Thursday, November 30, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் ( 01-12-2023)

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 01.12. 2023.  வெள்ளிக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கல்வி.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து
.                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. உ.வே.சா எத்தனை நூல்களை பதிப்பித்தார்?

விடை  :  87 நூல்கள்.

 2. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது திருக்குறள் என்று கூறியவர்?

விடை :  அரசில் கிழார்.  
                 
3. வெண்கலம் எதனால் ஆன கலப்புலோகம்?

விடை : காப்பர் மற்றும் டின்..

4.  கம்பியில்லா தந்தி கண்டுபிடித்தவர் யார்?

 விடை : குலீல்மோ மார்கோனி.

5.  நெப்போலியன் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும் போர்?

விடை    :  வாட்டர்லூ

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸God helps those who help themselves

🌸 தனக்கு உதவுவோருக்கு உதவுவான் இறைவன்

🌸 God is love

🌸 அன்பே கடவுள்


 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.




 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.
விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.
அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 🎯 சென்னை புறநகர் மாவட்டங்களில் கனமழையால் சாலைகளில் வெள்ளம். வங்கக் கடலில் டிசம்பர் 3-ல் புயல் உருவாகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார்.

🎯 மக்கள் மருந்தகம் எண்ணிக்கை25000 ஆக அதிகரிக்கிறது. திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

🎯 செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மனித தலையீடு இல்லாமல் பதிவுத்துறை சேவை. புதிய ஸ்டார் 3.0 மென்பொருள் குறித்து அமைச்சர் தகவல்

🎯 மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை மாற்று நடவடிக்கை.

🎯 கலைத் திருவிழா போட்டி வெற்றி பெறுபவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு.

🎯 அரியலூர் மாவட்டத்தில் நாளை மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு சிறப்பு முகாம்.

🎯 மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என புதுக்கோட்டை நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

🎯 வினா வங்கி புத்தகம் ஜனவரியில் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.

🎯 பேரவை செயலருக்கு 3 ஆண்டு பணி நீட்டிப்பு . முதன்மைச் செயலாளராக பதிவு உயர்வு

🎯 அதிகாரத்தில் இருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் வலிமையானதாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து.

🎯 தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் ஒரு நாள் போட்டி தொடருக்கு கே எல் ராகுல் கேப்டன். டி 20 தொடரில் சூரியகுமார் யாதவ் இந்திய அணியை வழி நடத்துவார்.

🎯 குஜராத் அணிக்கு வில்லியம்சனை கேப்டனாக நியமித்திருக்கலாம் என டிவில்லியஸ் கருத்து

🎯4_வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல். டி 20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

🎯 நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ அபார சதம். இரண்டாவது இன்னிங்ஸில் வங்க தேசம் 212 ரன்கள் குவிப்பு.

🎯 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முதல் முறையாக தகுதி பெற்ற உகாண்டா.

🎯 தேசிய சீனியர் அட்யா பட்டியா போட்டி தமிழக அணிகளுக்கு வெண்கலம்.





TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

.🎯 Hit job is not our policy says India on US charges

🎯2 electrocuted during heavy rain in Chennai.

🎯 Sambhav coverage area shrinks by over 50% in Trichy district says officials

🎯 Opportunities growing in nuclear energy field scientist tells students

🎯 IMD says cyclone likely in bay, predicts heavy rain in Delta districts till December 4.

🎯 Sand mining case effect: government officials now need Prior nod for producing official documents during enquiry.

🎯 National medical commissions comes to rescue of displaced medical students in Manipur.

🎯 UP Government declains opposition demand for a caste census.

🎯 India set to launch x-ray polarimeter satellite says ISRO

🎯 Gasa truce extend by one day as hostage talks continue

🎯 India has another shot at series win even as Australia looks to stay alive

🎯 Shanto's unbeaten ton  puts Bangladesh in control







🌸இனிய காலை வணக்கம் ....✍     
         
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்  
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
                                   


Wednesday, November 29, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (30-11-2023)

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 30.11.2023.   வியாழக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: மக்கட்பேறு

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

       மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.நீரில் கரையாத பொருள் எது?

*விடை* : கந்தகம்

2.நீரில் கரையாத வாயு எது ?

*விடை* : நைட்ரஜன்

3.பளபளப்புக்கொண்ட அலோகம் ?

*விடை* : அயோடின்

4.உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் ?

*விடை* :  ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

5.இரும்பு துருபிடித்தல் என்பது ?

*விடை* : ஆக்சிஜனேற்றம்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Union is strength
 🌹 ஒற்றுமையே வலிமை


🌷 Unity in diversity
🌷 வேற்றுமையில் ஒற்றுமை



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

திரும்பி வந்த மான்குட்டி 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஒரு காடு. மரத்தடியில் இரண்டு புள்ளிமான்கள் படுத்திருந்தன. அம்மா மான் தன் குட்டியைப் பார்த்து, “நீ எப்போதும் என் கூடவே இருக்கணும் போல. தனியாக எங்கேயும் போய்விடாதே!” என்றது.

“ஏம்மா, தனியாகப் போகக் கூடாதா?”

“நல்லவேளையாக இந்தக் காட்டில் சிங்கம், புலியெல்லாம் இல்லை. இருந்தால், நம்மை அடித்துச் சாப்பிட்டுவிடும். ஆனாலும் வேட்டைக்காரர்களால் எந்த நேரமும் ஆபத்து உண்டு.”

“எப்படி அம்மா?”


“உன்னைப் போல் குட்டியாக இருந்தபோது, நான் ஒரு வேட்டைக்காரனிடம் சிக்கிக்கொண்டு, படாதபாடு பட்டேன்.”


“ஐயோ... அப்புறம், எப்படித் தப்பி வந்தாய்?”


“ஒருநாள் நான் துள்ளிக் குதித்துச் சென்றுகொண்டிருந்தேன். என் கால்கள் அங்கே விரித்து வைத்திருந்த வலையில் சிக்கிக்கொண்டன. வேடன் வந்தான். என்னை வலையிலிருந்து விடுவித்தான். கால்களை நன்றாகக் கட்டித் தூக்கிக்கொண்டு போனான்.”

“எங்கே அம்மா?” என்று பதற்றத்துடன் கேட்டது குட்டி மான்.


“என்னை ஒரு பணக்காரரிடம் விற்றுவிட்டான். அவர் வீட்டில் இருந்த ஒரு பையனும் பெண்ணும் என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து வந்தார்கள். என்னைக் கட்டிப் போட்டார்கள். பிரியமாக இருந்தார்கள். முள்ளங்கி, கேரட், முட்டைகோஸ், தக்காளி, வாழைப்பழம் எல்லாம் கொடுத்தார்கள். நான் எதையுமே சாப்பிடவில்லை. தண்ணீர்கூடக் குடிக்கவில்லை. நான் எதுவுமே சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து வருந்தினார்கள். அப்பாவிடம் என் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள்.

அந்த அப்பாவும் யார் யாரையோ அழைத்து வந்து காட்டினார். என் வாய்க்குள் மூங்கில் குழாயை வைத்து அதன் வழியாகத் தண்ணீரை ஊற்றினார்கள். முள்ளங்கியையும் தக்காளியையும் நன்றாக அரைத்துத் தண்ணீரில் கலந்து பலவந்தமாக வாய்க்குள் செலுத்தினார்கள். அதனால், நான் சாகாமல் இருந்தேன். ஆனாலும் உடம்பு இளைத்தது. பத்து நாட்கள் இப்படிச் செய்து பார்த்தார்கள். பத்தாம் நாள் நான் படுத்துவிட்டேன். என் நிலைமையைப் பார்த்த அந்தப் பெண் குழந்தை, ‘அப்பா, நாங்கள் சந்தோஷமாக இருக்கத்தானே இதை வாங்கினீங்க? பாவம், இதற்கு உடம்பு சரியில்லை. செத்துப்போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. காட்டில் விட்டு விடலாம்’ என்றாள். அன்று மாலையே ஒரு வண்டியில் என்னை ஏற்றி இந்தக் காட்டிலே கொண்டுவந்து விட்டுவிட்டார்கள்.”

அம்மா மான் சொன்னதைக் கேட்டதும், “பங்களா, தோட்டம், அன்பான பிள்ளைகள், தின்பதற்கு நிறைய காய்கறி, பழங்கள்... இவ்வளவு இருந்தும் இங்கே வந்துவிட்டாயே?” என்றது குட்டி மான்.

“என்ன இருந்தால் என்ன? என் அம்மா, அப்பா, சிநேகிதர்கள் எல்லாரையும் பிரிந்து இருக்க முடிய வில்லையே! எப்போதும் என்னை அங்கே கட்டிப் போட்டே வைத்தார்கள். சுதந்திரமாகத் துள்ளித் திரிய முடியவில்லை. கேவலமான வாழ்க்கை.”


இப்படி அம்மா மானும் குட்டி மானும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தன. ‘நானாக இருந்தால், திரும்பியே வந்திருக்க மாட்டேன். இவ்வளவு வசதிகள் இருந்தும், இந்த அம்மா ஏன்தான் திரும்பி வந்ததோ?’ என்று குட்டி மான் நினைத்தது. ஒருநாள் இரவு நேரம். யாருக்கும் தெரியாமல் குட்டி மான் புறப்பட்டது. காட்டின் எல்லைக்கு வந்துவிட்டது. ‘விடிவதற்குள் மனிதர்கள் வசிக்கும் ஊருக்குள் போக வேண்டும். பங்களா ஒன்றுக்குள் புகுந்துகொள்ள வேண்டும். விடிந்ததும், அந்த வீட்டுக் குழந்தைகள் என்னைப் பார்ப்பார்கள். கட்டி அணைப்பார்கள். நிறைய தின்னத் தருவார்கள்’ என்று நினைத்தது.

அப்போது ஒரு முயல் ஓடி வந்தது. அதைப் பார்த்ததும் குட்டி மான், “முயலண்ணே, எங்கிருந்து ஓடி வருகிறாய்?” என்று கேட்டது.

“சிறிது தொலைவில் உள்ள நகரத்திலிருந்துதான். என்னையும் இன்னொரு முயலையும் வேடன் பிடித்துச் சென்று, பணக்காரர் வீட்டில் விற்றுவிட்டான். ஒரு மாதம் சந்தோஷமாக வளர்ந்தோம். அந்த வீட்டுக் குழந்தை உமா என்னிடம் அன்பாக இருந்தாள். வெளியூரிலிருந்து உறவினர்கள் வந்தார்கள். அவர்களுக்குத் தடபுடலாக விருந்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. சமையல்காரர் எங்கள் அருகே வந்தார். என்னைப் பிடித்துத் தூக்கிப் பார்த்தார். பிறகு என்னோடு இருந்ததே, அந்த முயலையும் தூக்கிப் பார்த்தார். என்னைவிட அது கனமாக இருக்கிறது என்று அதைத் தூக்கிக்கொண்டு சமைக்கப் போய்விட்டார். என் உடம்பு நடுங்கியது. தப்பிக்க நினைத்தேன். ஆனாலும், உமாவைப் பிரிய மனம் வரவில்லை.

இன்று அதிகாலை உமா என்னிடம் வந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். பிறகு என்னைத் தூக்கிக் கொண்டு வேகமாக நடந்தாள். இந்தக் காடு தெரிந்ததும் கலங்கிய கண்களுடன், ‘ஓடு, ஓடு’ என்று அனுப்பி வைத்தாள். எனக்கு அன்பான உமாவைப் பிரிய மனம் இல்லை. உயிரைக் கொடுக்கவும் மனம் இல்லை. என்ன செய்வது?”

“உண்மையா?”

“பின்னே, நான் பொய்யா சொல்கிறேன்? நம்மைப் போன்ற பிராணிகளை மனிதர்களில் பலர் பிரியமாகவும் வளர்ப்பார்கள்; பிரியமாகவும் சாப்பிடுவார்கள்.” ‘அம்மா பேச்சை மீறிச் சென்றிருந்தால், நம் உயிருக்கும் ஆபத்துதான்!’ என்று நினைத்துக் கொண்டே ஓட்டம் பிடித்தது குட்டி மான்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இந்து தமிழ் திசை நாளிதழ் செய்திகள்:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯  தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த பிரதமரிடம் 41 தொழிலாளர்களும் நன்றி தெரிவித்தனர். சுரங்க பாதையில் இருந்து மீட்கப்பட்ட அனைவரும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

🎯 தெலுங்கானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் 119 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது.

🎯 வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக டிசம்பர் 2, 3-ல் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

🎯 புவியில் மற்றும் சுரங்கத் துறையை அதிகாரிகள் 49 பேர் இடம் மாற்றம்.

🎯 நாட்டுப்புற கலை பயிற்சி மையங்களில் டிசம்பர் 1 முதல் மாணவர் சேர்க்கை.

🎯 அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் புதிய நடைமுறை நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலாகிறது.

🎯 பி சி, எம் பி சி கல்லூரி மாணவர்களுக்கு ரூ 12 கோடியில் 5 விடுதிகள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

🎯 தமிழகத்தில் சிறு நடுத்தர நூற்பாலைகள் மூடப்பட்டதால் 1.50 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

🎯 விவசாய பயன்பாட்டுக்காக சுய உதவி குழு பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி வழங்கும் திட்டம் பிரதமர் மோடி என்று தொடங்குகிறார்.

🎯 உலக கோடீஸ்வரர் பட்டியல் 19 ஆவது இடத்தில் அதானி.

🎯ரூ 2000 மேல் டிஜிட்டல் பணப்பரிவாத்தினை புதிய கட்டுப்பாடு விதிக்க திட்டம்.

🎯 பனிப்பொழிவால் மேக்ஸ்வெல்லை கட்டுப்படுத்த முடியாமல் போனது என சொல்கிறார் சூரியகுமார் யாதவ்

🎯 வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் சதம் விலாசல்.

🎯 விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழக அணி பரோடாவை 38 ரன்கள் வித்தியாசத்தில் உயர்த்தி ஹாட்ரிக்  வெற்றியை பதிவு செய்தது

🎯 இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீட்டிப்பு.

🎯 சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் தோல்வி.


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
The Hindu newspaper-Thursday November 30
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 🎯 U.S blames Indian official for plot against pannun

🎯 Thirunallar gears up for 'sanii peyarchi' on December 20

🎯 Book fair draws school and college students in droves at Trichy

🎯 Water level in mettur dam stands at 66 feet.

🎯 Parents seek action against teacher for 'beating student' for scoring no marks.

🎯 Telangana goes to polls today

🎯 Free food grain scheme to continue for five more years.

🎯 Centre to provide drones to 15000 women's groups for use in agriculture.

🎯 Workers in AIIMS all undergoing check up

🎯 On final day the case fire, mediators seek extension of Israel Hamas deal.

🎯 Dravid and co.reappointed for another term.

🎯IND vs AUS T20Is | Ruturaj Gaikwad — racking up the runs in true classical style, with a touch of artistry

🎯ISL-10 | Honours even as Blasters and Chennaiyin play out a six-goal thriller

🎯 Tamil Nadu beats Baroda in a low scoring encounter.

🎯 New Zealand trials Bangladesh despite Williamson's century




இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

Monday, November 27, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (28-11-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 28/11/2023         செவ்வாய்க்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: ஒப்புரவு அறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.


🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
.       ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்தற்கு.

   
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில்  காங்கிரஸின் மிதவாதத் தலைவர் என குறிப்பிடப்படுபவர் யார்?

விடை : கோபால கிருஷ்ண கோகலே

2.‘இந்தியாவின் மகாசாசனம்” என்று அழைக்கப்படுவது எது?

விடை : பகுதி III

3.பேச்சுரிமை மற்றும் கருத்து வெளியிடும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, அமைப்பை உருவாக்கும் உரிமை ஆகிய உரிமைகள் எந்த சரத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது?

விடை : சரத்து 19

4.கல்வியுரிமையானது ஒரு அடிப்படை உரிமையாக ___வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.?

விடை : 86-வது

5.குடவோலை முறை பற்றிய விவரங்கள் கொண்ட கல்வெட்டு எந்த இடத்தில் உள்ளது?

விடை : உத்திரமேரூர்




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 A little learning is a dangerous thing
🌷 அரைகுறை படிப்பு ஆபத்தானது

🌹 A little stream will run a light mill.
🌹 சிறு துரும்பும் பல் குத்த உதவும்.



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.

     🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

 *தைரியமும் தன்னம்பிக்கையும் தான் வாழ்க்கைக்கு உரம்*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  500 ரூபாய்


200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி

” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.


... கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.


பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி

அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து

“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.

அனைவரும் கையைத் தூக்கினர்.


அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி

“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்

அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.


அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய் தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்

அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,

தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .

நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.


இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும்.

அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு

தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.

ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க


    இன்றைய முக்கிய செய்திகள்
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


    🎯 சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி சிங் சிலை திறப்பு. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வி. பி .சிங் மனைவி சீதா குமாரி மகன் அஜயா சிங், உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் பங்கேற்றனர்.

    🎯 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு விண்ணப்பிக்கும் நாள் டிசம்பர் 7 வரை நீட்டிப்பு.

    🎯 அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்கக் கடலில் டிசம்பர் 1ஆம் தேதி புயலாக வலுப்பெறும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்.

    🎯 பஞ்சபூர். ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் தரை தளத்தில் ஏ.சி அமைக்க அரசுக்கு கருத்துரு.2 எஸ்க லேட்டர்கள்,3 லிப்ட்டுகள் அமைக்கவும் திட்டம்.

    🎯 பெரம்பலூர் எறையூரில் காலனி தொழிற்சாலை இன்று தொடக்கம். காணொளி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

    🎯 புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் பழ மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்.

    🎯 வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கத்துக்காக 15. 33 லட்சம் பேர் விண்ணப்பம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு தகவல்

    🎯 நாடாளுமன்ற கூட்டத்தொடரை சமூகமாக நடத்த டிசம்பர் 2-ல் அனைத்துக் கட்சி கூட்டம் என மத்திய அரசு அழைப்பு.

    🎯டிசம்பர் முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் மலேசியா செல்லலாம்.

    🎯 உத்ரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் 41 பேரை மீட்க'எலி வளை'தொழிலாளர்கள் தீவிர முயற்சி. 36 மணி நேரத்தில் மீட்க முடியும் என நம்பிக்கை.

    🎯 சீனாவில் புதிய வைரஸ்  பாதிப்பு அதிகரிப்பு. நுரையீரல், சுவாச பாதிப்பை கண்காணிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

    🎯 டேவிஸ்கோப்பை டென்னிஸ் தொடர் 47 வருடங்களுக்கு பிறகு பட்டம் வென்றது இத்தாலி.

    🎯 ஹாக்கியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது ஹரியானா. பட்டம் வெல்வதற்கு பஞ்சாப் அணியுடன் இன்று பலப்பரீட்சை.

    🎯3-வது டி 20 யில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

    🎯 2004 ஆம் ஆண்டு டிசம்பர் டி20 உலக கோப்பையில் இந்தியா கடும் போட்டியாளராக இருக்கும் என சொல்கிறார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.





    TODAY'S ENGLISH NEWS: 

    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    🎯 Manual drilling on to reach stuck workers.

    🎯 Chief minister reiterates demand for caste census in Tamilnadu.

    🎯 Trichy- Dindigul National Highway winding work reaches final stage.

    🎯 Thiruvarur- Karaikudi railway line electrification likely to be completed by December 2024

    🎯 Aavins milk sales in Chennai have crossed 15 lakh letters a day: Minister.

    🎯 India has charted space road map for up to 2047, ses chandrayaan 3 project chandrayaan-3 project chief.

    🎯IND vs AUS third T20I | Upbeat India will be keen to seal the series straightaway

    🎯India will be serious challenger for 2024 T20 World Cup title: Ravi Shastri

    🎯Hockey Nationals | Haryana to clash with Punjab in the final

    🎯Indian Premier League 2024 | Green signal for Hardik’s Mumbai Indians move










    இனிய காலை வணக்கம் ....✍       
               
    இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
    அரசு  மேல்நிலைப்பள்ளி
    கோவில்பட்டி , 
    திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305
     
    அலைபேசி எண் : 9789334642.

    Sunday, November 26, 2023

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (27-11-2023)

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

    💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
    நாள் : 27.11.20. திங்கள்கிழமை.
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      திருக்குறள்: அதிகாரம்: வாய்மை
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
    🌷🌷🌷🌷🌷

    உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
    உள்ளத்து ளெல்லாம் உளன்.
                                                                                                                                                                                                                     
    🌸பொருள்:
    🍀🍀🍀🍀🍀

    ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
       

    🌸 பொதுஅறிவு:
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    1.. "தண்ணீர் தண்ணீர்" எனும் நாடக நூலின் ஆசிரியர் யார்?

    *விடை* : கோமல் சுவாமிநாதன்

    2. கம்பராமாயணத்தில் உத்தரகாண்டத்தைப் பாடியவர் யார்?

    *விடை* : ஒட்டக்கூத்தர்

    3. "ஆத்திச்சூடி வெண்பா" நூலை இயற்றியவர் யார்?

    *விடை* : அசலாம்பிகையார்

    4. "பராபரக் கண்ணி" - பாடியவர் யார்?

    *விடை* : தாயுமாணவர்

    5. "புத்தரது ஆதிவேதம்" - என்ற நூலை எழுதியவர் யார்?

    *விடை* : அயோத்தி தாசர்


    பழமொழிகள் (proverbs) :
    🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

    🌹 All covt, all loss
    🌹பேராசை பெரு நஷ்டம்

    🌷 Art is long and life is short
    🌷 கல்வி கரையில, கற்பவை நாள் சில




     இரண்டொழுக்கப் பண்பாடு:
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
     🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
    " உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
    .



     நீதிக்கதை:
    🍁🍁🍁🍁🍁🍁

    கோடாரி உத்தி


    மரம் வெட்டும் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி அந்த நிறுவனத்தின் முதலாளியைப் பார்க்கப் போனான். ""என்ன வேண்டும்?'' என்று அவர் கேட்டார். ""எனக்கு நியாயம் வேண்டும்'' என்றான் தொழிலாளி. ""ஏன் உனக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?'' என முதலாளி கேட்டார். ""ஆமாம். 5 ஆண்டுகளாக நான் இங்கே மரம் வெட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் வாங்கும் சம்பளத்தைவிட 2 மடங்கு சம்பளத்தை 6 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு தொழிலாளிக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இது என்ன நியாயம்?'' என்று கேட்டான். ""அவன் ஒரு நாளில் நிறைய மரம் வெட்டுகிறான். உன்னால் அப்படி வெட்ட முடியவில்லை. நாங்கள் வேலைத் திறத்தையே பார்க்கிறோம். வேலை செய்த ஆண்டுகளை அல்ல. நீயும் நிறைய மரம் வெட்டு. சம்பளம் தருகிறோம்'' என்றார் முதலாளி. ""எப்படி நிறைய மரம் வெட்டுவது? என்ன முயன்றாலும் முடியவில்லையே'' என்றான் தொழிலாளி. ""நீ புதிதாக வந்த தொழிலாளியைப் பார். எப்படி அதிக மரம் வெட்டுவது என்று அவனை கேள்'' என்றார் முதலாளி. முதலாளியின் ஆலோசனையை ஏற்று அந்த பழைய தொழிலாளி, புதிய முதலாளியை சந்தித்தான். என்னால் அதிக மரங்களை வெட்ட முடியவில்லை. உன்னால் எப்படி முடிகிறது? அந்த ரகசியத்தை எனக்குச் சொல்வாயா? என்று பழைய தொழிலாளி கேட்டான். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மரத்தை வெட்டிய பிறகும் நான் 2 நிமிடம் வேலையை நிறுத்துகிறேன். அப்போது மரம் வெட்டும் கோடாரியை நான் கூர்மைப்படுத்திக் கொள்கிறேன். அதற்குப் பின் அடுத்த மரத்தை வெட்டப் போகிறேன் என்று பதில் சொன்னான் புதிய தொழிலாளி. பழைய தொழிலாளியும் அப்படியே செய்தான். நிறைய மரங்களை வெட்டினான். நிறைய சம்பளம் பெற்றான்.

    நீதி: எந்தத் தொழிலை நீங்கள் செய்கிறீர்களோ அதற்காக புதிய உத்திகளுடன் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இன்றைய முக்கிய செய்திகள் :
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🎯 உத்ரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் 41 பேரை மீட்க களம் இறங்கியது ராணுவம். பக்கவாட்டில் தோண்டும் ஆகர் இயந்திரம் பழுந்தடைந்ததால், 86 மீட்டர் ஆழத்துக்கு செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கியுள்ளது.

    🎯 தேர்வை ரத்து செய்ய முடியாது என யார் கூறினாலும் மக்கள் ஆதரவுடன் நீட் விலக்கு நிறைவேறியே தீரும் என மருத்துவர் சங்க மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் உறுதி.

    🎯 தமிழக காவல்துறையில் புதிதாக தொடங்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவுக்கான போலீசாரை தேர்வு செய்யும் பணி தீவிரம்.

    🎯 தமிழகம் முழுவதும் விதி மீறிய வாகனங்களிடம் ஒரே நாளில்  2.39 கோடி அபராதம் வசூல்

    🎯 யாத்திரி சேவை அனுமந்த் திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்களில் உலகத் தரத்தில் வசதி செய்ய  ரயில்வே நிர்வாகம் முடிவு

    🎯 திருச்சியில் நேற்று நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 60 இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு சான்றிதழ்.

    🎯 தமிழக கலாச்சாரத்தை அறிந்து கொள்ள திருச்சி ஐஐஎம் -க்கு ராஜஸ்தான் மாணவர்கள் வருகை.

    🎯 மாநில கல்விக் கொள்கையை விரைந்து வெளியிட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்.

    🎯 சென்னையில் இன்று வி பி சிங் சிலை திறப்பு.

    🎯 திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம்.

    🎯 சீனாவில் பரவும் நிமோனியா மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர கடிதம்.

    🎯 புதுடில்லியில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நேற்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கருக்கு சிலை.

    🎯 இந்தியாவில் விற்பனையாகவும் செல்போன்களில் 99.2% உள்நாட்டில் தயாரானவை என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்.

    🎯 சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி நீடிக்கிறார். குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா தக்கவைப்பு.

    🎯 ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20.யஷஸ்வி, ருதுராஜ், இஷான் அரை சதம்.

    🎯 வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த ஷமி என ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம்.

    🎯 அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது.

    TODAY'S ENGLISH NEWS:
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    🎯 On day 15 at silkyara, rescuers set a 100- hour vertical drilling target.

    🎯 Supreme court has always acted as 'people's court : Chief justice of India on constitution day.

    🎯 Centre asks States to watch cases of respiratory illness.

    🎯 Work on road along kudamuriti from panjapur split into the three packages.

    🎯 More areas in mayiladuthurai to get underground drains.

    🎯 Corporation all set to relay roads in Central Bus stand Trichy.

    🎯40 lakh devotees visit Tiruvannamalai to get a glimpse of maha deepam.

    🎯 Will oppose next too, on the lines of NEET, says Stalin.

    🎯 In two months, families of 30 diseased persons agreed to organ donation in state.

    🎯 First  toll booth in Idukki to be opened today

    🎯 President murmu calls for all- India judicial service.

    🎯 Hamas releases third group of hostages as part of truce

    🎯 India's batting might proves too strong for Australia

    🎯 Gujarat Titans retains Hardik for now, names him skipper

    🎯Dinner twice downs Djokovic ;Italy in final

    🎯 Championship moves towards business end.





    இனிய காலை வணக்கம் ....✍       
               
    இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
    அரசு  மேல்நிலைப்பள்ளி
    கோவில்பட்டி 
    திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
    அலைபேசி எண் : 9789334642.

    Wednesday, November 22, 2023

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (23-11-2023)

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

    💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮

    நாள் : 23.11. 2023.       வியாழக்கிழமை.
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      திருக்குறள்: அதிகாரம்: கல்வி.
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக
    .     
                                                                                                                                                                                                                                       
    🌸பொருள்:
    🍀🍀🍀🍀🍀

    கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
       
    🌸 பொதுஅறிவு:
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    1. முதலாம் உலகப் போர் நடைபெற்ற ஆண்டு?

    விடை  :  1914 முதல் 1918 வரை.

     2. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற ஆண்டு?

    விடை : 1939 முதல் 1945 வரை..       
                
    3. தேசிய சமதர்மவாதக் கட்சியை நிறுவியவர்?

    விடை : ஹிட்லர்.

    4. ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்தியர்?

     விடை : பூலித்தேவர்.

    5. முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?

    விடை    : 1930 நவம்பர் .

    பழமொழிகள் (proverbs) :
    🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

    🌸The pen is mightier than the sword

    🌸 பேனாவின் முனை வாள் முனையிலும் வலிமையானது
     🌸 Take time by the fore lock

    🌸 காற்றுள்ள போதே தூற்றிக் கொள் .



     இரண்டொழுக்கப் பண்பாடு:
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
     🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
    " உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.




     நீதிக்கதை:
    🍁🍁🍁🍁🍁🍁
    ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.
    நீதி : மனதில் உள்ள பயத்தை நீக்குதல் வேண்டும்.
    ​​​



    இன்றைய முக்கிய செய்திகள் :
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🎯 உள்ளாட்சி அமைப்புகளில் ரூ. 929 கோடியில் பணிகள் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

    🎯 திருச்சியில் இன்று தொடங்கும் புத்தகத் திருவிழா.

    🎯 நவம்பர் 26 இல் புதிய புயல் சின்னம் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

    🎯 பருவ மழை நோய்த் தொற்றுகள்: தயார் நிலையில் சுகாதார குழுக்கள் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

    🎯 நவம்பர் 25, 26 இல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

    🎯 பள்ளிகளில் 'பிராட் பேண்ட்': கல்வித்துறை அறிவுறுத்தல்.

    🎯 இஸ்ரேல்- ஹமாஸ் போர் அண்டை நாடுகளுக்கு பரவி விடக்கூடாது என பிரதமர் மோடி வலியுறுத்தல்.

    🎯 நீட் தேர்வு தகுதி பாடத்திட்டங்கள் என் எம் சி மாற்றியமைப்பு

    🎯 நெட் தேர்வு பாடத்திட்டத்தை புதுப்பிக்க யுஜிசி முடிவு.

    🎯 கனமழை உதகை மலை ரயில் நவம்பர் 25ஆம் தேதி வரை ரத்து.

    🎯 கன்னடா நாட்டவருக்கான இ-விசா சேவை மீண்டும் தொடக்கம்.

    🎯 இன்று முதல் டி20 இளவீரர்களுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா ‌.

    🎯 அல்டிமேட் கோகோ 145 வீரர்கள் ஏலம்.

    🎯 தேசிய ஆடவர் ஹாக்கி: குஜராத்தை வீழ்த்தியது சத்தீஸ்கர்

    🎯 2023 ஆசிய பாரா வில்வத்தைச் சாம்பியன்ஷிப் ஒன்பது பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

    🎯 தேசிய ஸ்குவாஷ் இறுதியில் அபய், தன்வி.







    TODAY'S ENGLISH NEWS: 
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    🎯 In local bodies Rs. 929 crore works ordered by Chief Minister Stalin.

    🎯 Book festival starts today in Trichy.

    🎯 New storm symbol on November 26, Tamil Nadu is likely to receive rain for three days, according to the Chennai Meteorological Department.

    🎯 Monsoon Epidemics: Public Health Instruction as Health Teams on Preparedness.

    🎯 Voter List Special Camp on November 25, 26

    🎯 'Broadband' in Schools: Education Instruction.

    🎯 PM Modi insists that Israel-Hamas war should not spread to neighboring countries.

    🎯 NEET Eligibility Syllabus NMC Modification

    🎯 UGC decision to update NET exam syllabus.

    🎯 Heavy rain Utagai Hill train canceled till 25th November.

    🎯 E-Visa service for Kannada nationals re-launched.

    🎯 India will face Australia with T20 youth players from today.

    🎯 Ultimate Coco 145 Player Auction.

    🎯 National Men's Hockey: Chhattisgarh defeated Gujarat

    🎯 India tops 2023 Asian Para Archery Championship with nine medals

    🎯 Abhay, Dhanvi in national squash final.










    🌸இனிய காலை வணக்கம் ....✍       
               
    இரா . மணிகண்டன் முதுகலை தமிழாசிரியர்
    அரசு மேல்நிலைப்பள்ளி
    கோவில்பட்டி
    திருச்சி மாவட்டம் - 621305
    அலைபேசி எண் : 9789334642.
                                       


    Tuesday, November 21, 2023

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-11-2023)

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

    💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
    நாள் : 22-11- 2023.      புதன்கிழமை
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
    திருக்குறள்: அதிகாரம்:  பொறையுடைமை
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

    நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
    போற்றி யொழுகப் படும்
    .                                                                                                                                                                                                                              🌸பொருள்:
    🍀🍀🍀🍀🍀🍀

    நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், ஒருமையை போற்றி ஒழுக வேண்டும்.
       
    🌸 பொதுஅறிவு:
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    1.  சிறுநீரக குழாய்கள்..................... என்று அழைக்கப்படுகின்றன?

    விடை  :  நெப்ரான்

    2.  காகித தொழிலில் மரக்கூழைவெளுக்கப் பயன்படுவது?

    விடை :    சலவைத்தூள்.      
                       
    3. பெட்ரோலியத்தில் பெருமளவு காணப்படுவது?

    விடை  : அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள்

    4.  தமிழ்நாட்டின் முதன்மையான பயிர்?

     விடை   : பருத்தி

    5. இந்தியாவில் ஆட்சி மொழியாக உள்ள மொழிகள்?

    விடை    :  18.

    பழமொழிகள் (proverbs) :
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    🌸Beauty is but skin deep

    🌸 புற அழகு அழகல்ல, அக அழகே அழகு

    🌸 Bend the twig, bend the tree

    🌸 ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?



    இரண்டொழுக்கப் பண்பாடு:
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 கல்வி, கேள்வி இரண்டுமே மனிதனை நல்வழிப்படுத்தும்  என்பதை நான் அறிவேன்.                                                   
    🌸 எனவே எப்பொழுதும் கற்றலிலும் சான்றோர் அறிவுரையைக் கேட்ட லிலும்  முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் தகுதியை உயர்த்திக் கொள்வேன்.



     நீதிக்கதை:
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    சுடரொளி ஒரு பள்ளி  பருவ மாணவன் ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒருக் காகம் பறந்து வந்தது அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.

    சுடரொளி அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை,  பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுடரொளி திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்தது. சுடரொளி தான் தின்று கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்துகுப் போட்டான்.

    காகம் வேகமாக ஓடி வந்தது. வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுடரொளிக்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.

    இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுடரொளி தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான். காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுடரொளி அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது.

    மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுடரொளியின் அருகில் வந்தது. சுடரொளியின் கையை ஆவலோடு பார்த்தது. சுடரொளி வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுடரொளி காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது.

    ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. சுடரொளியும் காகமும் நண்பர்களானார்கள். சுடரொளி சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும்.

    சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுடரொளி வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாத, எழுதத் தெரியாத,ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது. சுடரொளி வியந்தான்.தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான்.சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுடரொளியை அனைவரும் பாராட்டினார்கள்.
    நேரத்தை தவறவிடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்.


    இன்றைய முக்கிய செய்திகள் :
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🎯 உத்தராகண்ட் சுரங்கப்பாதைக்குள் 10 நாட்களுக்கு முன்பு சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர். கேமரா முன்பு பேசும் காட்சி வெளியாகி உள்ளது. அனைவரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

    🎯 இளைஞர்கள் திடீர் உயிரிழப்புக்கு தடுப்பூசி காரணம் அல்ல என கரோனா தொடர்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தகவல்.

    🎯 கிரிவலம் செல்ல இலவச சிற்றுந்து வசதி. திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்.

    🎯 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி விவசாயிகள் நிலம் வாங்க குறைந்த வட்டியில் கடன். ஐஓபியுடன் தாட்கோ புதிய ஒப்பந்தம்.

    🎯 பட்டு வளர்ச்சி துறை திட்டங்களில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் என ஆட்சியர் தகவல்.

    🎯 புதுக்கோட்டையில் உள்ள பழமையான அருங்காட்சியகத்தை மேம்படுத்த நடவடிக்கை என எம்எல்ஏ வை. முத்துராஜா தகவல்.

    🎯 சந்திரயான் -4 திட்டத்தில் நிலவின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர திட்டம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்.

    🎯 நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா கேட்பதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவு

    🎯 தேர்வில் பழைய கேள்வித்தாள் விவகாரம் திருவள்ளுவர் பல்கலை க்கழகத்தில் 3 பேர் குழு விசாரணை. துணைவேந்தர் ஆறுமுகம் தகவல்.

    🎯 ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வினாத்தாள் கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி.

    🎯 ராமர் கோயில் அர்ச்சகர் பணிக்கு 3000 பேர் விண்ணப்பம்.

    🎯 'புன்னகை செய்யுங்கள் நாடே உங்களை பார்க்கிறது' ரோகித் சர்மா, விராட் கோலி கைகளை இறுக பிடித்தபடி ஆறுதல் கூறிய பிரதமர்.

    🎯1.25 மில்லியன் மக்களை மைதானத்துக்கு இழுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்.

    🎯 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளராக உமர் குல், சயீத் அஜ்மல் நியமனம்.

    🎯 தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் மகாராஷ்டிராவை வீழ்த்தியது பஞ்சாப்.

    🎯 இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர். ஆஸ்திரேலியா அணியில் வார்னருக்கு ஓய்வு.

    🎯 இன்று மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.




    TODAY'S ENGLISH NEWS:

    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    🎯 First visual of 41 persons trapped in tunnel emerge

    🎯 Netanyahu, Hamas chief hint at deal on Gaza truce

    🎯 Chinese premier Li Qiang to attend G20 virtual meet.

    🎯NIT-T Illinois Tech to offer joint degree in data science,AI.

    🎯 Associations in Delta districts urge government to drop cases against farmers in Tiruvannamalai.

    🎯 Nirmala backs plea for bypass at gangaikonda cholapuram.

    🎯 Plans afoot to set up a model Heritage village in Trichy.

    🎯 Chief Minister should be there chancellor of all varsities : Stalin.

    🎯 Post office s 'Lunatic Account ' for autistic man; plaint lodged.

    🎯 UGC set to constitute expert committee to update syllabi of NET.

    🎯 Quarters scores thrice as India fails to put up an adequate challenge.

    🎯 Winger dedicates FIFA academy to Indian youngsters

    🎯Anahat and and Tanvi advance; Harinder pal, Abhay in semi finals.

    🎯 Advani wins world title for 26th time.

    🎯 Warner rested for T20Is against India







    🌸இனிய காலை வணக்கம் ....✍     
               
    இரா . மணிகண்டன் முதுகலை தமிழாசிரியர்
    அரசு மேல்நிலைப்பள்ளி
    கோவில்பட்டி
    திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305
    அலைபேசி எண்: 9789334642 . 
                                         


    தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

      தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...