Wednesday, June 29, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் (30/06/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 30/06/2022       வியாழக்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  நட்பு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.    
முகநக நட்பது  நட்பன்று நெஞ்சத்              தகநக நட்பது நட்பு                           
                                                                                

                                                                  🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

முகம் மட்டும் மலரும் படியாக நட்பு செய்வது நட்பன்று , நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பாகும்



🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?

விடை : பெங்களூர்

2.  உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு?

விடை : கியூபா

3. தேசிய மாசு தடுப்பு தினமாக கடைபிடிக்கக்கூடிய நாள்?

விடை : டிசம்பர் 2 ந்தேதி

4. பருத்தி விளையும் மண் எது?

விடை : கரிசல் மண்

5. அதிக மக்கள் அடர்த்தி கொண்ட கண்டம் எது?

விடை : ஐரோப்பா

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 It is not wise to talk more

🌷அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல

🌹 Freedom is my birth right

🌹 சுதந்திரம் எனது பிறப்புரிமை



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 பணிவும் துணிவும் பண்புள்ளவர்களின் செயல் என்பதை அறிவேன்.

🌷 சான்றோர்களிடத்து பணிவும் கொண்ட கடமையில் துணிவும் கடைபிடித்து வாழ்வில் என்றென்றும் வெற்றி பெறுவேன்.

 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை..*

மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார். அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். "ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது?' என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது. அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.
அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார். "ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே,'' என்றார்.
மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.
ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது. புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான்.
மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர் மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், ""இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு வாருங்கள்.'' என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான்.
ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது. புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை வேடிக்கைத் தான் பார்த்தனர்.
கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க எடுத்துப் போனான்.
மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம்
அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்வாங்கியது. ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை.
அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.
""அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!'' என்றார் அசோகர்.
இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை. இப்போது அசோக மன்னர் கூறினார்...
""பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர்
போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!
செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப் போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி!'' என்றார்.
தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்...
.
*நீதி: பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை...*



இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯ஆக.,6ல் துணை ஜனாதிபதி தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

🎯18 கி.மீ சுற்றிச் செல்லும் நிலை... திருவாளந்துறை - திருக்கல்பூண்டி மேம்பாலத்துக்கு காத்திருக்கும் கடலூர், பெரம்பலூர் மக்கள்

🎯பள்ளி வாகனங்களில் சிசிடிவி, சென்சார் கட்டாயம்: தமிழக அரசு அதிரடி

🎯விருப்ப ஓய்வில் செல்வோருக்கு புதிய வெயிட்டேஜ் அறிவிப்பு

🎯தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்தாலும் தீவிர கட்டுப்பாடுகள் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

🎯ரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் விழிப்புணர்வு: ரூ.4.75 கோடி ஒதுக்கீடு

🎯மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (எம்.பி.சி) சேர்க்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவிப்பு.

🎯குரூப் 1 முதன்மை தேர்வு முடிவு வெளியீடு

🎯ஆன்லைன் விளையாட்டுக்கு கூடுதல் வரி: முடிவை தள்ளி வைத்தது ஜிஎஸ்டி கவுன்சில்

🎯வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!

🎯விம்பிள்டன்  முதல் சுற்றிலேயே வெளியேறினார் செரீனா வில்லியம்ஸ்

🎯7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு




TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Lokpal gets 5,680 corruption complaints during 2021-22

🎯Vice-presidential election to be held on August 6, says Election Commission

🎯Supreme Court refuses to entertain pleas challenging validity of legal scheme for election of President

🎯GST Council defers tax on casinos, lottery

🎯VIT enters school education space, invests ₹100 crore in first phase

🎯Top official clueless on deductions from employees’ GPF accounts: union leader

🎯Delighted to receive approval for Covovax children in 7+ age group: Adar Poonawalla

🎯G7 is trying hard not to be yesterday’s club

🎯NATO leaders formally invite Finland, Sweden to join

🎯India successfully tests high-speed expendable aerial target ABHYAS

🎯Maharashtra political crisis Live Updates: Uddhav Thackeray resigns as Maharashtra CM shortly after SC refuses to stay tomorrow’s floor test

🎯SL vs AUS 1st Test: Australia 98/3 after Lyon mauls Sri Lanka

🎯Rohit Sharma ruled out of fifth Test against England after testing COVID-19 positive again

🎯Heavy monsoon clouds approach West Coast, East and North-West India






இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

1 comment:

  1. நன் முயற்சி. மனமார்ந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...