பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 21.09.2022. புதன் கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: அடக்கம் உடைமை 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🍀🍀🍀🍀🍀
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. ஒரு குவின்டால் என்பது________?
விடை : 100 கிலோ
2. மின் தடையை அளக்க உதவும் அலகு__________?
விடை : ஓம்
3. முள்ளங்கியில் காணப்படும் வேர் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
விடை : ஆணிவேர் தொகுப்பு
4. நெல்லில் காணப்படும் வேர் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
விடை : சல்லி வேர் தொகுப்பு
5. டிஎன்ஏ, ஆர்என்ஏவாக மாற்றப்படும் நிகழ்ச்சிக்கு _________என்று பெயர்?
விடை : படி எடுத்தல்
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன் உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
*அப்பா மகளுக்கு கூறிய அறிவுரை…*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
கமலா, எதற்கெடுத்தாலும் நினைத்தது நடக்கவில்லை என்று தன் அப்பாவிடம் புலம்பிக் கொண்டே இருப்பாள். “நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது..? ஒரு அடி எடுத்துவைத்தால் மூன்றடிச் சறுக்குகின்றது. எனக்கு ராசியே இல்லை.” என்று எதையாவது சொல்லி கொண்டே இருப்பாள்.
அவளுக்கு தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும் என்று நினைத்த அவளது அப்பா, அவளை அழைத்து சமையல் அறைக்குச் சென்றார். மூன்று பாத்திரங்களில் நீரை நிரப்பிக் கொதிக்க வைத்தார். முதல் பாத்திரத்தில் உருளைக்கிழங்கு நறுக்கிப் போட்டார். இரண்டாவது பாத்திரத்தில் முட்டை ஒன்றினை போட்டு வேக வைத்தார். மூன்றாவது பாத்திரத்தில் சிறிது அளவு காப்பித் தூளை போட்டார்.
சிறிது நேரத்திற்கு பின், மூன்று பாத்திரங்களையும் கீழே இறக்கி வைத்து விட்டு, கமலாவை அழைத்து “இந்த மூன்று பாத்திரங்களிலும் இருப்பதை பார்க்கும் போது உனக்கு ஏதாவது புரிகின்றதா..?” என்று கேட்டார்.
ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தாள் கமலா. சிரித்தபடியே கமலாவின் அப்பா அவளிடம், முதல் பாத்திரத்தை காட்டி இதில் உள்ள உருளைக்கிழங்கு திண்மமானது. ஆனால் கொதிக்க வைத்ததும் மென்மை ஆகிவிட்டது. அடுத்து இரண்டாவது பாத்திரத்தை காட்டி, இதில் திரவத் தன்மை உடைய முட்டையானது, தற்பொழுது கொதிக்க வைத்ததும் திண்மமாகி இருக்கிறது. மூன்றாவது பாத்திரத்தை காட்டி, இதில் இருந்த காப்பித்தூள் தற்பொழுது நீருடன் கலந்து விட்டது..
மூன்று பாத்திரங்களிலும் சம அளவு வெப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொன்றும் தன் இயல்புக்கு ஏற்றவாறு மாறி கொண்டது.
நம் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரேவிதமான சவால்கள், பிரச்சனைகள் எதிர்கொண்டு வருகின்றோம். அதை நாம் உருளைக்கிழங்கு போல் மென்மையாகி துவண்டு போகிறோமா….! இல்லை… முட்டை போல் மென்மையாக இருந்த நாம் வலுப் பெறுகிறோமா….! இல்லை… காப்பித் தூளைப் போல பிரச்சினையோடு கலந்து மடியப் போகிறோமா..! என்பதை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும் என்றார்.
இதைக்கேட்டதும் கமலா, “இனிமேல் புலம்பாமல் தன்னம்பிக்கையோடு தன் பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவேன்” என்று கூறி தன் தந்தையை அணைத்துக் கொண்டாள்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment