Tuesday, September 26, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (27-09-2023)

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 27/09/2023      புதன்கிழைமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  கல்வி 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.   
                                                                                                                                                             
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது


    
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.வந்தே மாதரம் பாடலை எழுதியவார்? 

விடை : பங்கிம் சந்திர சட்டர்ஜி

2.புதுக்கோட்டை குடுமியான் மலையில் காணப்படும் கல்வெட்டுகள்? 

விடை : பல்லவர் கால கல்வெட்டுகள்

3.நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ? 

விடை : ஒடிசா

4.காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ? 

விடை : ஒக்கேனக்கல்

5. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

விடை : 2004

 பழமொழிகள்
🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 A little learning is a dangerous thing
🌷அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.

🌹 Knowledge is power
🌹அறிவே ஆற்றல்.



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 ஊக்கமும் ஆக்கமும் உயர்வுக்கு வழி என்பதை அறிவேன். 

🌷 எனவே ஒவ்வொரு நாளும் ஊக்கத்தோடு செயல்பட்டு பல புதிய படைப்புகளையும் சாதனைகளையும் செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂


"நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்"


ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்  "என்ன ஒரு துரதிர்ஷட நிலை?" என்று பரிதாபமாக விசாரித்தனர்.

"இருக்கலாம்" என்று ஒரே வார்த்தையில் அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்து போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை  உடன் அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம்பக்கத்தினர், "நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி , இப்போ  நாலு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு" என்றனர்.

தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்  மறுபடியும் "இருக்கலாம்" என்று கூறி முடித்தார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். "என்னப்பா, உனக்கு ஒரு நல்லது நடந்தா  அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க  ஆறு மாசத்துக்கும் மேல் ஆகும் போல, ரொம்ப கஷ்டமான நிலைமை" என்று கூறி ஆதங்கப்பட்டனர்.

விவசாயி பெரிதாக வருந்தாமல் "இருக்கலாம்" என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை.

இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர்.

இப்போதும் அந்த விவசாயி " இருக்கலாம்" என்று கூறினார்.

அவர் ஏன் எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரியான சமமான மனநிலையில் இருந்தார் ?
காரணம் உண்டு. 

அந்த விவசாயி வாழ்வின் இயல்புகளைப் புரிந்துகொண்டவர். நாள்களில் நல்ல நாள் , கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு மறைமுகமாகப் பல பாடங்களை உணர்த்திக்கொண்டிருக்கின்றது. நல்லது கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். கஷ்டமான சூழ்நிலைகளில், இது நிரந்தரம் அல்ல நாளை என்று ஒன்று இருப்பதை மறக்கவேண்டாம்.

சந்தோஷமான சூழ்நிலையில் தலை கால் புரியாமல் ஆடக்கூடாது. யாருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதையும் தலைக்கு எடுத்துச் செல்லாமல், எதைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நலம். சுகம் - துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

.🎯கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: முன்னாள் எம்எல்ஏ வழங்கினார்

🎯குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் புதிதாக 1,000 வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

🎯வடதமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

🎯வளாக நேர்காணலில் பி.இ. படிக்கும் 85% பேருக்கு வேலை: அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தகவல்

🎯தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கு ஆசிரியர் பட்டய பயிற்சியில் பதிய இணைய இணைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

🎯தமிழ்நாடு அரசு வெளியிட்ட சென்னை பல்கலை. தேடுதல்குழுவை திரும்ப பெற வேண்டும்: கவர்னர் மாளிகை உத்தரவால் மீண்டும் மோதல்

🎯தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை.

🎯தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை

🎯இந்தியாவின் ராஜதந்திரம் கடந்த 30 நாட்களில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது: பிரதமர் மோடி

🎯ODI WC 2023 | இந்தியா வந்தனர் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்

🎯Asian Games 2023 | குதிரையேற்றத்தில் 41 ஆண்டு வேட்கை - டிரஸ்ஸாஜ் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்!

🎯ODI WC 2023 | இலங்கை அணி அறிவிப்பு: ஹசரங்கா இல்லை

🎯உலகக் கோப்பை அணியில் அஸ்வின்? - புதிர் போடும் ரோகித் சர்மா



TODAY'S  ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Chennai water board will not accept cash for tax and charges from October 1

🎯Kalaignar hospital staff will be paid on September 26: T.N. Health Minister

🎯Water released from Poondi reservoir, much ahead of NE monsoon

🎯Karnataka told to release 3,000 cusecs of Cauvery water daily to Tamil Nadu till October 15

🎯Stalin reviews law and order situation in Tamil Nadu

🎯Governor asks government to withdraw gazette notification on Madras University V-C search panel

🎯Tamil Nadu CM Stalin releases Tourism Policy 2023

🎯G-20 diplomacy and a shifting world order

🎯No signals from Chandrayaan-3’s Vikram, Pragyan: ISRO

🎯U.S. calls for ‘full and fair investigation’ into Canada’s allegations against India

🎯Hangzhou Asian Games | A 41-year old medal drought ends in equestrian gold, riding on a quartet of youngsters

🎯New Zealand skipper Williamson targets World Cup return

🎯India shine in sailing: Neha bags silver, Ali bronze

🎯India vs Australia | Ashwin has got the class and the experience, says Rohit

🎯Hangzhou Asian Games | Biswas — postman by day, Esports player by night






🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...