Thursday, June 23, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் (24/06/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் 

💮🦋 🦋 🦋 🦋 செயல்பாடுகள்🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 24/06/2022       வெள்ளிக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: நடுவுநிலைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
 கோடாமை    சான்றோர்க்கு அணி . 
                                                                                                                                                                        🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
முன்னே தான் சமமாக இருந்து பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
விடை  :  கங்கை.
 2. இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
விடை : ஹாக்கி                   
3. நமது தேசியக் கொடி நீளம் 12 அடி என்றால் அதன் அகலம் என்ன?
விடை : 8 அடி.
4. இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?
 விடை : 5 ஆண்டுகள்.
5. இந்திய பசுமைப் புரட்சியின் சிற்பி யார்?
விடை : M.S.சுவாமிநாதன்

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌸 Bring out the child strictly

🌸  அடித்து குழந்தையை வளர்

🌸 Beat after beat will make even a stone move

🌸 அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.    
                                            
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

உடைந்த பானை!  

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.


இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது


நீதி : அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த                         
                                                                                                                                                              வேலையையும் செய்ய முடியாது

இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 பி.இ , பி.டெக் 2 ஆம் ஆண்டில் சேர விண்ணப்பிக்கலாம் தொழில்நுட்ப இயக்கம் அறிவிப்பு.
 

🎯 புதிய கல்விக் கொள்கையில் பல நன்மைகள் அனைத்து மாநிலங்களும் பின்பற்ற புதுவை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல் 

🎯  தமிழகத்தில்  முதன் முறையாக திருச்சி பள்ளியில் 'காலை உணவு வங்கி ' தொடக்கம் 

🎯  தில்லிக்குள் 4 மாதங்கள் கனரக வாகனங்கள் செல்ல தடை 

🎯  தமிழகத்தில் கோவிட் : ஆயிரத்தைை தாண்டியது ஒரே நாளில் 1063 பேர் பாதிப்பு

🎯  வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

🎯  முதல் டி20: இலங்கையை வென்றது மகளிர் அணி



TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯India vs Leicestershire warm-up match: Brilliant KS Bharat saves India blushes on Day 1

🎯 Maharashtra launches drive to bring dropouts back to schools

🎯 Air India offers to re-hire pilots post retirement for 5 yrs

🎯  For the first time, English introduced from Class I in Gujarat’s government schools

🎯  Parents of Ukraine medical students a worried lot

🎯  SC dismisses plea to add in-service quota seats of NEET super speciality 2021 surrendered by Tamil Nadu

🎯 Inadequate classrooms, toilets at 110-year-old govt. girls’ school in Erode, a cause for concern









இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.
                                    


No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு