏன்னா நீ ரொம்ப மெதுவா நடப்ப இல்ல, அது மட்டும் இல்ல உன்ன நாங்க தனியா விட்டுட்டு போக மாட்டோம்.” என்று சொன்னது.
கொஞ்ச நேரம் யோசித்து விட்டு ஆமை சொன்னது “ஹே! பசங்களா என்கிட்ட ஒரு சூப்பரான ஐடியா இருக்கு, முதலில் நீங்க ரெண்டு பேரும் போயி தண்ணி நிறைய இருக்கிற குளமா பார்த்து தேடிட்டு வாங்க.
அப்படி திரும்பி வரும்போது ஒரு பெரிய குச்சியை கொண்டு வாங்க அந்த குச்சியின் நடுவில நான் பிடிச்சுக்கறேன், நீங்க ரெண்டு பேரும் உங்க காலால குச்சியின் ரெண்டு ஒரத்தையும் புடிச்சுகிட்டு என்னை புது குளத்துக்கு பறந்து கூட்டிட்டு போங்க, நம்ம வாழ இதுதான் ஒரே வழி. இது ஒரு செம்மையான ஐடியா!.” என்றது.
அதை கேட்ட அன்னப் பறவைகள் “இது நல்ல ஆலோசனை தான். ஆனா நாங்க பறக்கும் போது நீ தான் உன் வாயைத் திறக்காம பாத்துக்கணும்.. இல்லன்னா நேரா கீழே விழுந்துவிடுவ.” என்று கூறி அந்த இரண்டு அன்னப்பறவையும் பறந்து போய் நிறைய தண்ணீர் உள்ள ஒரு குளத்தை அவங்களோட புது வீட்டை தேடப் போனாங்க.
அந்த நேரத்துல ஆமை இப்படிப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான ஐடியாவை யோசித்ததை நினைத்தும், வானத்தில் அப்படியே பறந்து போகிறதை நினைத்தும் ரொம்ப பெருமையா இருந்துச்சு. சீக்கிரமாவே அன்னப் றவைகள் ஒரு குளத்தை கண்டுபிடித்து ஒரு பெரிய குச்சியோட ஆமைய பார்க்க வந்தாங்க. ‘இதோ இதுதான் உன் குச்சி பிடிச்சுக்கோ” என்றது அன்னம்.
ஆமை எவ்வளவு வேகமா முடியுமோ அவ்வளவு வேகமா அதோட குட்டி கால்களை நகத்தி தன்னோட வாயால் அந்த குச்சியை புடிச்சுது. அப்போ அன்னப்பறவைகள் பட படனு இறக்கைகளை விரிச்சிட்டு சீக்கிரமா பறக்க ஆரம்பிச்சாங்க. அவங்க மேகத்துக்கு மேல் பறந்து போனாங்க, ஆமையோட ஐடியா சூப்பரா வேலை செய்தது.
“நான் பறக்குறேன்னு என்னாலேயே நம்ப முடியல, இப்படி ஒரு ஐடியாவை யோசிச்ச நான் எவ்ளோ பெரிய புத்திசாலி” என்று ஆமை தன்னை ரொம்ப பெருமையாக நினைத்தது. அவங்க போற வழியில ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தின் மேலே பறக்கும் போது கீழே இருந்த மக்கள் அவங்கள பாக்க ஆரம்பிச்சாங்க.
இரண்டு அன்னப்பறவையும், ஒரு ஆமையும் பறக்குறத பாக்க ரொம்ப அழகா இருந்திச்சி. “ஹே! அங்க பாருங்க அந்த ரெண்டு அன்னபறவையும் ஒரு ஆமைய தூக்கிட்டு போகுது.” கீழே இருக்கிற மக்கள் சொன்னத கேட்டு ஆமை ரொம்ப பெருமை பட்டுச்சு. மக்களுக்கு இது ஆமையோட ஐடியானு தெரியாததுனால ஆமைக்கு கோவம் வந்திச்சு.
“என்ன ஒரு புத்திசாலி பறவைகள் அவங்க ஒரு குளத்திலிருந்து மற்றொரு குளத்திற்கு போறாங்க போல கூட அவங்க ஃபிரண்ட் ஆமையும் கூட்டிட்டு போறாங்க பாருங்க. ஆமா இது யாருடைய ஐடியானு தெரியல, அதை யோசித்த விலங்கு ரொம்ப புத்திசாலி” என்று மக்கள் புகழ்ந்து பேசுறத கேட்ட ஆமையால் கொஞ்சம் கூட பொறுக்க முடியாமல். அதோட வாய திறந்து கத்தி “அது என்னோட ஐடியா” என்று சொல்லிச்சு.
ஆமை, தன்னோட வாய திறக்க கூடாது என்பதை மறந்ததனால் மேல இருந்து ரொம்ப வேகமாக கீழே விழுந்திச்சு. ஆமையோட பொறாமையான குணத்தினால அன்னப்பறவைகள் தங்களோட நண்பனை இழந்திட்டாங்க. அவங்களல எதுவும் பண்ண முடியல. அன்னப் பறவைகள் மட்டும் புது குளத்திற்கு பறந்து போனாங்க.
நீதி: சான்றோர்களைப் போல் அமைதியாக இருக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 ஆசிரியர்கள் ஊதிய விவகாரத்தில் இரண்டு நாட்களில் தேர்வு என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
🎯 தமிழகத்தில் மார்ச் ஏப்ரலில் மாதங்களில் நடைபெற உள்ள பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள தனித்தேர்வர்கள் தக்கலில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.
🎯 பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் தேதி மாற்றம்.
🎯 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழுக்கு விலக்கு அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு பிப்ரவரி 6-ல் விசாரணை.
🎯 இந்திய மருத்துவ படிப்பு இரண்டாம் சுற்று கலந்தாய்வு பிப்ரவரி 6-ந்தேதிக்கு பிறகு நடைபெறும்.
🎯ஜி20 கல்வி செயற்குழு மாநாடு | சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
🎯தமிழக அரசின் ரூ.1,000 உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை - ரூ.44 கோடி கருவூலத்தில் சேர்ப்பு
🎯தமிழகத்தில் 30+ ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
🎯புதுவையில் ஜி20 மாநாட்டில் 17 நாட்டு விஞ்ஞானிகள் கலந்துரையாடல்: இன்று ஆரோவில் செல்கின்றனர்
🎯 தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு.
🎯 கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
🎯அதிக கல்லூரி உள்ள மாநிலம்: தமிழகத்திற்கு ஐந்தாமிடம்
🎯மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை, இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார்.
🎯9, 10வது வந்தே பாரத் ரயில்கள்: பிப்.,10ல் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
🎯டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ஜோகோவிச்
🎯ஐசிபிஎல் கிரிக்கெட் தொடரில் தஞ்சாவூர் சூப்பர் கிங்ஸ் சாம்பியன்
🎯ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்
🎯சர்வதேச கிரிக்கெட் முரளி விஜய் ஓய்வு
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Minister of School Education announced that there will be an examination in two days regarding teachers' salary
🎯 Tomorrow is the last day for individual candidates who are going to write the Plus 2, Plus 1, Class 10 general examination to be held in Tamil Nadu in the months of March and April.
🎯 Plus 1, Plus 2 practical exams date change.
🎯 Petition against the order exempting Tamil from class 10 general examination will be heard on February 6.
🎯 Indian Medical Course Second Round Counseling will be held after 6th February.
🎯G20 Education Working Group Conference | Drones banned in Chennai for 3 days
🎯4.40 lakh people didn't buy Tamil Govt's Pongal gift package including Rs 1,000 - adding Rs 44 crore to the exchequer
🎯Transfer of 30+ IAS Officers in Tamil Nadu
🎯 Scientists from 17 countries discuss at G20 summit in Budvai: Today goes to Auro
🎯 Heavy rain is likely in Tamil Nadu from today for four days.
🎯 Heavy rain warning for 11 districts Kanyakumari, Thoothukudi, Tirunelveli, Ramanathapuram, Sivagangai, Pudukottai, Thanjavur, Tiruvarur, Nagai, Mayiladuthurai, Cuddalore
🎯State with most colleges: Tamil Nadu ranks fifth
🎯 Union Finance Minister Nirmala Sitharaman is scheduled to present the Economic Review for the financial year 2022-23 in the Parliament today.
🎯 9th, 10th Vande Bharat trains: PM Modi to inaugurate on Feb 10
🎯Djokovic topped the tennis rankings
🎯 Thanjavur Super Kings are champions in ICPL cricket series
🎯Ranji Cup Cricket: Quarter Finals Begin Today
🎯International cricketer Murali Vijay retires
.
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment