Thursday, September 15, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (16/09/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 16.09.2022.    வெள்ளிக்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கல்லாமை 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

   கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.ஒளிச் சேர்க்கை என்பது_______?

*விடை* : வேதியல் மாற்றம்

2.இயற்பியல் மாற்றம் ______?

*விடை* : பதங்கமாதல்

3.வேதியியல் மாற்றம் _______?

*விடை* :  இரும்பு துருப்பிடித்தல்

4.வேலையின் அலகு _____?

*விடை* :  ஜூல்

5.உழவனின் நண்பன் யார்?

*விடை* :  மண்புழு


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 God is love
🌹 அன்பே கடவுள்

🌷 Golden key opens every door
🌷 பணம் பாதாளம் வரை பாயும்



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

அழகு 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஒரு ராஜா அழகான குதிரை ஒன்று வளர்த்து வந்தார்.அந்த குதிரைக்கு தான் இன்னும் அழகாகனும்னு ஆசை வந்து கடவுள்கிட்ட வேண்டிகிச்சு.

கடவுள் குதிரையின் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.குதிரை நான் இன்னும் அழகாகனும் அதுனால என் கழுத்தை நீளமாகவும் கால்களை நீளமாகவும் படைக்க வேண்டும் என்று கேட்டது.

கடவுளும் குதிரை கேட்ட மாதிரி கழுத்தையும்,கால்களையும் நீளமாக படைத்தார்.குதிரை இப்போது ஒட்டகம் மாதிரி ஆகிவிட்டது.தன் உருவத்தை பார்த்த குதிரைக்கு அழுகை வந்து விட்டது.

அய்யோ கடவுளே என்னை பழைய மாதிரியே மாற்றிவிடுங்கள் என்று கேட்டது குதிரை.நீ விரும்பிய மாதிரி தான் உன்னை படைத்துள்ளேன்,பிறகு ஏன் வருத்தபடுகிறாய் என்று கேட்டார்.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக படைத்துள்ளேன்.உன்னால் தரையில் வேகமாக ஓட முடியும்,ஒட்டகத்தால் பாலைவனத்தில் விரைவாக ஓடமுடியும் அதிகமாக பொதி சுமக்க முடியும்.

அழகு வேண்டும் என்று மேலும் மேலும் ஏதாவது செய்ய நினைத்தால் இப்படித்தான் போய் முடியும் என்றார்.

”அழகு என்பது உருவத்தில் அல்ல நீ செய்யும் செயலில்



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯அரசு ஊழியர்களுக்கான விதிகளில் திருத்தம்

🎯தமிழக அரசு பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; பசியை போக்க எந்த தியாகமும் செய்ய தயார் என பேச்சு

🎯அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் தள்ளுபடி விலையில் விற்பனை

🎯அம்மா உணவகம் இல்லை: சென்னையில் 6 தனி சமையல் கூடங்கள் மூலம் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி

🎯புதிய தலைமை செயலகத்துக்கு அம்பேத்கரின் பெயர் - முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

🎯அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்திய வளர்ச்சிக்கான முக்கியக் கூட்டாளி அமெரிக்கா என பிரதமர் மோடி கருத்து.

🎯“முன்மாதிரியாக செயல்படுங்கள்” - ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசு துணைத் தலைவர் அறிவுறுத்தல்

🎯T20 WC | இந்தியா - பாக். போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன

🎯இன்று முதல் லெஜண்ட் லீக் கங்குலி கேப்டனாக களம் காணும் காட்சி ஆட்டம்


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯C.N. Annadurai birth anniversary | Tamil Nadu Ministers pay tributes at Chennai

🎯Breakfast scheme should not be counted as freebie, charity or gift: M.K. Stalin 

🎯CUET UG 2022 Result LIVE Updates: Admission to DU set to be tough, 8,000 score 100 percentile in CUET’s English paper

🎯New Telangana Secretariat complex to be named after B.R. Ambedkar

🎯Media reports on judges’ criticism over new listing system ‘not correct’: Chief Justice of India

🎯PM Modi arrives in Samarkand for Shanghai Cooperation Organisation meeting, skips photo ops

🎯Tennis world reacts to Roger Federer's retirement

🎯Ervine fit to captain Zimbabwe at T20 World Cup





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...