Tuesday, March 10, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 11.03. 2020.       புதன்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: இறைமாட்சி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு .                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை , ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்..
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயர்ந்த மலை?
விடை  :  சேர்வராயன் மலை.
 2.  உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துபவை?
விடை : தாது உப்புக்கள்..                   
3 உடல் உறுப்பிலிருந்து இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு வருவது?
விடை : சிறைகள்.
4.ஜீன் " என்பது எதனைக் குறிக்கிறது?
 விடை : பரம்பரைக் காரணி
5.  மனிதனின் மார்பில் உள்ள விலா எலும்பின் எண்ணிக்கை?
விடை    : 20 எறும்புகள்.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
 🌸Take time by the fore lock

🌸 காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
🌸 The bough that bear most hang lowest

🌸 நிறை குடம் தளும்பாது




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு :
தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.



மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.



அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறல்லாம்



இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯🎯 ம.பி. மில் கவிழ்கிறது காங்கிரஸ் அரசு 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா.
🎯 ஈரானில் இருந்து 58 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.கரோனா வைரஸூக்கு ஈரானில் ஒரே நாளில் 54 பேர் பலி.
🎯 மானியக் கோரிக்கைகள் மீது இன்று முதல் பேரவையில் விவாதம்
🎯 மார்ச் 17 இல் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி.
🎯 திறந்தநிலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் மார்ச் 15 இல் நடக்கிறது.
🎯 தொடக்கப்பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் தேவை பட்டியலை அனுப்ப உத்தரவு.
🎯 அரசு பள்ளிகளுக்கு ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை.
🎯 இறை வணக்கத்தின் போது கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு  அறிவுரை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்  என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே. ஏ .செங்கோட்டையன் அறிவிப்பு.
🎯 கோவிட்- 19 வைரஸ் பாதிப்பை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு சோப்பு வழங்க திட்டம் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🎯 பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31ல் தொடக்கம்.
🎯 இளம் விஞ்ஞானிகள் திட்டம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இஸ்ரோ அறிவுறுத்தல்.
🎯 தஞ்சை ,கரூர் ,புதுகை உட்பட 8 மாவட்டத்தினர் பயன்படும் வகையில் ரூ 5 கோடியில் உலகத்தரத்தில் திருச்சியில் விரைவில் துப்பாக்கி சுடும் தளம்.ரைபிள் கிளப்பில் உறுப்பினராக காவல் ஆணையர் அறிவிப்பு.
🎯 கேரளத்தில் புதிதாக எட்டு பேருக்கு கரோனா : கல்வி நிலையங்கள் திரையரங்குகள் மூடல். கர்நாடகத்தில் மேலும் 3 பேர் பாதிப்பு. சபரிமலைக்கு வரவேண்டாம் என பக்தர்களுக்கு வேண்டுகோள்.
🎯 ஆஸ்திரேலியாவின் உயர்ந்த சிகரத்தில் ஏறி இந்திய பெண் சாதனை.
🎯 கரோனா வைரஸ் பரவல் இத்தாலி முழுவதும் போக்குவரத்துக் கட்டுப்பாடு.
🎯 ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி போட்டி இறுதிச் சுற்றில் விகாஸ் கிருஷண்லவ்லினா, அமித்துக்கு  வெண்கலம்.
🎯 ரஞ்சிக் கோப்பை இறுதி ஆட்டம் சௌராஷ்டிரா அதிக்கம் 384/8.
🎯 இந்தியாவில் மகளிர் கால்பந்து வலுவான கட்டமைப்பு ,புதிய பயிற்சியாளர்கள் தீவிரம்.


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Scindia meets Modi, quits Congress.
🎯 COVID-19 cases surge in country. Kerala ,Karnataka and Maharashtra report fresh cases.
🎯 LPG delivery men admit to overcharging.
🎯 First sample for COVID- 19 patient tests negative. Seven close contacts of the man being treated in hospital also test negative.
🎯 Old age pension norms relaxed. Beneficiaries get a monthly financial assistance of Rs 1000.
🎯 IAF plane returns from Iran with 58 Indians.
🎯 Ton -up vasavada consolidates saurashtra. Kisse 142 run stand for the six wicket with pujara frustrates Bengal as the host reaches 384 for eight.













🌸இனிய காலை வணக்கம் ....✍     
         
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சி மாவட்டம் - 621005
அலைபேசி எண் : 9789334642.
                                   



No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...