Sunday, March 8, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 09.03. 2020.       திங்கட்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: புகழ்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஒன்றா  உலகத்து  துயர்ந்த  புகழல்லாற்
பொன்றாது  நிற்பதொன்  றில் .                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
விடை  :  கங்கை.
 2. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
விடை : பி.டி .உஷா.                   
3. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர்
விடை : அகிலன்.
4.இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
 விடை : ஞானபீட விருது.
5. இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது?
விடை    : நீலகிரி.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
 🌸Least said, sooner mended

🌸 யாகாவாராயினும் நாகாக்க

🌸 Let by gones be by gones

🌸 போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
*வாழ்க்கை தத்துவ கதைகள்*

*யாரையும் குறைவாக எண்ணாதீர்கள்!!!*

விஞ்ஞானி ஒருவர்,

தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது.

கடை ஏதும் இல்லை. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்.

அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்கக் போகும் போது. கால் இடறி கீழே விழுந்தார். கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது.

இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தார்.

அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான். அந்த வழிப்போக்கன், இவரைப் பார்த்து ஐயா என்ன ஆச்சு என்றான். இவரோ, இவனிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது?’ என்று எண்ணியபடி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம் என்றார்.

அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான். அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.

‘இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவனை இறங்க சொல்லலாம்’ என்று எண்ணி அவனிடம், ‘நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்துத் தாருங்கள்’- என்றார் விஞ்ஞானி.

‘ஒ! இது தான் உங்கள் பிரச்சனையா? நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை. ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது. மூன்று சக்கரங்களில் இருந்தும் தலா ஒரு போல்ட்களை கழட்டி இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியை தயார் செய்து கொள்ளுங்கள், பிற்பாடு அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு ஓட்டிச் சென்று 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்’- என்று சொன்னார் வழிப்போக்கர்.

‘நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும், எனக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே! இவரைப் போய் குறைத்து எடை போட்டு விட்டோமே!’ என்று தனக்குள் கூறிக் கொண்டு தலை குனிந்தார் விஞ்ஞானி.

நீதி: *யாரையும் குறைவாக எண்ணக்கூடாது*

ஆம்நண்பர்களே,

உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;

உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு;

ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம். அதே ஒரு தீக்குச்சியினால், பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.

நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம். எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.

*சிந்தித்து செயலாற்றுங்கள்*


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯🎯  தமிழகத்தில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் 27 பேர்.சரவணா பாதிப்புக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்தவர்கள்.
🎯  மானிய கோரிக்கைகளுக்கு ஒப்புதல் : இன்று முதல் சட்டப்பேரவை கூட்டம்.
🎯  கணக்கீட்டாளர் ,இளநிலை உதவியாளர் பணி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
🎯  அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமலில் உள்ளதா என உயர்நீதிமன்றம் கேள்வி.
🎯  திருச்சியில் மார்ச் 15ஆம் தேதி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு.
🎯  பிளஸ் 2 முக்கியப் பாடத் தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்.
🎯 ரூ 1 கோடியில் இந்திய உணவுக் கழகம் சார்பில் நாட்டிலேயே முதன்முறையாக தஞ்சையில் உணவு அருங்காட்சியகம். பண்டைய பொருட்கள்,அரியவகை நெல் ரகங்களை தானமாக அளிக்க வேண்டுகோள்.
🎯  கோவிட் -19 காய்ச்சல் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
🎯  உலக கோப்பை டி20 போட்டி ஐந்தாவது முறையாக ஆஸ்திரேலியா மகளிர் உலக சாம்பியன்.  85 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
🎯  பெடரேஷன் கோப்பை டென்னிஸ் வரலாறு படைத்த இந்திய மகளிர்.



TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯🎯 Five new COVID -19 cases in Kerala ; total in India now 39. Family did not report travel to Italy, evaded airport scanners.
🎯  'Over 40 % government schools don't have power playgrounds' parliamentary panel identifies critical infrastructure gaps.
🎯  18 from tamilnadu standard on ship.
🎯  Three patients under hospital isolation says  Health Minister. Till date 1,22,318 passengers have been screened at airports in the state.
🎯  Unused classrooms in government schools may           become dining hall for mid -day meals. Social welfare and school education departments. Hold meeting to discuss proposal.
🎯  Over 40% government schools don't have electricity.
🎯  Australia runs away with cup as India crumbles on the big stage. Healy and Mooney set up a daunting target ; women in blue flounder in the chase, lose by a mile. T20 world cup.











🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சி மாவட்டம் - 621005
அலைபேசி எண் : 9789334642.
                                   



No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...