Friday, August 7, 2020

எது கெடும் என்பதற்கான பழமொழிகள்

 

எது கெடும் ?!?*_

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத  கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

.....கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு!!!.

💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Wednesday, August 5, 2020

பன்னிரு திருமுறைகள்

  🌷🌷 *பன்னிரு திருமுறை* 🌷🌷

🌸 சைவ சமயத்தின் வேத நூல் பன்னிரு திருமுறை

🌸 பன்னிரண்டு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும்.           🌸இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.

🌸 *முதலாம் திருமுறை* - திருஞானசம்பந்தர் (தேவாரம்)

🌸 *இரண்டாம் திருமுறை -* திருஞானசம்பந்தர் (தேவாரம்)

🌸 *மூன்றாம் திருமுறை -* திருஞானசம்பந்தர் (தேவாரம்)

🌸 *நான்காம் திருமுறை -* திருநாவுக்கரசர் (தேவாரம்)

🌸 *ஐந்தாம் திருமுறை -* திருநாவுக்கரசர் (தேவாரம்)

🌸 *ஆறாம் திருமுறை -* திருநாவுக்கரசர் (தேவாரம்)

🌸  *ஏழாம் திருமுறை -* சுந்தரர் (தேவாரம்)

*🌸 எட்டாம் திருமுறை -* மாணிக்கவாசகர்

திருவாசகம்

திருக்கோவையார்

*🌸ஒன்பதாம் திருமுறை:*

திருவிசைப்பா:

திருமாளிகைத் தேவர்

சேந்தனார்

கருவூர்த்தேவர்

பூந்துருத்தி நம்பிகாடநம்பி

கண்டராதித்தர்

வேணாட்டடிகள்

திருவாலியமுதனார்

புருடோத்தம நம்பி

சேதிராசர்

திருப்பல்லாண்டு

சேந்தனார்

🌸 *பத்தாம் திருமுறை:*

திருமந்திரம் - திருமூலர்

🌸 *பதினோராம் திருமுறை* (பதினோராம் திருமுறையில் உள்ள மொத்த நூல்கள் 40 ஆகும்).

*திருவாலவாய் உடையார் இயற்றியவை:*

திருமுகப் பாசுரம்

*காரைக்கால் அம்மையார் இயற்றியவை:*

திருவாலங்காட்டுத் திருப்பதிகம்

திரு இரட்டை மணிமாலை

அற்புதத்திருவந்தாதி

*ஐயடிகள் காடவர்கோன் நாயனார் இயற்றியவை:*

சேத்திர வெண்பா

*சேரமான் பெருமான் நாயனார் இயற்றியவை:*

பொன்வண்ணத்தந்தாதி

திருவாரூர் மும்மணிக்கோவை

திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா

*நக்கீர தேவ நாயனார் இயற்றியவை:*

கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி

திருஈங்கோய்மலை எழுபது

திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

பெருந்தேவபாணி

கோபப் பிரசாதம்

கார் எட்டு

போற்றித்திருக்கலிவெண்பா

திருமுருகாற்றுப்படை

திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

*கல்லாடதேவ நாயனார் இயற்றியவை:*

திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

*கபிலதேவ நாயனார் இயற்றியவை:*

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

சிவபெருமான் திருஅந்தாதி

*பரணதேவ நாயனார் இயற்றியவை:*

சிவபெருமான் திருவந்தாதி

*இளம்பெருமான் அடிகள் இயற்றியவை:*

சிவபெருமான் மும்மணிக்கோவை

*அதிராவடிகள் இயற்றியவை:*

மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை

*பட்டினத்துப் பிள்ளையார் இயற்றியவை:*

கோயில் நான்மணிமாலை

திருக்கழுமல மும்மணிக்கோவை

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

திருவேகம்பமுடையார் திருவந்தாதி

திருவொற்றியூர் ஒருபா ஒருபது

*நம்பியாண்டார் நம்பி இயற்றியவை:*

திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை

கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

திருத்தொண்டர் திருவந்தாதி

ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்

ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை

ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை

திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை

🌸  *பன்னிரண்டாம் திருமுறை*
பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

தமிழில் சைவ சமயத்தின் சாத்திரங்கள்

சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.*

*திருவுந்தியார்* - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்

*திருக்களிற்றுப்படியார்* - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்

*சிவஞானபோதம்* - மெய்கண்ட தேவநாயனார்

*சிவஞான சித்தியார்* - திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்

*இருபா இருபஃது* - அருள்நந்திசிவாசாரியார்

*உண்மை விளக்கம்* - திருவதிகை மனவாசகங்கடந்தார்

*சிவப்பிரகாசம்* - உமாபதிசிவாசாரியார்

*திருவருட்பயன்* - உமாபதிசிவாசாரியார்

*வினாவெண்பா* - உமாபதிசிவாசாரியார்

*போற்றிப்பஃறொடை* - உமாபதிசிவாசாரியார்

*உண்மைநெறி* விளக்கம் - உமாபதிசிவாசாரியார்

*கொடிப்பாட்டு* - உமாபதிசிவாசாரியார்

*நெஞ்சுவிடுதூது* - உமாபதிசிவாசாரியார்

*சங்கற்ப நிராகரணம்* - உமாபதிசிவாசாரியார்

சைவ சமயத்தின் சிறப்புகளை விளக்கும் சாத்திர நூல்களை அறிவோம்.

நட்சத்திரத்திற்கும், ராசிக்கும், திருத்தலங்களுக்கும் உரிய மரத்தின் பெயர்கள்

27 நட்சத்திரங்களுக்கான மரங்கள்*:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
1. அஸ்வினி  - எட்டி
2. பரணி         - நெல்லி
3. கார்த்திகை - அத்தி
4. ரோகினி      - நாவல்
5. மிருகசீரிடம்- கருங்காலி
6. திருவாதிரை - செஞ்சந்தனம்
7. புனர்பூசம் - மூங்கில்
8. பூசம்            -அரசு   
9. ஆயில்யம் - புன்னை
10. மகம்          - ஆல்
11. பூரம்           - பலா
12. உத்திரம்   -அலரி
13. அஸ்தம்     - வேலம்
14. சித்திரை  -வில்வம்
15. ஸ்வாதி    - மருது
16. விசாகம்    - விழா
17. அனுஷம்   - மகிழம்
18. கேட்டை      -  பிராயன்
19. மூலம்          - மா
20. பூராடம்        - வஞ்சி
21. உத்திராடம் - பலா
22. திருவோணம் - எருக்கு
23. அவிட்டம்     - வன்னி
24. சதயம்  - கடம்பு
25. பூரட்டாதி     - கருமருது
26. உத்திரட்டாதி - வேம்பு
27. ரேவதி              - இலுப்பை

27 நட்சத்திரங்களுக்கும் அதன் சிறப்புக் கருதி ஒவ்வொரு மரத்தை ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சிறப்பாக வைத்தார்கள். மரங்கள் மனித வாழ்க்கையோடு இணைந்தவையாகும். இறை நிலையின் வடிவமாக மரங்கள் கருதப்படுகின்றன. எனவேதான் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய மரங்களை அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வளர்த்தால் அதிகமான பலனை பெறுவர் என்பது மக்கள் நம்பிக்கையாக இருந்து வந்தது.

*12 ராசிகளுக்கான மரங்கள்:*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

பிறந்த நட்சத்திரங்களுக்கென தனித்தனியே மரங்களை நிர்ணயித்து இருப்பது போலவே பிறந்த ராசிகளுக்கும் தனித்தனியாக மரங்களை வகைப்படுத்தி வைத்துள்ளார்கள்.

1. மேஷம்   - செஞ்சந்தனம்
2. ரிஷபம்   - ஏழிலைப்பாலை
3. மிதுனம் - பலா
4. கடகம்     - முருக்கன்
5. சிம்மம்   - பாதிரி
6. கன்னி    - மா
7. துலாம்    - மகிழம்
8. விருச்சிகம் - கருங்காலி
9. தனுசு      - அரசு
10. மகரம்   - தோதகத்தி
11. கும்பம்  - பரம்பை
12. மீனம்    - ஆலன்

*தல விருட்சங்கள் :*

இந்தியாவில் ஒவ்வொரு கோயில்களிலும் தலவிருட்சங்கள் பராமரிக்கப்படுகிறது. ஒரு சில கோயில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தல விருட்சங்களும் உள்ளன. கோயில்களில் உள்ள மூலவர் தெய்வங்களைப் பொறுத்து தல விருட்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவருக்கு ஏதாவது சிற்சில காரணங்களால் இடையூறு ஏற்பட்டு அர்ச்சனை வழிபாடு நடைபெறாத போது அந்த ஆலயத்தின் சக்தி முழுவதையும் தலவிருட்சம் ஏற்று கோயிலை சுற்றியுள்ள உயிரினங்களை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.

     தலவிருட்சங்கள் எனப்படுபவை அந்தக் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பகுதியில் ஒரு காலகட்டத்தில் அதிகப்படியாக வளர்ந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

  *முக்கியக் கோயில்களும் , அவற்றிற்குரிய தல விருட்சங்களும் :*

1. இராமேஸ்வரம், திருவையாறு - வில்வம்
2. விருதாச்சலம் - வன்னி
3. திருப்பனந்த நல்லூர், திருக்கோயிலூர் - சரக்கொன்றை
4. திருவெண்ணைநல்லூர், திருப்புலியூர் - புன்னை
5. குற்றாலம், கோட்டியூர் - குறும்பலா
6. காஞ்சிபுரம், திருச்சிரீ வரமங்கை - மா
7. திருவாடுதுறை, திருப்புள்ளானி - அரசு
8. திருவாலங்காடு, திருவில்லிபுத்தூர் - ஆல்
9. திருப்பனந்தாள், திருக்குருங்குடி - பனை
10. திருநாகேஸ்வரம் - திருச்சேரை - செண்பகம்
11. திருக்கழுக்குன்றம், திருக்கரம்பனூர் - வாழை
12. திருப்புங்கூர் - புங்கன்
13. திருப்பாதிரிபுலியூர், நாகப்பட்டினம் - பாதிரி
14. திருநாரையூர், திருவைகுண்டம்  - பவழ மல்லிகை
15. திருக்கஞ்சானூர், திருப்பார்த்தன்பள்ளி - புரசு
16. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை - மகிழம்
17. திருஉத்திரகோசமங்கை - இலந்தை
18. நன்னிலம் - முன் இலவு
19. திருமுல்லைவாயில் - முல்லை
20. திருஉசாதானம் - மல்லிகை
21. திருக்கடையூர் - பெருமல்லிக்கொடி
22. திருநெல்வேலி - மூங்கில்
23. திருநெடுங்களம் - அலரி
24. திருச்செங்கோடு - இலுப்பை
25. மதுரை, திருக்கடம்பூர் - கடம்பு
26. திருச்செங்காட்டங்குடி - ஆத்தி
27. ஆவுடையார் கோயில் - காட்டு எலுமிச்சை
28. திருநெல்லிக்காய் - நெல்லி
29. கீழை திருக்காட்டுப்பள்ளி - பன்னீர் மரம்
30. திருமுருகன் , பூண்டி - குருக்கத்தி
31. திருவொற்றியூர் - அத்தி
32. சூரியனார் கோயில் - எருக்கு
33. திருவழுந்தூர் - சந்தனம்
34. திருச்சாய்க்காடு, அன்பில் - தாழை
35. திருக்கோடிக்கா - பிரம்பு
36. திருத்தெங்கூர் - தென்னை
37. திருவானைக்காவல் - நாவல்
38. திருஈங்கோய்மலை, திருக்குருகூர் - புளி
39. காளையார் கோயில் - மந்தாரை
40. திருவிடைமருதூர் - மருதம்
41. திருச்சேரை, திருநாட்டியத்தான்குடி - மாவிலங்கம்
42. வைத்தீஸ்வரன் கோயில் - வேம்பு
43. அழகர் கோயில் - அசோக்
44. திருக்காராயில் - அகில்
45. திருமணஞ்சேரி - ஊமத்தை
46. திருமாதரல் - எலுமிச்சை
47. திருக்குருக்கை வீரட்டம் - கடுக்காய்
48. திரு அமர் மாகாளர் - கருங்காலி
49. திருப்பரங்குன்றம் - கல்லத்தி
50. காரைக்காடு - காரை
51. திருக்கடைமுடி - பச்சைக்கிளுவை
52. திருக்கொட்டையூர் - ஆமணக்கு
53. திருச்சாய்க்காடு - கோரை
54. திருப்புனவாயில் - சதுரக்கன்னி
55. திருநள்ளாறு - தருப்பைப்புல்
56. சிதம்பரம் - தில்லை
57. திருக்குவளை - தேற்றான் கொட்டை
58. திருவெண்ணியூர் - நந்தியார் வட்டன்
59. திருப்பேரையூர் - நாரத்தை
60. திருநரையூர் -நொச்சில்
61. திருப்பராய்த்துறை -பிராயன் மரம்
62. திருப்பாலைத்துறை - வெட்பாலை
63. ஆலங்குடி - சிறு பூனை
64. கரூர் - சீந்தில்
65. திருவாழ்கொழிபுத்தூர் - வாகை
66. தக்கோலம் - வால்மிளகு
67. திருக்காராயில் - விளா
68. திருவிழ நகர் - விழல்
69. திருவிழிமிழலை - விழுதி
70. திருவேற்காடு - வௌவேல்.

  எனவே மரங்களின் பெருமை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் மரங்களை பேணி பாதுகாப்போம் ‌


தமிழின் சிறப்பு

இது தான் தமிழ் ! 

அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..
பெயர்களையாவது படித்து அறிவோம்..
1. தேவாரம் 
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா 
5. திருப்பாவை 
6. திருவெம்பாவை 
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி 
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.நற்றிணை 
2.குறுந்தொகை 
3.ஐங்குறுநூறு 
4.அகநானூறு 
5.புறநானூறு 
6.பதிற்றுப்பத்து 
7.பரிபாடல் 
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 
5.முல்லைப்பாட்டு 
6.மதுரைக்காஞ்சி 
7.நெடுநல்வாடை 
8.குறிஞ்சிப் பாட்டு 
9.பட்டினப்பாலை 
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள் 
2.நாலடியார் 
3.நான்மணிக்கடிகை 
4.இன்னாநாற்பது 
5.இனியவை நாற்பது 
6.கார் நாற்பது 
7.களவழி நாற்பது 
8.ஐந்திணை ஐம்பது 
9.திணைமொழி ஐம்பது 
10.ஐந்திணை எழுபது 
11.திணைமாலை       நூற்றைம்பது 
12.திரிகடுகம் 
13.ஆசாரக்கோவை 
14.பழமொழி 
15.சிறுபஞ்சமூலம் 
16.முதுமொழிக் காஞ்சி 
17.ஏலாதி 
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம் 
2.மணிமேகலை 
3.சீவக சிந்தாமணி 
4. வளையாபதி 
5. குண்டலகேசி 
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.அகத்தியம்  
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை 
4.நன்னூல் 
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.முத்தொள்ளாயிரம் 
2.முக்கூடற்பள்ளு 
3.நந்திக்கலம்பகம் 
4.கலிங்கத்துப்பரணி 
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை 
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 
3.பொதுமைப் பண்புகள் 
4.நடுவுநிலைமை 
5.தாய்மைத் தன்மை 
6.கலை பண்பாட்டுத் தன்மை 
7.தனித்து இயங்கும் தன்மை 
8.இலக்கிய இலக்கண வளம் 
9.கலை இலக்கியத் தன்மை 
10.உயர் சிந்தனை 
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

சமய குரவர்கள்
----------------------------

1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்

சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்

12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
............
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிவப்பிரகாசர்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
.............
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்

மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சித்தர்கள்: பதினெண் சித்தர்:

1. திருமூலர்   
2. இராமதேவர் 
3. கும்பமுனி 
4. இடைக்காடர்
5. தன்வந்திரி  
6. வான்மீகி
7. கமலமுனி 
8. போகநாதர் 
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி, 
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல்.  

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி 
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40.பால சித்தர்
41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
42. நவநாதர் 
(அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. 
வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
43. அஷ்ட வசுக்கள்
44. சப்த ரிஷிகள்.

இப்படிச்  சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது.  கிடைத்தவை இவைமட்டுமே.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய ப்ரியமான மொழி எம் தாய்மொழி தமிழ்..!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது...
பெருமை கொள்வோம் தமிழரென்று...


அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு