Monday, August 31, 2020
Friday, August 7, 2020
எது கெடும் என்பதற்கான பழமொழிகள்
எது கெடும் ?!?*_
01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும் கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
.....கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு!!!.
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Wednesday, August 5, 2020
பன்னிரு திருமுறைகள்
🌷🌷 *பன்னிரு திருமுறை* 🌷🌷
🌸 சைவ சமயத்தின் வேத நூல் பன்னிரு திருமுறை
🌸 பன்னிரண்டு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும். 🌸இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.
🌸 *முதலாம் திருமுறை* - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
🌸 *இரண்டாம் திருமுறை -* திருஞானசம்பந்தர் (தேவாரம்)
🌸 *மூன்றாம் திருமுறை -* திருஞானசம்பந்தர் (தேவாரம்)
🌸 *நான்காம் திருமுறை -* திருநாவுக்கரசர் (தேவாரம்)
🌸 *ஐந்தாம் திருமுறை -* திருநாவுக்கரசர் (தேவாரம்)
🌸 *ஆறாம் திருமுறை -* திருநாவுக்கரசர் (தேவாரம்)
🌸 *ஏழாம் திருமுறை -* சுந்தரர் (தேவாரம்)
*🌸 எட்டாம் திருமுறை -* மாணிக்கவாசகர்
திருவாசகம்
திருக்கோவையார்
*🌸ஒன்பதாம் திருமுறை:*
திருவிசைப்பா:
திருமாளிகைத் தேவர்
சேந்தனார்
கருவூர்த்தேவர்
பூந்துருத்தி நம்பிகாடநம்பி
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலியமுதனார்
புருடோத்தம நம்பி
சேதிராசர்
திருப்பல்லாண்டு
சேந்தனார்
🌸 *பத்தாம் திருமுறை:*
திருமந்திரம் - திருமூலர்
🌸 *பதினோராம் திருமுறை* (பதினோராம் திருமுறையில் உள்ள மொத்த நூல்கள் 40 ஆகும்).
*திருவாலவாய் உடையார் இயற்றியவை:*
திருமுகப் பாசுரம்
*காரைக்கால் அம்மையார் இயற்றியவை:*
திருவாலங்காட்டுத் திருப்பதிகம்
திரு இரட்டை மணிமாலை
அற்புதத்திருவந்தாதி
*ஐயடிகள் காடவர்கோன் நாயனார் இயற்றியவை:*
சேத்திர வெண்பா
*சேரமான் பெருமான் நாயனார் இயற்றியவை:*
பொன்வண்ணத்தந்தாதி
திருவாரூர் மும்மணிக்கோவை
திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா
*நக்கீர தேவ நாயனார் இயற்றியவை:*
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
திருஈங்கோய்மலை எழுபது
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
பெருந்தேவபாணி
கோபப் பிரசாதம்
கார் எட்டு
போற்றித்திருக்கலிவெண்பா
திருமுருகாற்றுப்படை
திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
*கல்லாடதேவ நாயனார் இயற்றியவை:*
திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
*கபிலதேவ நாயனார் இயற்றியவை:*
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
சிவபெருமான் திருஅந்தாதி
*பரணதேவ நாயனார் இயற்றியவை:*
சிவபெருமான் திருவந்தாதி
*இளம்பெருமான் அடிகள் இயற்றியவை:*
சிவபெருமான் மும்மணிக்கோவை
*அதிராவடிகள் இயற்றியவை:*
மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
*பட்டினத்துப் பிள்ளையார் இயற்றியவை:*
கோயில் நான்மணிமாலை
திருக்கழுமல மும்மணிக்கோவை
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
திருவேகம்பமுடையார் திருவந்தாதி
திருவொற்றியூர் ஒருபா ஒருபது
*நம்பியாண்டார் நம்பி இயற்றியவை:*
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
திருத்தொண்டர் திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை
🌸 *பன்னிரண்டாம் திருமுறை*
பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தமிழில் சைவ சமயத்தின் சாத்திரங்கள்
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.*
*திருவுந்தியார்* - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
*திருக்களிற்றுப்படியார்* - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
*சிவஞானபோதம்* - மெய்கண்ட தேவநாயனார்
*சிவஞான சித்தியார்* - திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்
*இருபா இருபஃது* - அருள்நந்திசிவாசாரியார்
*உண்மை விளக்கம்* - திருவதிகை மனவாசகங்கடந்தார்
*சிவப்பிரகாசம்* - உமாபதிசிவாசாரியார்
*திருவருட்பயன்* - உமாபதிசிவாசாரியார்
*வினாவெண்பா* - உமாபதிசிவாசாரியார்
*போற்றிப்பஃறொடை* - உமாபதிசிவாசாரியார்
*உண்மைநெறி* விளக்கம் - உமாபதிசிவாசாரியார்
*கொடிப்பாட்டு* - உமாபதிசிவாசாரியார்
*நெஞ்சுவிடுதூது* - உமாபதிசிவாசாரியார்
*சங்கற்ப நிராகரணம்* - உமாபதிசிவாசாரியார்
சைவ சமயத்தின் சிறப்புகளை விளக்கும் சாத்திர நூல்களை அறிவோம்.
நட்சத்திரத்திற்கும், ராசிக்கும், திருத்தலங்களுக்கும் உரிய மரத்தின் பெயர்கள்
27 நட்சத்திரங்களுக்கான மரங்கள்*:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
1. அஸ்வினி - எட்டி
2. பரணி - நெல்லி
3. கார்த்திகை - அத்தி
4. ரோகினி - நாவல்
5. மிருகசீரிடம்- கருங்காலி
6. திருவாதிரை - செஞ்சந்தனம்
7. புனர்பூசம் - மூங்கில்
8. பூசம் -அரசு
9. ஆயில்யம் - புன்னை
10. மகம் - ஆல்
11. பூரம் - பலா
12. உத்திரம் -அலரி
13. அஸ்தம் - வேலம்
14. சித்திரை -வில்வம்
15. ஸ்வாதி - மருது
16. விசாகம் - விழா
17. அனுஷம் - மகிழம்
18. கேட்டை - பிராயன்
19. மூலம் - மா
20. பூராடம் - வஞ்சி
21. உத்திராடம் - பலா
22. திருவோணம் - எருக்கு
23. அவிட்டம் - வன்னி
24. சதயம் - கடம்பு
25. பூரட்டாதி - கருமருது
26. உத்திரட்டாதி - வேம்பு
27. ரேவதி - இலுப்பை
27 நட்சத்திரங்களுக்கும் அதன் சிறப்புக் கருதி ஒவ்வொரு மரத்தை ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சிறப்பாக வைத்தார்கள். மரங்கள் மனித வாழ்க்கையோடு இணைந்தவையாகும். இறை நிலையின் வடிவமாக மரங்கள் கருதப்படுகின்றன. எனவேதான் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய மரங்களை அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வளர்த்தால் அதிகமான பலனை பெறுவர் என்பது மக்கள் நம்பிக்கையாக இருந்து வந்தது.
*12 ராசிகளுக்கான மரங்கள்:*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பிறந்த நட்சத்திரங்களுக்கென தனித்தனியே மரங்களை நிர்ணயித்து இருப்பது போலவே பிறந்த ராசிகளுக்கும் தனித்தனியாக மரங்களை வகைப்படுத்தி வைத்துள்ளார்கள்.
1. மேஷம் - செஞ்சந்தனம்
2. ரிஷபம் - ஏழிலைப்பாலை
3. மிதுனம் - பலா
4. கடகம் - முருக்கன்
5. சிம்மம் - பாதிரி
6. கன்னி - மா
7. துலாம் - மகிழம்
8. விருச்சிகம் - கருங்காலி
9. தனுசு - அரசு
10. மகரம் - தோதகத்தி
11. கும்பம் - பரம்பை
12. மீனம் - ஆலன்
*தல விருட்சங்கள் :*
இந்தியாவில் ஒவ்வொரு கோயில்களிலும் தலவிருட்சங்கள் பராமரிக்கப்படுகிறது. ஒரு சில கோயில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தல விருட்சங்களும் உள்ளன. கோயில்களில் உள்ள மூலவர் தெய்வங்களைப் பொறுத்து தல விருட்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவருக்கு ஏதாவது சிற்சில காரணங்களால் இடையூறு ஏற்பட்டு அர்ச்சனை வழிபாடு நடைபெறாத போது அந்த ஆலயத்தின் சக்தி முழுவதையும் தலவிருட்சம் ஏற்று கோயிலை சுற்றியுள்ள உயிரினங்களை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.
தலவிருட்சங்கள் எனப்படுபவை அந்தக் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பகுதியில் ஒரு காலகட்டத்தில் அதிகப்படியாக வளர்ந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
*முக்கியக் கோயில்களும் , அவற்றிற்குரிய தல விருட்சங்களும் :*
1. இராமேஸ்வரம், திருவையாறு - வில்வம்
2. விருதாச்சலம் - வன்னி
3. திருப்பனந்த நல்லூர், திருக்கோயிலூர் - சரக்கொன்றை
4. திருவெண்ணைநல்லூர், திருப்புலியூர் - புன்னை
5. குற்றாலம், கோட்டியூர் - குறும்பலா
6. காஞ்சிபுரம், திருச்சிரீ வரமங்கை - மா
7. திருவாடுதுறை, திருப்புள்ளானி - அரசு
8. திருவாலங்காடு, திருவில்லிபுத்தூர் - ஆல்
9. திருப்பனந்தாள், திருக்குருங்குடி - பனை
10. திருநாகேஸ்வரம் - திருச்சேரை - செண்பகம்
11. திருக்கழுக்குன்றம், திருக்கரம்பனூர் - வாழை
12. திருப்புங்கூர் - புங்கன்
13. திருப்பாதிரிபுலியூர், நாகப்பட்டினம் - பாதிரி
14. திருநாரையூர், திருவைகுண்டம் - பவழ மல்லிகை
15. திருக்கஞ்சானூர், திருப்பார்த்தன்பள்ளி - புரசு
16. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை - மகிழம்
17. திருஉத்திரகோசமங்கை - இலந்தை
18. நன்னிலம் - முன் இலவு
19. திருமுல்லைவாயில் - முல்லை
20. திருஉசாதானம் - மல்லிகை
21. திருக்கடையூர் - பெருமல்லிக்கொடி
22. திருநெல்வேலி - மூங்கில்
23. திருநெடுங்களம் - அலரி
24. திருச்செங்கோடு - இலுப்பை
25. மதுரை, திருக்கடம்பூர் - கடம்பு
26. திருச்செங்காட்டங்குடி - ஆத்தி
27. ஆவுடையார் கோயில் - காட்டு எலுமிச்சை
28. திருநெல்லிக்காய் - நெல்லி
29. கீழை திருக்காட்டுப்பள்ளி - பன்னீர் மரம்
30. திருமுருகன் , பூண்டி - குருக்கத்தி
31. திருவொற்றியூர் - அத்தி
32. சூரியனார் கோயில் - எருக்கு
33. திருவழுந்தூர் - சந்தனம்
34. திருச்சாய்க்காடு, அன்பில் - தாழை
35. திருக்கோடிக்கா - பிரம்பு
36. திருத்தெங்கூர் - தென்னை
37. திருவானைக்காவல் - நாவல்
38. திருஈங்கோய்மலை, திருக்குருகூர் - புளி
39. காளையார் கோயில் - மந்தாரை
40. திருவிடைமருதூர் - மருதம்
41. திருச்சேரை, திருநாட்டியத்தான்குடி - மாவிலங்கம்
42. வைத்தீஸ்வரன் கோயில் - வேம்பு
43. அழகர் கோயில் - அசோக்
44. திருக்காராயில் - அகில்
45. திருமணஞ்சேரி - ஊமத்தை
46. திருமாதரல் - எலுமிச்சை
47. திருக்குருக்கை வீரட்டம் - கடுக்காய்
48. திரு அமர் மாகாளர் - கருங்காலி
49. திருப்பரங்குன்றம் - கல்லத்தி
50. காரைக்காடு - காரை
51. திருக்கடைமுடி - பச்சைக்கிளுவை
52. திருக்கொட்டையூர் - ஆமணக்கு
53. திருச்சாய்க்காடு - கோரை
54. திருப்புனவாயில் - சதுரக்கன்னி
55. திருநள்ளாறு - தருப்பைப்புல்
56. சிதம்பரம் - தில்லை
57. திருக்குவளை - தேற்றான் கொட்டை
58. திருவெண்ணியூர் - நந்தியார் வட்டன்
59. திருப்பேரையூர் - நாரத்தை
60. திருநரையூர் -நொச்சில்
61. திருப்பராய்த்துறை -பிராயன் மரம்
62. திருப்பாலைத்துறை - வெட்பாலை
63. ஆலங்குடி - சிறு பூனை
64. கரூர் - சீந்தில்
65. திருவாழ்கொழிபுத்தூர் - வாகை
66. தக்கோலம் - வால்மிளகு
67. திருக்காராயில் - விளா
68. திருவிழ நகர் - விழல்
69. திருவிழிமிழலை - விழுதி
70. திருவேற்காடு - வௌவேல்.
எனவே மரங்களின் பெருமை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் மரங்களை பேணி பாதுகாப்போம்
தமிழின் சிறப்பு
அமுதவயல்: Tamil online test -1
அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு
-
தமிழ் திறனறி தேர்வு
-
பத்தாம் வகுப்பு , பாடம் தமிழ், இயல்-7 , மெய்க்கீர்த்திகள் ஒரு மதிப்பெண் திறனறி தேர்வு, Tamil online test -33
-
பத்தாம் வகுப்பு தமிழ் திறனறி தேர்வு