பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 19.09. 2023. செவ்வாய்க்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்:அதிகாரம்:அறிவுடைமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு .
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
எந்த ஒரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமை ஆகும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. இந்தியாவில் பெரிய கடல் பாலம் எது?
விடை : அண்ணா இந்திரா காந்தி பாலம் (தமிழ்நாடு)
2. இந்தியாவின் மிகப்பெரிய கோளரங்கம்?
விடை : பிர்லா கோளரங்கம் (கொல்கத்தா)
3 ) இந்தியாவின் மிக உயரமான அணை எது?
விடை : டெஹ்ரி அணை (உத்தரகண்ட்)
4. இந்தியாவில் மிக உயர்ந்த நுழைவாயில் வழி எது?
விடை : புலாண்ட் தர்வாஸா
5. இந்தியாவில் வீர தீரம் மிக்க செயலுக்கான உயர்ந்த விருது எது?
விடை : பரம்வீர் சக்ரா.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸Jack of all trade is master of none
🌸 பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்
🌸 Justice delayed is justice denied
🌸 தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சொல்லும் செயலும் சிறந்த மனிதருக்கான எடுத்துக்காட்டு என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் சொல்வது போலவே நடத்தையிலும் பிறர் போற்றும் வண்ணமே நடந்து கொள்வேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்...
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல். பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. இன்று மசோதா தாக்கல் ஆக வாய்ப்பு.
🎯எல்.ஐ.சி முகவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான நலத்திட்டங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்.
🎯விவசாயிகளுக்கான கடன், காப்பீட்டுத் திட்டங்கள் - மத்திய அரசு இன்று தொடங்கி வைக்கிறது
🎯 சின்ன வெங்காய சாகுபடிகள் அசத்தும் பெரம்பலூர். ஆண்டுக்கு 80,000 மெட்ரிக் டன் மகசூல். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி.
🎯 வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
🎯 வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.
🎯 கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிப்பு விண்ணப்பதாரர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இ சேவை மையங்களில் ஏற்பாடு. 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை.
🎯 அஞ்சல் சேவை குறைதீர் முகாம் புகார் அனுப்ப செப்டம்பர் 29 கடைசி நாள்.
🎯 அசோலா வளர்க்க சிறுகமணியில் செப்டம்பர் 21 இல் இலவச பயிற்சி.
🎯 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 29 இல் சென்னையில் பேரணி. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.
🎯 அறிவியல் தரவுகள் சேகரிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் இஸ்ரோ தகவல்.
🎯6 முதல் 10 வகுப்புகளுக்கு இன்று முதல் காலாண்டுத்தேர்வு. பொது வினாத்தாள் நடைமுறை. இந்தத் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை .
🎯 முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் பட்டியல் அனுப்ப உத்தரவு.
🎯 கிராம ஊராட்சி செயலர்கள் நியமன விதிமுறைகள் வெளியீடு.
🎯 விமானிகள் இல்லாததால் 5 விமானங்கள் திடீர் ரத்து பயணிகள் கடும் அவதி.
🎯 தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு.
🎯 ஒரே நாளில் 9 இடங்களுக்கு சுற்றுலா 300 ரூபாய் போதும்... மூணாறை சுத்தி பார்க்கலாம். அரசு பஸ்ஸில் ஜாலி ட்ரிப்.
🎯 கோழிக்கோட்டில் நிபா பரவல் எதிரொலி. பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்.
🎯 சொந்த மண்ணில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பையை வெல்ல இந்தியா தயார் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.
🎯 மெக்சிகோ ஓபன் டென்னிஸ்.2-வது சொத்தில் லெய்லா.
🎯 கால்பந்து களத்தில் இன்று இந்தியா-சீனா மோதல்.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Union Cabinet meets amid buzz over Women’s Reservation Bill
🎯Today in Politics: Parliament moves house, makes room for women’s quota Bill
🎯Aditya-L1 embarks on 110-day journey to L1 point.
🎯Growing faith of people in Parliament, its biggest achievement, says PM Modi, as MPs bid farewell to old Parliament building.
🎯Maneka Gandhi, Manmohan Singh, Shibu Soren to speak at Central Hall function before Parliament shifts to new digs.
🎯Tamil Nadu delegation to submit representation on Cauvery on September 18.
🎯T3 terminal at Chennai airport to be pulled down next month.
🎯Canada investigates Indian government link to killing of Khalistani activist, expels Indian diplomat
🎯Ravichandran Ashwin named in India's squad for ODI series against Australia.
🎯Mumbai City FC lose 0-2 to Nassaji Mazandaran of Iran in ACL
🎯Bopanna eyes captain’s role in the future as he exits the Davis Cup scene.
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி
திருச்சி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment