Monday, October 31, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (01-11-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 01.11.2022.    செவ்வாய்க்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  ஊக்கமுடைமை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு. 

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும். அதுபோல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே ஆகும்.
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.எந்தக் கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும்?

விடை : புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி

2.தொலைநோக்கியால் மட்டுமே காணக்கூடிய கோள்கள் எவை? 

விடை: யுரேனஸ், நெப்டியூன் 

3.பூமி எந்தத் திசையில் சூரியனைச் சுற்றி வருகிறது? 

விடை : மேற்கிலிருந்து கிழக்காக 

4.மிகுந்த வெப்பம் கொண்ட கோள்கள் எவை? 
விடை : வியாழன், புதன்

5.சூரிய உதயத்திற்குச் சற்று முன்பும், மாலையில் சூரியன் மறைந்த பின்பும் தோன்றும் கோள்கள் எவை? 

விடை: புதன், வெள்ளி

பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷True beauty consists in purity of heart
🌷இதயத்தூய்மையே உண்மை அழகு. 


🌹Beauty without bounty avails not
🌹கருணை இல்லா அழகு பயனற்றது.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
உதவி செய்து வாழ்வதே சொர்க்கம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தார்..

அவர் மிகப்பெரிய பணக்காரர்.. ஆனால் யாருக்கும் உதவ மாட்டார்..

ஆனால், ஒரு ஆசை மட்டும் வெகுநாட்களாக இருந்தது..

தான் உயிருடன் இருக்கும்போதே.. சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தான் அது..

ஒருநாள், அவரது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்..

அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறினார்..
அவரை அழைத்துக் கொண்டு சென்றார்.முதலில் அவரை நரகத்திற்கு கூட்டி சென்றார்.._

அங்கு உணவு நேரத்தில் பெரிய, பெரிய அண்டாக்களில் சாதம்.. குழம்பு.. மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன..
அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது..

எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது..

ஆனால், அந்தோ பரிதாபம்..

அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி வாய்க்கு உணவை கொண்டு செல்ல முடியவில்லை..

எனவே, அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை.. அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.. அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு.. அவற்றில் உள்ள உணவை கொட்டித் தள்ளினர்.. பின்னர் தாங்க முடியாத பசியினால் அழுது கொண்டே இருந்தனர்.. அது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது..

அதன் பின்னர், அந்த பெரியவர் கருமியை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.. அங்கும், அதே போல.. நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டுருந்ததது.. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது.. ஆனால் தங்கள் வாய்க்கு அருகில் கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை..

ஆனால், அவர்களில் ஒருவர் தனது கையினால் இனிப்பு வகைகளை எடுத்து மற்றொருவர் வாய் அருகே நீட்டினார்..

கையை மடக்கத்தானே முடியாது.. கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாமல்லவா..

இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.. அனைவரின் வயிறும் நிரம்பியது..

கனவில் இருந்து மீண்ட கருமி.. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை புரிந்து கொண்டார்.. தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தார்.. அன்றிலிருந்து அவர் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தார்..
.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

🎯கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது குற்றம் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நன்கொடைகளுக்கு வரி விதித்த உத்தரவு சரியென தீர்ப்பளித்துள்ளது.

🎯உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி மதிப்பீடுகளை பதிவு செய்யும் நடைமுறை, 'ஆன்லைன் மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களுக்கும்' பொருந்தும் என யுஜிசி அறிவிப்பு.

🎯 பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் இடைப் பருவ தேர்வு நவம்பர் 14 -இல் துவக்கம்.

🎯2010 ம் ஆண்டு ஆகஸ்டு - 23 ம் தேதிக்கு முன் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு , பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் , டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என தொடக்கக்கல்வித்துறை தற்போது புது விளக்கம்

🎯தமிழ் மொழியில் மருத்துவக் கல்லூரி துவங்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு 

🎯இஸ்ரோவில் கல்வி கற்க நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்வு

🎯 மேட்டூர் அணை நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.

🎯 தில்லியில் மின் மானியத்தை 40 சதவீதம் பேர் கோரவில்லை.

🎯15-க்கும் மேற்பட்ட நாடுகளில் உயர்பதவி வகிக்கும் 200-க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர்

🎯நியூஸி., வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தலைமை தாங்கும் வெவ்வேறு கேப்டன்கள்

🎯பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் | சூப்பர் 750 பட்டத்தை வென்ற முதல் இந்திய இணையர்: சாத்விக் - சிராக்


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Due to heavy rains, holiday announcement for Chennai, Thiruvallur, Kanchipuram and Chengalpattu district schools only today.

🎯The Madras High Court has stated that collection of donations by educational institutions is a crime punishable by law, and the order imposing tax on donations is correct.

🎯UGC notification that the procedure for recording academic evaluations for students studying in higher education institutions will be applicable to 'online and distance education institutions'.

🎯 Second mid-term examination for school students will begin on November 14.

🎯Department of Elementary Education has now given a new explanation that the advertisements published before 23rd August 2010 and those who joined the job as graduate teachers are not required to pass the TET examination.

🎯 Minister M. Subramanian announced that a medical college is going to be started in Tamil language

🎯 5 government school students from Nilgiri district have been selected to study in ISRO

🎯 Mettur dam water flow increase to 15 thousand cubic feet.

🎯 40 percent people did not claim electricity subsidy in Delhi.

🎯More than 200 people of Indian origin holding top positions in more than 15 countries

🎯News., India squad announcement for Bangladesh series: Different captains to lead

🎯French Open Badminton | First Indian pair to win Super 750 title: Sadhwik - Chirag
 



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Sunday, October 30, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (31-10-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 31.10.2022.    திங்கட்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:   வினைத்திட்பம்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். 

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவருக்கும் எளியனவாம், சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம்.
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.480 காகிதங்கள் கொண்ட ஒரு கட்டுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?

விடை: ரீம்

2.சிறந்த இந்திய விளையாட்டுப்
பயிற்சியாளர்களுக்கு என்ன விருது
வழங்கப்படுகிறது?

விடை: துரோணாச்சாரியா விருது

3.சென்னை மாநிலம்' தமிழ்நாடு' என 
எப்போது மாற்றப்பட்டது?

விடை:1969

4.வ.உ.சிதம்பரனாருக்கு ' கப்பலோட்டிய
தமிழன்' என்ற பட்டம் கொடுத்தவர் யார்?

விடை:ம.பொ.சி

5.நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின? 

விடை: நெபுலாக்கள்


பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Every cloud has a silver lining

🌹 தீமையிலும் நன்மை உண்டு


🌷 Every man is his own doctor

🌷 தன் நோய்க்கு தானே மருந்து

இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

பொறுமையே புத்திசாலித்தனம் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரு குளத்துக்கு பக்கத்துல ஒரு ஆமையும் இரண்டு அன்னப்பறவையும் இருந்தாங்க. நிறைய நேரம் ஒருத்தருக்கு ஒருத்தர் கதை சொல்லிக்கிட்டே நல்ல நண்பர்களாய் இருந்தார்கள். அப்படியே சில வருடங்கள் போயிடுச்சு, அப்போ ஒரு வருஷம் அங்கு மோசமான வரட்சி ஏற்பட்டது. அப்போது “இந்த குளம் கிட்டத்தட்ட வற்றி போயிடுச்சு தண்ணி இல்லாம நாம எப்படி இங்க வாழுறது” என்று அன்னப் பறவை கேட்டது. 
அதற்கு ஆமை “கவலைப்படாதே நண்பா ஒரு வழி கண்டு பிடிக்கலாம்.” என்றது. உடனே மற்றொரு அன்னப் பறவை “ஒரு வழியும் இல்லை நாங்க பறந்து போனாலும் நீ இங்க தான் இருக்கணும், ஏன்னா நீ ரொம்ப மெதுவா நடப்ப இல்ல, அது மட்டும் இல்ல உன்ன நாங்க தனியா விட்டுட்டு போக மாட்டோம்.” என்று சொன்னது. 

கொஞ்ச நேரம் யோசித்து விட்டு ஆமை சொன்னது “ஹே! பசங்களா என்கிட்ட ஒரு சூப்பரான ஐடியா இருக்கு, முதலில் நீங்க ரெண்டு பேரும் போயி தண்ணி நிறைய இருக்கிற குளமா பார்த்து தேடிட்டு வாங்க. 
அப்படி திரும்பி வரும்போது ஒரு பெரிய குச்சியை கொண்டு வாங்க அந்த குச்சியின் நடுவில நான் பிடிச்சுக்கறேன், நீங்க ரெண்டு பேரும் உங்க காலால குச்சியின் ரெண்டு ஒரத்தையும் புடிச்சுகிட்டு என்னை புது குளத்துக்கு பறந்து கூட்டிட்டு போங்க, நம்ம வாழ இதுதான் ஒரே வழி. இது ஒரு செம்மையான ஐடியா!.” என்றது.

அதை கேட்ட அன்னப் பறவைகள் “இது நல்ல ஆலோசனை தான். ஆனா நாங்க பறக்கும் போது நீ தான் உன் வாயைத் திறக்காம பாத்துக்கணும்.. இல்லன்னா நேரா கீழே விழுந்துவிடுவ.” என்று கூறி அந்த இரண்டு அன்னப்பறவையும் பறந்து போய் நிறைய தண்ணீர் உள்ள ஒரு குளத்தை அவங்களோட புது வீட்டை தேடப் போனாங்க. 

அந்த நேரத்துல ஆமை இப்படிப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான ஐடியாவை யோசித்ததை நினைத்தும், வானத்தில் அப்படியே பறந்து போகிறதை நினைத்தும் ரொம்ப பெருமையா இருந்துச்சு. சீக்கிரமாவே அன்னப் றவைகள் ஒரு குளத்தை கண்டுபிடித்து ஒரு பெரிய குச்சியோட ஆமைய பார்க்க வந்தாங்க. ‘இதோ இதுதான் உன் குச்சி பிடிச்சுக்கோ” என்றது அன்னம். 
ஆமை எவ்வளவு வேகமா முடியுமோ அவ்வளவு வேகமா அதோட குட்டி கால்களை நகத்தி தன்னோட வாயால் அந்த குச்சியை புடிச்சுது. அப்போ அன்னப்பறவைகள் பட படனு இறக்கைகளை விரிச்சிட்டு சீக்கிரமா பறக்க ஆரம்பிச்சாங்க. அவங்க மேகத்துக்கு மேல் பறந்து போனாங்க, ஆமையோட ஐடியா சூப்பரா வேலை செய்தது. 

“நான் பறக்குறேன்னு என்னாலேயே நம்ப முடியல, இப்படி ஒரு ஐடியாவை யோசிச்ச நான் எவ்ளோ பெரிய புத்திசாலி” என்று ஆமை தன்னை ரொம்ப பெருமையாக நினைத்தது. அவங்க போற வழியில ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தின் மேலே  பறக்கும் போது கீழே இருந்த மக்கள் அவங்கள பாக்க ஆரம்பிச்சாங்க. 

இரண்டு அன்னப்பறவையும், ஒரு ஆமையும் பறக்குறத பாக்க ரொம்ப அழகா இருந்திச்சி. “ஹே! அங்க பாருங்க அந்த ரெண்டு அன்னபறவையும் ஒரு ஆமைய தூக்கிட்டு போகுது.” கீழே இருக்கிற மக்கள் சொன்னத கேட்டு ஆமை ரொம்ப பெருமை பட்டுச்சு. மக்களுக்கு இது ஆமையோட ஐடியானு தெரியாததுனால ஆமைக்கு கோவம் வந்திச்சு. 
“என்ன ஒரு புத்திசாலி பறவைகள் அவங்க ஒரு குளத்திலிருந்து மற்றொரு குளத்திற்கு போறாங்க போல கூட அவங்க ஃபிரண்ட் ஆமையும் கூட்டிட்டு போறாங்க பாருங்க. ஆமா இது யாருடைய ஐடியானு தெரியல, அதை யோசித்த விலங்கு ரொம்ப புத்திசாலி” என்று மக்கள் புகழ்ந்து பேசுறத கேட்ட ஆமையால் கொஞ்சம் கூட பொறுக்க முடியாமல். அதோட வாய திறந்து கத்தி “அது என்னோட ஐடியா” என்று சொல்லிச்சு. 
ஆமை, தன்னோட வாய திறக்க கூடாது என்பதை மறந்ததனால் மேல இருந்து ரொம்ப வேகமாக கீழே விழுந்திச்சு. ஆமையோட பொறாமையான குணத்தினால அன்னப்பறவைகள் தங்களோட நண்பனை இழந்திட்டாங்க. அவங்களல எதுவும் பண்ண முடியல. அன்னப் பறவைகள் மட்டும் புது குளத்திற்கு பறந்து போனாங்க. 

நீதி: சான்றோர்களைப் போல் அமைதியாக இருக்க வேண்டும்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

🎯ஆன்லைன் பிஎச்.டி. படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை... மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

🎯2022-23-ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் செய்வதற்கான காலஅவகாசம் 2022 அக்டோபர் 31 இன்றுடன் முடிவடைகிறது.

🎯 அரசு பள்ளி நூலகங்களுக்கு ரூபாய் மூன்று கோடியில் புத்தகங்கள் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

🎯 அரசு பள்ளி மாணவர்களுக்கு வசதியாக தமிழில் மொழி பெயர்க்கப்படும் எம். பி .பி .எஸ் பாட புத்தகங்கள்.

🎯UGC NET 2022 : உதவி பேராசிரியர்களுக்கான நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

🎯 நவம்பர் 1-ல் கிராம சபை கூட்டம் அனைத்து விவசாயிகளும் பங்கேற்க அழைப்பு.

🎯புதிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் - ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

🎯 இந்தியாவில் 21.4 லட்சம் பேருக்கு காச நோய் என உலக சுகாதார மையம் தகவல்.

🎯குஜராத்தில் ராணுவ விமான தயாரிப்பு தொழிற்சாலை: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

🎯 உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்டது இந்திய பாதுகாப்பு துறை.

🎯T20 WC | சோபிக்காத பேட்ஸ்மேன்கள் - நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

🎯T20 WC | ஷார்ட் பால் வீக்னெஸ்ஸால் சரிந்த டாப் பேட்ஸ்மேன்கள் - SKY உதவியால் இந்தியா 133 ரன்கள் சேர்ப்பு

🎯T20 WC | எய்டன் மார்க்ரம்; டேவிட் மில்லர் அதிரடி - இந்தியாவை தோற்கடித்தது தென்னாப்பிரிக்கா 

🎯 இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Stipend of Rs.1000 per month for college students.. You can apply from November 1!

🎯Online Ph.D. Courses are not recognized... UGC warning to students

🎯Last date to apply for National Education Scholarship 2022-23 is 31 October 2022.

🎯 Department of School Education has announced Rs 3 crore worth of books for government school libraries

🎯 Translated into Tamil for the convenience of government school students M B. B. S. Text Books.

🎯UGC NET 2022 : NET Exam Results for Assistant Professors Released!

🎯 Gram Sabha meeting on 1st November inviting all farmers to participate.

🎯Take advantage of the new opportunity - PM Modi appeals to the youth of Jammu and Kashmir

🎯 According to the World Health Center, 21.4 lakh people have tuberculosis in India.

🎯Army Aircraft Manufacturing Factory in Gujarat: PM Modi lays foundation stone

🎯 Indian Defense Department has the largest number of employees in the world.

🎯T20 WC | Unsophisticated batsmen - Pakistan beat Netherlands

🎯T20 WC | Top batsmen fall due to short ball weakness - SKY helps India add 133 runs

🎯T20 WC | Aidan Markram; David Miller in action - South Africa beat India

🎯 Heavy rain is likely in 13 districts today, according to the Meteorological Department.
 



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Thursday, October 27, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (28-10-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 28.10.2022.    வெள்ளிக்கிழமை   .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:   அமைச்சு

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷


கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு.  
                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன் 
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.தமிழ்நாட்டின் நுழைவாயில்?

விடை: தூத்துக்குடி

2. தமிழ்நாட்டில் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுவது?

விடை:சிவகாசி

3.தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி என்று அழைக்கப்படுவது?

விடை: சிவகங்கை

4. தமிழ்நாட்டில் "குட்டி இங்கிலாந்து"என்று அழைக்கப்படுவது?

விடை: ஓசூர்

5.தமிழில் வெளிவந்த முதல் நாவல்?

விடை : பிரதாப முதலியார் சரித்திரம்


பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Fortune favours fortune

🌷செல்வம் செல்வத்தோடு சேரும். 


🌹After a storm there is a calm

🌹புயலுக்குப்பின் அமைதி. 


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?* 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.
எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.

என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?
கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.

உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்…வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?”
“ஆ.. நல்ல யோசனை… அப்படியே செய்வோம்…”
நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.
தலை…!
வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு.
அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!
துணைத் தளபதி வந்தான். ‘நாம் வென்றுவிட்டோம்… கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா…” என்றான் உற்சாகத்துடன்.
“ஆமாம்… உண்மைதான்” என்படி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.
நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!


  

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯தமிழகத்தில் புதிய மனைப் பிரிவுகளுக்கு அனுமதி - நகராட்சி நிர்வாக துறையின் திருத்திய நடைமுறைகள் வெளியீடு

🎯 முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்குரிய ஹால்டிக்கெட் வெளியீடு

🎯 ஜி 20 உச்சி மாநாடு அமிர்ந்தானந்தமயிக்கு முக்கிய குறிப்பு

🎯நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ கிளைகள் அமைக்கப்படும்: அமித் ஷா

🎯ரஷ்யா திடீர் அணு ஆயுதப் போர் ஒத்திகை - அதிபர் விளாடிமிர் புதின் காணொலி மூலம் ஆய்வு

🎯145 ரன்கள், 8 விக்கெட்டுகள்: நடப்பு டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ரசா ராஜாங்கம்

🎯T20 WC அலசல் | இது கோலியின் உலகக் கோப்பை? - உலக அணிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்த 2-வது அரைசதம்

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Intensive checks will be conducted across T.N. till year end to enforce the ban on single-use plastics, TNPCB tells HC

🎯 DMK organise public meetings to explain resolution adopted on Hindi

🎯States should have a uniform policy on law and order: Amit Shah 

🎯 Andhra Pradesh Govt taking all measures to help Uddhanam kidney patients, says Health Minister

🎯All India Muslim Personal Law Board likely to revive women’s wing soon

🎯Putin says he won’t use nuclear weapons in Ukraine

🎯ICC Twenty20 World Cup 2022 | Wade tests positive for COVID, but likely to play against England

🎯Walk in the park for The Men in Blue against the Netherlands
 



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Wednesday, October 26, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் -(27-10-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 27.10.2022.    வியாழக்கிழமை   .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:   பெருமை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் 

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையான செயலை செய்வதற்கு உரிய வழிகளில் செய்து முடிக்க  வல்லவர் ஆவர்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.வேளாண் வேதம்‘ எனப் போற்றப்படும் நீதி நூல் எது?
விடை : நாலடியார்
2.தமிழ்நாட்டில் காந்தி மியூசியம் எங்குள்ளது ?
விடை :மதுரை
3.ஆண்டு ஒன்றுக்கு எத்தனை வாரங்கள்?
விடை: 52 வாரங்கள்
4.உடன்கட்டை ஏறுவதைத் தடைசெய்த
இந்திய மன்னர் -----?
விடை : அக்பர்
5.இந்தியாவின் கடைசி ஆங்கிலேய
கவர்னர் ஜெனரல் -----?
விடை : மவுண்ட்பேட்டன் பிரபு


பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


🌷Authority shows the man
🌷அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்.

🌹Measure is treasure
🌹அளவறிந்து வாழ்வதே வாழ்க்கை.

இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

நீர் இறைத்த திருடர்கள்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.

இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், “அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்” என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.

“அதற்கு என்ன செய்யலாம்?” என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.

“வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்” என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.

அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் ‘தொப்’பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.

திருடர்களும், “தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.

பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், “அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்” என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.

சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.

இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், “நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்” என்று பேசிக் கொண்டு சென்றனர்.

அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!” என்று கூறினான்.

திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.

நீதி: சமயோசித புத்தி இருந்தால் எந்த சூழலையும் சமாளிக்கலாம் 

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯TET-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கே பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு: புதிய அறிவிப்பாணை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

🎯மருத்துவ கவுன்சிலிங் இன்று நிறைவு..

🎯தமிழகத்தில் மருத்துவ துறையில் 4,308 காலியிடம் 2 மாதத்தில் நிரப்ப முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

🎯துாய்மை பணியாளருக்கு நிரந்தர பணி கிடையாது! அரசின் புது உத்தரவால் அதிர்ச்சி

🎯வாக்காளர் பட்டியல் திருத்த பணியை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

🎯 நவம்பர் 11 இல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்

🎯பல மின்இணைப்புகள் உள்ள வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்க மேலும் அவகாசம் - அடுத்த ஆண்டு ஏப்.10 வரை நீட்டிப்பு

🎯 தேவர் தங்க கவசம் நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைப்பு

🎯ரூபாய் நோட்டில் ஒரு பக்கம் காந்தி, இன்னொரு பக்கம் விநாயகர் படம்: பிரதமருக்கு கேஜ்ரிவால் யோசனை

🎯அரியானாவில் நாளை முதல் 2 நாட்கள் மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

🎯இங்கிலாந்தின் துணை பிரதமராக டொமினிக் ராப் நியமனம்: ரிஷி சுனக் அதிரடி

🎯 டி20 தரவரிசை டாப் 10 மீண்டும் கோலி

🎯“பாகிஸ்தான் தான் நல்ல வேகப் பந்துவீச்சு அணி!” - அனில் கும்ப்ளே மனம் திறப்பு

🎯தமிழகத்தில் அக்.29-ல் தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை; அக்.30-ல் கனமழை வாய்ப்பு

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯IIT Madras and Banaras Hindu University to jointly host Kashi Tamil Sangamam

🎯MP makes plea to release AISHE report

🎯ISRO to boost NavIC, widen user base of location system

🎯Redevelopment of Egmore railway station set to begin shortly

🎯To improve India’s economy, print images of Hindu deities Ganesh, Lakshmi on currency, Kejriwal tells Modi

🎯Higher education curriculum framework on the anvil: Kerala CM

🎯No side should resort to nuclear option, Rajnath tells Russian counterpart

🎯Britain's new Prime Minister Rishi Sunak delays crunch budget plan

🎯T20 World Cup 2022 | Ireland beat England by 5 runs via D/L method

🎯Tennis players face packed home schedule till year-end
 



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Tuesday, October 25, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (26-10-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 26.10.2022.    புதன் கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:   தீ நட்பு 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்னர்?

விடை : முகமது பின் காசிம்

2. தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பட்டவர்?

விடை: சுந்தரமூர்த்தி நாயனார்

3. தக்கோலம் போரில் சோழ மன்னரை தோற்கடித்தவர்?

விடை: மூன்றாம் கிருஷ்ணர்

4. மெகஸ்தனிஸ் எழுதிய நூல்?

விடை: இண்டிகா

5. ஜெஸியா வரியை நீக்கியவர்?

விடை: அக்பர்


பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹Alternatively “Known is a drop, unknown is an Ocean”.

🌹கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு.


🌷All that glitters is not gold.

🌷மி்ன்னுவதெல்லாம் பொன்னல்ல.



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

உழைத்தால் மட்டும் போதுமா

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  நாள் முழுக்க வேலை தேடி அலைந்தார் ஒருவர். மாலையில் மரக்கடை ஒன்றை கண்டார். ஐயா நான் கடின உழைப்பாளி எந்த வேலை கொடுத்தாலும் நன்றாக செய்வேன் என முதலாளியிடம் உறுதி அளித்தார்.

மரம் வெட்டும் வேலை கிடைத்தது. முதல் நாள் அக்கறையுடன் வேலை செய்தார். மற்ற தொழிலாளிகளை விட வேகமாக மரம் வெட்டும் பணியை செய்து முடித்தார். புதியவரின் திறமையை கண்டு அனைவரும் வியந்தனர்.

ஆனால் விதி சதி செய்தது. அடுத்தடுத்த நாட்களில் அவரால் முதல் நாளைப் போல வேகமாக வேலை செய்ய முடியவில்லை. மற்றவர்களின் பரிகாசத்திற்கு ஆளானார். ஒரு வாரம் கடந்த பின்,” என்ன ஆச்சு முதல்நாள் ஆர்வமாக மரம் வெட்டினிர்களே இப்போது ஏன் முடியவில்லை வேகம் குறைந்துவிட்டது” என்று கேட்டார் முதலாளி.


ஏன் என்று தெரியவில்லை முதல் நாளைப் போல் அக்கறையுடன் தான் வேலை செய்கிறேன் என்றார் அவர். “அப்படியானால் கோடாரியை காட்டுங்கள் அதை எப்படி கூர்மை செய்துள்ளீர்கள் என்று பார்க்கட்டும்” என்றார் முதலாளி. கூர்மையா இதுவரை பட்டை  தீட்டவே இல்லை என்றார் அவர்.

“முதல்நாளில் பட்டை தீட்டி கொடுத்தேனே அதை வைத்தே வெட்டிக் கொண்டு இருக்கிறீர்களா” என்றார் முதலாளி. அவரும் “ஆமாம்” என்றார். இதுதான் பிரச்சனை பட்டை தீட்டாமல் வெட்டினால் கோடாரி மட்டுபட்டு விடும். கடினமாக உழைத்தும் பலன் கிடைக்காது என்றார் முதலாளி. அதன்பின் கோடாரியை கூர்மை படுத்துவதை தன் முதல் வேலையாக கொண்டார் மரம் வெட்டுபவர்.


 நீதி : உழைத்தால் மட்டும் போதுமா வெற்றிபெற புத்திசாலித்தனமும் அவசியம்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯சென்னை மெட்ரோ ரயில்களில் அக்.21-ல் மட்டும் 2.63 லட்சம் பேர் பயணம்

🎯 சென்னையில் காற்றும் தரம் மிக மோசம்

🎯இந்தியாவில் சூரிய கிரகணம்: தமிழகத்தில் 8% மட்டுமே தெரிந்தது

🎯தவறுகளை சரி செய்து பொருளாதாரத்தை உயர்த்துவேன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உறுதி

🎯 உக்கரையினில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தல்.

🎯2019-க்கு பிறகு முதல் முறையாக உலகத் தரவரிசையில் டாப் 5-க்குள் நுழைந்தார் பி.வி.சிந்து

🎯வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அக்.29-ல் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Two antique idols stolen from Tiruvarur temple 50 years ago, traced to United States

🎯Chennai Metro Rail’s average daily ridership touches 2.20 lakh during the past week

🎯Deepavali celebrations leave Chennai suffocated, Air Quality Index drops to severe in several localities

🎯Jaishankar holds talks on India-U.K. relations with Britain’s Foreign Secretary

🎯Focus on India-U.K. ties as Sunak becomes British PM

🎯Rishi Sunak becomes third British Prime Minister of the year

🎯To hell with spirit of game, says Hardik Pandya on 'Mankading

🎯Imperious Kohli asserts his class with one of the best-ever Twenty20 knocks
 



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...