Tuesday, December 13, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (14-12-2022)

                          பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 14.12. 2020.      புதன்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: இன்னா செய்யாமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

இன்னாசெய் தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயஞ் செய்து விடல்.                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
இன்னா செய்தவரை தண்டிப்பதற்கு சரியான வழி , அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.  இயற்கை ஓவியம் என அறியப்படும் நூல் ?

விடை  :  பத்துப்பாட்டு.

 2. இயற்கை இன்பக்கலம் என அறியப்படும் நூல்?
விடை :  கலித்தொகை.   
                
3. தமிழ் வேதம் என அறியப்படும் நூல்?

விடை : நாலாயிர திவ்ய பிரபந்தம்.

4.  குட்டித் தொல்காப்பியம் என்று அறியப்படும்  நூல்?

 விடை :  தொன்னூல் விளக்கம்.

5.  குட்டி திருவாசகம் என அறியப்படும்  நூல்?

விடை    :  திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி.

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌸 It is easier to destroy than to create

🌸 அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்
🌸 It takes two to make quarrel


🌸 இரு கை தட்டினால் தான் ஓசை .



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                                   🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான். ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்'' என்றார்.

மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றான்.

''கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்'' என்றார்.

''கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான் மாணவன்.

ஆசிரியர் மாணவர் கதை
''கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத்  தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார் சாக்ரடீஸ்.

''அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே...''

''ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்'' என்றார்.

''எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான்.

''மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்'' என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.

அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.





இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல் இல்லை - மத்திய அமைச்சர் தகவல்

🎯பல்கலை. வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா - கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

🎯கலை, அறிவியல் படிப்புக்கான பருவத்தேர்வு நடத்தக்கூடாது; கல்லூரிகளுக்கு உத்தரவு

🎯 இன்று அமைச்சராக உதயநிதி ஸ்டாலின்

🎯கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு பணி முன்னுரிமை நிராகரிப்பு

🎯ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி பார்லி.,யில் நிர்மலா சீதாராமன் தகவல்.

🎯‘மத்திய பல்கலை.களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான 3,011 பேராசிரியப் பதவிகள் நிரப்பப்படவில்லை’

🎯இந்திய எல்லையில் நிலைமை சீராக உள்ளது: மோதலுக்குப் பிறகு சீனா விளக்கம்

🎯ரூ.20 லட்சம் பரிசுத் தொகையுடன் சென்னை மாரத்தான்

🎯பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை | தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்ற இந்தியா

🎯இந்தியா – வங்கதேசம் டெஸ்டில் இன்று மோதல்

TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Old pension scheme no longer in force - Union Minister informs

🎯University. Bill to remove Governor from Chancellorship - Passed in Kerala Legislative Assembly

🎯 no term examination for arts and science studies; Order to Colleges

🎯 Udayanidhi Stalin as Minister today

🎯Job priority rejection for people of mixed marriage

🎯 Nirmala Sitharaman's information on Rs. 10 lakh crore loan waiver parley.

🎯'3,011 professorial posts for SC, ST, OBC category unfilled in Central Universities'

🎯Situation stable on Indian border: China explains after standoff

🎯Chennai Marathon with prize money of Rs.20 lakhs

🎯T20 World Cup for the Blind | India won three matches in a row

🎯India-Bangladesh Test clash today



🌸இனிய காலை வணக்கம் ....✍     
     🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் முகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் 
புதுக்கோட்டை மாவட்டம்-622502
அலைபேசி எண்: 9789334642 .                                       


Monday, December 12, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (13-12-2022)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 13/12/2022       செவ்வாய்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  வாய்மை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.                                    
                                                                                        உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் 
உள்ளத்துள் ளெல்லாம் உளன்*

                                                                         🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் ஆவான்


🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?

விடை: அக்னி

2. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?

விடை: கோயம்புத்தூர்

3. ஜனநாயகம் என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை : ஆபிரகாம் லிங்கன்

4. பரிணாமக் கோட்பாட்டின் தந்தை யார்?

விடை : சார்லஸ் டார்வின்

5. மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?

விடை : 1761

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Whatever you do , do it properly

🌷 செய்வதைத் திருந்தச் செய்

🌹 Alternatively known as a drop unknown is an ocean

🌹 கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 வாய்மையும் தூய்மையும் வாழ்வின் அணிகலன்கள் என்பதை அறிவேன்

🌷 வாழ்நாளில் தனி ஒழுக்கத்திலும் புற ஒழுக்கத்திலும் நேர்மையோடும் உண்மையோடும்  என்றென்றும் வாழ்வேன்.


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

காலம் பொன் போன்றது.*
🍁🍁🍁🍁🍁🍁

 👨ராமு, 👦சோமு இருவரின் வீடுகளும் அருகில் உள்ளது. இருவரும் நண்பர்கள், ஒரே பள்ளியில் கல்வி பயில்கின்றனர். ராமு தினமும் பள்ளியில் கற்ற கல்வியை வீட்டிலும் படிப்பவன், ஆனால் சோமு பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும்  படிக்க விருப்பமில்லாமல் விளையாடுவான். பள்ளித் தேர்வு நாள் வருவதற்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ராமு சோமுவிடம் "சோமு தேர்வு நாள் வருவதற்கு சில நாட்களே உள்ளது , அதனால் தேர்விற்கு படிக்கலாம்" என்று கூற, அதற்கு சோமு " நான் விளையாடச் செல்கிறேன் பின்பு படித்துக் கொள்கிறேன்" என்று படிப்பதற்கு காலம் தாழ்த்தி வந்தான். காலம் கழிந்தது தேர்வு நாள் மறுநாள் என்றானது. ராமு காலையிலிருந்து படிக்க ஆரம்பித்தான். சோமு தேர்வை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருந்தான். பலத்த ⚡இடி இடித்தது, 💨💨காற்று வீசியது, ⛈️மழை வரப் போகிறது என்பதை உணர்ந்து ராமு சோமுவிடம் " ராமு மழை வரப் போகிறது போலுள்ளது, மழை பெய்தால் 🌌🌒இரவில் 💡மின்சாரம் தடையாக வாய்ப்பு உள்ளது, எனவே விளையாடாமல் படிக்க வா சோமு" என்று கூற, சோமுவோ "⛈️மழை ஒன்றும் வராது "என்று கூறி  விளையாடிக் கொண்டிருந்தான். பலத்த காற்றுடன் ⛈️மழை பெய்ய இரவு நேரத்தில் 💡மின்சாரம் தடையானது. அப்போது தான் சோமு "நான் படிப்பதற்கு காலம் தாழ்த்தியது தவறு, ராமுவைப்போல் தினமும் படித்திருந்தால் நாளை தேர்வில் தேர்ச்சி பெறுமளவிற்காவது படித்திருந்திருக்கலாம், நான் நாளை தேர்வில் எப்படி படிக்காமல் தேர்ச்சி பெறுவது?, என்னால் படிக்க இயலவில்லையே!" என்று அழுது வருந்தினான். ராமு "அழாதே சோமு மெழுகுவர்த்தி ஏற்றி படி நானும் நான் கற்றதை உனக்கு கற்பிக்கிறேன்" என்று சோமுவிடம் கூறி ராமு படிப்பதற்கு உதவி செய்தான். மறுநாள் காலையில் இருவரும் பள்ளியில் தேர்வு எழுதினார்கள். பின் வீடுதிரும்பும் வழியில் ராமு "நான் இனிமேல் தினமும் படிப்பேன்  காலம் தாழ்த்த மாட்டேன், அன்றன்றைக்கு இருக்கும் படிப்பை, வேலையை அன்றைக்கே செய்து முடிப்பேன், காலமும் நேரமும் சென்றால் சென்ற காலமும் நேரமும் திரும்பப் பெற முடியாது என்பதை அறிந்தேன் , காலத்தின் அருமையை நான் உணர்ந்தேன்" என்று கூறி அவ்வாறே நடந்து ராமு, சோமு இருவரும் இன்பமாக வாழத் தொடங்கினார்கள்.
நீதி- " *காலம் பொன் போன்றது",* என்பதுபோல் காலத்தை சரியாக பயன்படுத்தி கிடைத்த நேரத்தில் ராமு படித்திருந்தால் தேர்வின் முந்தைய நாள் இரவில் அழ வேண்டியிருந்திருக்காது. ஆகவே நமக்கு கிடைத்த நேரத்தை வாய்ப்பை சரியாக பயன்படுத்தி எதற்கும்  அஞ்சாமல் துணிந்து வாழ்வில் வெற்றி பெறுவோம்


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நாளை பதவியேற்பு: கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்

🎯பழைய ஓய்வூதியத் திட்டம் 6 மாநிலங்களில் அமல்; தமிழகத்தில் எப்போது? - ராமதாஸ் கேள்வி

🎯7வது வந்தே பாரத் ரயில் பிப்., 15க்குள் முடிக்க திட்டம்

🎯‘திருக்குறளால் மட்டுமே இளைஞர்களை சரியான பாதைக்கு அழைத்து செல்ல முடியும்’ - உயர் நீதிமன்றம் கருத்து

🎯அனைவருக்கும் வீடு திட்டம் | தமிழகத்திற்கு இதுவரை ரூ.11,260 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு தகவல்

🎯 பாலாற்றில் வெள்ளம். 30 கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை.

🎯 26 மாவட்டங்களில் என்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

🎯 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு என மத்திய அரசு தகவல்

🎯 பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதுமில்லை மத்திய அரசு நிதித்துறை இணைஅமைச்சர் தகவல்.

🎯 நிலவிலிருந்து பூமி திரும்பியது நாசாவின் ஆய்வுக்களம்

🎯உலகின் சக்திவாய்ந்த நாடாக உருவாகிறது இந்தியா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கருத்து

🎯நிச்சயமாக எங்களது ஆக்ரோஷ ஆட்டத்தை பார்ப்பீர்கள்: கே.எல்.ராகுல் உறுதி - ட்ரோல் செய்த ரசிகர்கள்

🎯ரஞ்சிக் கோப்பை இன்று தொடக்கம்: சென்னை, கோவையில் ஆட்டம்

🎯இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி: 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றி

🎯உலக கோப்பை கால்பந்து: முதல் அரை இறுதியில் அர்ஜென்டினா-குரோஷியா இன்று பலப்பரீட்சை




TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Chepakkam - Tiruvallikeni MLA. Udhayanidhi Stalin to be sworn in as minister tomorrow: Governor RN Ravi will administer the oath of office

🎯Old pension scheme to be implemented in 6 states; When in Tamil Nadu? - Ramadoss Question

🎯7th Vande Bharat train scheduled to be completed by Feb. 15

🎯' Only Tirukural can lead the youth to the right path' - High Court opined

🎯House for All Project | 11,260 crore allocation for Tamil Nadu so far: Central Govt

🎯 Flooding in Bala. Flood warning in 30 villages.

🎯 Heavy rain will fall in 26 districts, according to Meteorological Department

🎯 Central government information that 41.5 crore people have been rescued from poverty

🎯 There is no plan to re-introduce the old pension scheme, Union Finance Minister said.

🎯 Earth returned from the moon is NASA's probe

🎯India is becoming a powerful country in the world: UN. Russia's opinion on the Security Council

🎯You will definitely see our aggressive play: KL Rahul assured - trolled fans

🎯Ranji Trophy Starts Today: Matches in Chennai, Coimbatore

🎯2nd Test match between England and Pakistan: England team won by 26 runs

🎯World Cup Football: Argentina-Croatia in the first semi-final is a test today







இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

Sunday, December 11, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (12-12-2022)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 12.12. 2022.       திங்கட்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்:அதிகாரம்:அறிவுடைமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு . 
                                                                                                                                                                                                                                  
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
எந்த ஒரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமை ஆகும்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்தியாவில் பெரிய கடல் பாலம் எது?
விடை  :  அண்ணா இந்திரா காந்தி பாலம் (தமிழ்நாடு)

 2. இந்தியாவின் மிகப்பெரிய கோளரங்கம்?
விடை : பிர்லா கோளரங்கம் (கொல்கத்தா)                 
3 ) இந்தியாவின் மிக உயரமான அணை எது?
 விடை : டெஹ்ரி அணை (உத்தரகண்ட்)

4. இந்தியாவில் மிக உயர்ந்த நுழைவாயில் வழி எது?
 விடை : புலாண்ட் தர்வாஸா

5.  இந்தியாவில் வீர தீரம் மிக்க செயலுக்கான உயர்ந்த விருது எது?
விடை    : பரம்வீர் சக்ரா.

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌸Jack of all trade is master of none

🌸 பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்

🌸 Justice delayed is justice denied

🌸 தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்







 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சொல்லும், செயலும் சிறந்த மனிதருக்கான எடுத்துக்காட்டு என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் சொல்வது போலவே நடத்தையிலும் பிறர் போற்றும் வண்ணமே நடந்து கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்...







இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯உத்தர பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் சிலையை திறந்துவைத்தார் ஸ்டாலின்

🎯மாணவர்களிடம் மதத்தை திணிக்க நினைக்கிறார்கள்; ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கை மிகவும் பேராபத்தானது: ஆசிரியர் கூட்டமைப்பு பிரசாரம்

🎯இமாச்சல பிரதேச புதிய முதல்வர் சுக்விந்தர்சிங் சுக்கு-க்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து

🎯தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள திட்ட மாதிரியை பின்பற்ற வேண்டும்: மராட்டிய முதல்வருக்கு சுற்று சூழல் ஆய்வாளர்கள் வலியுறுத்தல்

🎯 குஜராத் முதல்வராக இன்று பங்கேற்கிறார் பூபேந்திர படேல்; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு.

🎯 உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபாங்கர் தாத்தா இன்று பதவியேற்பு

🎯நிலவுக்கு ஏவப்பட்டது ஜப்பானின் லேண்டர் கருவி

🎯இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவராக தடகள வீராங்கனை பி.டி. உஷா தேர்வு

🎯 India vs Australia மகளிர் டி20 | பரபரப்பான சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி: ஆஸ்திரேலியாவின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி.

🎯402 சர்வதேச போட்டிகள்... 11,778 ரன்கள்… 148 விக்கெட்டுகள் - யுவராஜ் சிங் பிறந்தநாள் பகிர்வு







TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Stalin inaugurated the statue of Bharatiyar in Kashi, Uttar Pradesh

🎯They try to impose religion on students; The National Education Policy of the Union Government is very ambitious: the teachers' union campaign

🎯 Prime Minister Modi and Tamil Nadu Chief Minister M.K.Stalin congratulate the new Chief Minister of Himachal Pradesh, Sukhwindersingh Sukku.

🎯Tamil Nadu should follow the project model created by the government: Environmentalists urge the Chief Minister of Maharashtra

🎯 Bhupendra Patel will participate today as Chief Minister of Gujarat; PM Modi, Amit Shah will participate.

🎯 Dibangar Datta will take oath as Supreme Court judge today

🎯Japan's lander launched to the moon

🎯The first woman president of the Indian Olympic Association was athlete P.T. Usha exam

🎯 India vs Australia Women T20 | India win thrilling Super Over: Australia's winning streak ends.

🎯402 Internationals... 11,778 runs... 148 wickets - Yuvraj Singh Birthday Share













இனிய காலை வணக்கம் ....✍     
         
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Wednesday, December 7, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (08-12-2022)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 08.12.2022.    வியாழக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: வாய்மை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.. "தண்ணீர் தண்ணீர்" எனும் நாடக நூலின் ஆசிரியர் யார்?

*விடை* : கோமல் சுவாமிநாதன்

2. கம்பராமாயணத்தில் உத்தரகாண்டத்தைப் பாடியவர் யார்?

*விடை* : ஒட்டக்கூத்தர்

3. "ஆத்திச்சூடி வெண்பா" நூலை இயற்றியவர் யார்?

*விடை* : அசலாம்பிகையார்

4. "பராபரக் கண்ணி" - பாடியவர் யார்?

*விடை* : தாயுமாணவர்

5. "புத்தரது ஆதிவேதம்" - என்ற நூலை எழுதியவர் யார்?

*விடை* : அயோத்தி தாசர்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 All covt, all loss
🌹பேராசை பெரு நஷ்டம்

🌷 Art is long and life is short
🌷 கல்வி கரையில, கற்பவை நாள் சில




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

கோடாரி உத்தி


மரம் வெட்டும் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி அந்த நிறுவனத்தின் முதலாளியைப் பார்க்கப் போனான். ""என்ன வேண்டும்?'' என்று அவர் கேட்டார். ""எனக்கு நியாயம் வேண்டும்'' என்றான் தொழிலாளி. ""ஏன் உனக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?'' என முதலாளி கேட்டார். ""ஆமாம். 5 ஆண்டுகளாக நான் இங்கே மரம் வெட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் வாங்கும் சம்பளத்தைவிட 2 மடங்கு சம்பளத்தை 6 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு தொழிலாளிக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இது என்ன நியாயம்?'' என்று கேட்டான். ""அவன் ஒரு நாளில் நிறைய மரம் வெட்டுகிறான். உன்னால் அப்படி வெட்ட முடியவில்லை. நாங்கள் வேலைத் திறத்தையே பார்க்கிறோம். வேலை செய்த ஆண்டுகளை அல்ல. நீயும் நிறைய மரம் வெட்டு. சம்பளம் தருகிறோம்'' என்றார் முதலாளி. ""எப்படி நிறைய மரம் வெட்டுவது? என்ன முயன்றாலும் முடியவில்லையே'' என்றான் தொழிலாளி. ""நீ புதிதாக வந்த தொழிலாளியைப் பார். எப்படி அதிக மரம் வெட்டுவது என்று அவனை கேள்'' என்றார் முதலாளி. முதலாளியின் ஆலோசனையை ஏற்று அந்த பழைய தொழிலாளி, புதிய முதலாளியை சந்தித்தான். என்னால் அதிக மரங்களை வெட்ட முடியவில்லை. உன்னால் எப்படி முடிகிறது? அந்த ரகசியத்தை எனக்குச் சொல்வாயா? என்று பழைய தொழிலாளி கேட்டான். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மரத்தை வெட்டிய பிறகும் நான் 2 நிமிடம் வேலையை நிறுத்துகிறேன். அப்போது மரம் வெட்டும் கோடாரியை நான் கூர்மைப்படுத்திக் கொள்கிறேன். அதற்குப் பின் அடுத்த மரத்தை வெட்டப் போகிறேன் என்று பதில் சொன்னான் புதிய தொழிலாளி. பழைய தொழிலாளியும் அப்படியே செய்தான். நிறைய மரங்களை வெட்டினான். நிறைய சம்பளம் பெற்றான்.

நீதி: எந்தத் தொழிலை நீங்கள் செய்கிறீர்களோ அதற்காக புதிய உத்திகளுடன் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்கிடுக: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 

🎯வனப்பகுதி மேம்பாட்டிற்காக தமிழக அரசுக்கு ரூ.2,000 கோடி சிறப்பு நிதி தேவை: மாநிலங்களவையில் கனிமொழி சோமு கோரிக்கை

🎯“உலகின் மிக அழகிய மாநகராக டெல்லியை மாற்றுவோம்” - வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மி

🎯 உலக சாம்பியன்ஷிப் வெள்ளி வென்ற மீராபாய் சானு

🎯வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இன்று முதல் 3 நாள் மழை கொட்டும்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

🎯 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

🎯வட தமிழகம் நோக்கி வரும் மாண்டஸ் புயல் - புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் எச்சரிக்கை!!

🎯 உலகில் அதிகாரம் மிக்க பெண் பட்டியலில் நிர்மலா சீதாராமன்

🎯 பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அறிவிப்பு

🎯புதிய மாவட்டத்தில் முதன்முறையாக ‘விசிட்’; தென்காசிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை: 1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.50 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்

🎯அவசர மருத்துவ பட்ட மேற்படிப்பு துவக்கம்: நாட்டிலேயே தமிழகத்தில் தான் முதன்முறை!

🎯குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் எகிப்து அதிபர் அல் சிசி - நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் தகவல்

🎯இந்தாண்டின் சிறந்த மனிதர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி: டைம் இதழ் தேர்வு

🎯5 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை கைப்பற்றியது வங்கதேசம்: ரோகித் போராட்டம் வீண்

🎯உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் சானு

🎯உலக கோப்பை கால்பந்து 2022: சுவிசை சுருட்டிய போர்ச்சுகல்: 21 வயது ராமோஸ் ஹாட்ரிக் சாதனை

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯UGC forms panel to work on textbooks in Indian languages

🎯Jallikattu hearing | Will be dangerous if court makes impression based on photographs, says Supreme Court

🎯Clean-up plank pays off, AAP wins landfill wards

🎯Delhi has shown that polls can be won by delivering on public services: CM

🎯Cyclone ‘Mandous’ brewing over the Bay likely to impact several parts of Tamil Nadu

🎯Put on hold the decision to withdraw minority scholarship for students of classes 1-8: Stalin to PM

🎯Central govt. to invest ₹ 2,000 cr to expand Coimbatore airport: Chamber

🎯Dropping Ronaldo purely 'strategic' says Santos

🎯Easwaran scores his second successive ton, Pujara hits fifty as India A reach 324/5 On Day 2

🎯India vs Bangladesh, 2nd ODI | Mehidy ton lifts Bangladesh to 271-7 against India

🎯Eden Hazard retires from international football after Belgium’s World Cup exit





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Tuesday, December 6, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (07-12-2022)

                           பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 07.12. 2022.       புதன்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்:அதிகாரம்: நட்பு 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு
                                                                                                                                                                                                                               
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
       
         முகம் மட்டும் மலரும் படியாக நட்புச் செய்வது நட்பன்று நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.

   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ? 

விடை:ஈரல்

2.சாதரண உப்பின் இரசாயன பெயர் என்ன ?

விடை : சோடியம் குளோரைடு

3.தமிழக கவர்னர் வசிக்கும் இல்லத்தின் பெயர் ?

விடை : ராஜ்பவன்

4.நீரின் ஒளிவிலகல் எண்
  
விடை: 1.33

5.காசநோய்க்கான பி.சி.ஜி. தடுப்பூசி குழந்தை பிறந்த எத்தனை மாதங்களுக்குள் போடப்பட வேண்டும்? 

விடை : 1 மாதத்திற்குள்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌹There is no medicine for fear
🌹அச்சத்திற்கு மருந்தில்லை.

🌷No man can be a good ruler unless he has first been ruled
🌷அடங்கத் தெரியாதவனுக்கு ஆளத் தெரியாது.


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

சொல்லும் செயலும் சிறந்த மனிதருக்கான எடுத்துக்காட்டு என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் சொல்வது போலவே நடத்தையிலும் பிறர் போற்றும் வண்ணமே நடந்து கொள்வேன்.




 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

எதிர்பாரத விஷயங்களை எதிர்கொள்

ஒரு காட்டுக்குள்ள இரண்டு அணில்கள் நண்பர்களாக வாழ்ந்து  வந்துச்சாம், ஒன்னு பேரு புத்தி, இன்னொன்னு பேரு மத்தி, புத்தி எப்போதும் கடவுள் பக்தியோட இருப்பானாம், மத்தி அதுக்கு அப்படியே எதிர்மறையான எண்ணம் உள்ளவன், அதாங்க கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.

எப்போதும் புத்தி கடவுளுக்கு நன்றி சொல்லிகிட்டே இருப்பான், எதாவது நன்மை நடத்​தா​லும் தீமை நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே-ன்னு  கடவுளுக்கு நன்றி சொல்வானாம்,

​எதோ ஒரு நன்மை நமக்கு இருக்குன்னு  சொல்லிட்டு தனக்கு தானே சமாதானம் செய்துகொண்டு போய்விடுவானாம்,

நம்மையும் மீறி ஏதோன்னு நடக்குத்துன்னு புத்தி எப்போ​தும் நம்புவான்​, ​அதை பார்த்து மத்தி கேலி பண்ணி  ஏளனமாய் சிரிப்பானாம். 

உன்னை மீறி வாழ்க்கையில  என்னடா ​நடக்கப்போவுது, நீ என்ன நினைக்கிறியோ அதுதான் வாழக்கையி​லும் ​நடக்கும்-ன்னு  மத்தி சொல்லிகிட்டே இருப்பானாம்.  

ஒரு நாள் ரெண்டுபேரும் ஒரு அழகான காட்டுக்குள்ள பழங்களை பறித்து  தின்ன போனார்களாம், இங்கேயும் அங்கேயும் ஓடியாடி அந்த மரத்துல விளையாடி கொண்டிருந்தார்களாம், எதிர்பாராத விதமா புத்தி கீழே விழுந்துவிட்டான், முதுகில் பலத்த அடி, சின்னதா ஒரு காய​மும் கூட, வலி தாங்காம முதுகுல தேய்ச்சுகிட்டு, எதோ ஒரு நல்லதுக்கு தான் நாம கீழே விழுந்துட்டோம், நல்லவேளை நமக்கு பெருசா எதுவும் ​அடி படலை... எல்லாம் நமைக்கே-ன்னு சொல்லிட்டு அடிபட்ட இடத்துல தேய்த்து கொண்டு-​டிருந்தான்​, நன்றி கடவுளே தலைக்கு வந்தது தலை பாகையோட போச்சுன்னு சொல்லிட்டு மேல பார்த்தானாம்......

புத்தி  விழுந்ததை பார்த்து மத்தி  ​கெக்கே.... கெக்கே ன்னு ​சிரித்து கொண்டு ஏளனமாய் கேலி செய்தானாம் , நீ ஒழுங்கா மரத்தை பிடிக்காம கவனக்குறைவா விழுந்ததுக்கு ஏன்டா கடவுளுக்கு நன்றி சொல்றே.... னுக்கு கேலி செய்தானாம்......

டேய் மத்தி நான் கீழே விழுந்தவுடன் செத்து போய் இருக்கலாம், ஆனா சின்னதா அடிபட்டத்தோட தப்பிச்சுகிட்டேன், இதிலிருந்து நம்மள சுத்தி எது நடக்குதோ எல்லாம் நன்மைக்கே​,​ நம்மளையும் மீறி ஏதோ நம்மளை இயக்குதுன்னு நான் முழுமையா நம்புறேன்.... இதைவிட சிறந்த உதாரணம் நான் உனக்கு காட்டமுடியாதுன்னு சொல்லிட்டு மத்தியை மேல நிமிந்து பார்க்குது..... அவோலோதான்.... ஒரு வினாடி தலையே சுத்திருச்சு.....

மத்தி அணிலோட பக்கத்துல ஆவோலை பெரிய பாம்பு வாயை ஆ...ன்னு ​பிடிக்க ஆயத்தமா இருக்கு... டேய் மத்தி  மத்தி  ​கிழே வாடா ன்னு ​கத்துறதுக்குள்ள லபக்குன்னு அந்த பாம்பு மத்தியை முழுங்கிடுச்சு....... ஒரு நிமிடத்துக்குள்ள எல்லாம் மாயமாய் நடந்து முடிந்தது,

​அதை பார்த்​த ​புத்திக்கு​ ​கால் எல்லாம் வெட வெட-ன்னு ஆட ஆரம்பிச்சுடுது..... என் நண்பன் என் கண் முன்னாடி இப்படி போய்ட்டேனே....ன்னு பயங்கரமா அழுக ஆரம்பிச்து புத்தி.... இவோல பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி ​சொன்னான்​.

நம்மை  சுற்றி நடக்குற எல்லா இன்ப துன்பங்களுக்கும் எதோ ஒரு காரணம் இருக்கும், எல்லாம் நமைக்கே  சொல்லிட்டு மத்தி​​யை நினைத்து சோகத்துடன் காட்டுக்குள் சென்று விட்டது.
இதுபோல தான் நம்ம வாழக்கையும், திட்டமிடல் எப்போதும் இருக்கணும், அதே போல ரொம்ப கவனமாகவும் இருக்கணும், அதையும் மீறி ஏதோ  ஒன்னு நம்மளை இயக்குது, எப்போவும் முன்னெச்செரிக்கையா இருக்கணும்... எதிர்பாராத விஷயங்களை கண்டிப்பா நாம எதிர்கொண்டுதான் ஆகணும்.

இப்படி நடந்து போச்சேன்னு உட்கார்ந்து வருத்தபடுவதை விட தலைக்கு வந்தது தலை பாகையோடு போச்சுன்னு எல்லாம் நன்மைக்கென்னு நமபிக்கையோட நகர்தல் நலம்.

எதிர்பாரத விஷயங்களை எதிர்கொண்டு வாழ்ந்துதான் பார்ப்போமே......


வளையும் தன்மையுள்ள ஒரு மரம் புயலில் சிக்கினாலும் அதற்கு ஒன்றும் ஆகாது. அதேபோல், உங்களை மீறி சில மாற்றங்கள் நடக்கும்போது உங்களாலும் அதற்கு “வளைந்து” கொடுக்க கற்றுக்கொள்ள முடியும்.  


எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் எப்போதுமே கெட்டதாக இருக்கும் என்று சொல்லமுடியாது. 


நாம் நினைக்கும் விதத்தில்தான் நம் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நாம் எல்லாரும் ஆசைப்படுவோம். ஆனால், அப்படி நடக்கவே நடக்காது.

“மன உறுதியோடு இருக்குறது நம்ம கையிலதான் இருக்கு. இப்போ இருக்குற சூழ்நிலைமையில என்ன நல்ல விஷயங்கள் இருக்குதுனு பாருங்க”


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக ரயில் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தென்காசி பயணம்: மதுரையில் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார்

🎯 என்சிசி தேசிய விருது பெற்ற சென்னை மாணவருக்கு பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு

🎯 பிளஸ் டூ மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்ட புதிய செயல் திட்டங்கள் என பள்ளிக் கல்வித்துறை தகவல்

🎯 நேரடி பட்டதாரிகளையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு

🎯சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு

🎯அம்பேத்கர் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி மலரஞ்சலி

🎯பனிமூட்டம் காரணமாக காலதாமதத்தை தவிர்க்க ரயிலின் வேகத்தைக் கூட்டும் இந்திய ரயில்வே

🎯ஆசிரியர் நியமன நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

🎯ரெட் அலர்ட்: தமிழகத்தில் டிச.9-ல் பரவலாக அதி கனமழைக்கு வாய்ப்பு

🎯ஒற்றை சாளர இணையதள பிரச்சினை: மனை, கட்டிடங்களுக்கு டிடிசிபி அனுமதி பெறுவதில் சிக்கல்

🎯 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம் 16 மசோதா கலை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

🎯 ரயில்களின் வேகத்தை மணிக்கு 75 கிலோமீட்டர் வேகம் அதிகரிக்க முடிவு 

🎯FIFA WC 2022 | போர்ச்சுகல் அணியின் புதிய ஹீரோ - 21 வயது வீரரின் ஹாட்ரிக் கோல் மழையால் காலிறுதிக்கு முன்னேற்றம்

🎯 செஸ் -ஆதித்யா மிட்டல் புதிய கிரான் மாஸ்டர்

🎯உலகக்கோப்பை கால்பந்து 2022: சுவிட்சர்லாந்து அணியை 1-6 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுகல் அணி









TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Governor, CM appeal people to contribute to Armed Forces Flag Day Fund

🎯Online OPD registration resumes at AIIMS

🎯Final turnout in Gujarat Assembly polls stands at 64.33%

🎯Winter Session loaded with 25 Bills, no time for debate, says Opposition

🎯UPSC Civil Services Mains Results 2022 declared on December 6

🎯Cyclonic storm may bring heavy rain in north T.N. tomorrow

🎯T.N. government to receive individual representations from 10,000 contract nurses on pay increase

🎯Tamil Nadu ranks 27th in the country in providing quality education, laments Madras High court.

🎯Shall we dance? Brazil cop flak, praise for World Cup shenanigans

🎯FIFA World Cup 2022 | Ronaldo eyes quarters as Morocco dares to dream

🎯IND vs BAN, 1st ODI | Miraj and Mustafizur’s 51-run final wicket stand helps Bangladesh edge out India by 1 wicket

🎯IOC warns Afghanistan over women's sports and Olympics














🌸இனிய காலை வணக்கம் ....✍     
         
இரா . மணிகண்டன் முகலைத் தமிழாசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
                                   

Monday, December 5, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (06-12-2022)

                           பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 06.12. 2022.       செவ்வாய்க்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்:அதிகாரம்:.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறைஎன்று வைக்கப் படும்.
                                                                                                                                                                                                                               
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
       
         நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்குத் தலைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான்.

   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.ஒசோன் படலம்’ எதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது ?

 விடை :புறஊதாக் கதிர்வீச்சு

2.புவியின் வளிமண்டலத்தில் நைட்ரஜனின் சதவீதம் எவ்வளவு ?
 
விடை :80 சதவீதம்

3.மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் ? 

விடை: கீழாநெல்லி

4.தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?

விடை: 14.01.1969

5.NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?

விடை : ஃபின்லாந்து


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌹There is no medicine for fear
🌹அச்சத்திற்கு மருந்தில்லை.

🌷No man can be a good ruler unless he has first been ruled
🌷அடங்கத் தெரியாதவனுக்கு ஆளத் தெரியாது.


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

சொல்லும் செயலும் சிறந்த மனிதருக்கான எடுத்துக்காட்டு என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் சொல்வது போலவே நடத்தையிலும் பிறர் போற்றும் வண்ணமே நடந்து கொள்வேன்.




 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
முயலின் தன்னம்பிக்கை
--------------------------------------------

ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது..

அதற்கு காரணம்?!!!.

ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான்.
இன்னொரு பக்கம் நாய்.... மறுபக்கம் புலி..
என எந்தப்பக்கம் திரும்பினாலும் முயலுக்கு எதிரிகள்....!!.


சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது.
எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது.

இறுதியாக....
.
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல்
.
அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவிகுதித்ததை முயல் பார்த்தது .

உடனே முயல் சிந்தித்தது...

அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா??

என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கை கொண்டால் நாமும் வாழலாம் என்று மனமாற்றம் கொண்டது .....
“தற்கொலை செய்து கொள்வதற்கும் வலிமையான மனம் வேண்டும்" என உணர்ந்தது

அவ்வளவு வலிமையான மனமிருக்கும் நாம் ஏன் ?சாகனும்
வாழ்ந்துதான் பார்ப்போமென்று ..”காட்டுக்குள் மீண்டும் ஓடி ஒளிந்தது".


கதை சொல்லும் நீதி மரணத்தை தேடி நீ ஓடாதே !மரணம் உன்னை தேடும் வரை வாழ்ந்துவிடு ! மரணமே வந்தாலும் எதிர்க்க துணிந்து விடு !



இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் மீண்டும் தேர்வு.

🎯ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவராக ராஜிவ் ரஞ்சன் தேர்வு.

🎯ஜி 20 மாநாடு; பிரதமர் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் துவங்கியது.

🎯ஒன்றிய அரசுப் பணியில் 27% இடஒதுக்கீடு இருந்தும் ஓபிசி-யில் 20% ஏன்?... பணியாளர் துறை ஆண்டறிக்கையில் தகவல்

🎯ஆர்வம் காட்டும் மக்கள்!: தமிழகம் முழுவதும் மின் இணைப்பு எண்ணுடன் ஒரே வாரத்தில் 54.55 லட்சம் ஆதார் எண் இணைப்பு..!!

🎯பிஃபா கால்பந்து போட்டிக்கான தீம் பாடலை உருவாக்கிய தமிழர்கள்: தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கௌரவித்த கத்தார் அரசு..!!

🎯நான்காவது முறையாக வீராணம் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

🎯வானிலை முன்னறிவிப்பு: டிச.8-ல் தமிழகத்தின் சில இடங்களுக்கு ரெட் அலர்ட்

🎯ENG vs PAK | தகர்க்கப்பட்ட கணிப்பு - முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 74 ரன்களில் வீழ்த்தியது இங்கிலாந்து

🎯200 மில்லியன் யூரோ ஒப்பந்தம்: சவுதி அரேபியாவின் Al-Nassr கிளப்பில் ரொனால்டோ இணைந்ததாக தகவல்









TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 Baruch re-elected as National Conference Party President.

🎯Rajiv Ranjan elected as United Janata Dal Party President.

🎯G20 Conference; All party meeting started under the chairmanship of the Prime Minister.

🎯In spite of 27% reservation in united govt jobs why 20% in OBC?...Information in personnel department annual report

🎯Interested People!: 54.55 Lakhs Aadhaar Number Linked with Electricity Connection Number across Tamil Nadu in one week..!!

🎯Tamils created theme song for FIFA football tournament: Qatar government honored by airing it on national television..!!

🎯Viranam lake filled for fourth time: Farmers happy

🎯Weather Forecast: Red Alert for some places in Tamil Nadu on Dec.8

🎯ENG vs PAK | Prediction Shattered - England beat Pakistan by 74 runs in first Test

🎯200 million euro deal: Ronaldo reportedly joins Saudi Arabia's Al-Nassr club














🌸இனிய காலை வணக்கம் ....✍     
         
இரா . மணிகண்டன் முகலைத் தமிழாசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
                                   


தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...